துடிப்போடதாண்டா பாயும்
ஜீவா நாராயணன்
அழுத்துப் புரண்ட நாடு
இப்ப எழுந்து நிக்கப்போது
எதிர்த்து நின்ற தலைவர்களெல்லாம்
இனி தெருவில் நிற்கத்தாண்டாபோது
உறங்கி கிடந்த விழிகள்
இன்று விடியல் காணப்போது
இனி எதிரி கூட்டமெல்லாம்
உறக்கம் இழக்க போது
இழக்க இழக்க தானே
எல்லாம் இழந்து நின்னாச்சி
அட கோமணத்தையும் தாண்டா
தலைநகரில் இழக்க வேண்டியதாச்சி
உழுது புரண்ட தேகம்
இன்று அழுது புலம்பலாச்சி
கண்ணீர் புரண்டு ஓடி
மண்ணும் கண்ணும் வறட்சியாகிப்போச்சி
மலையை தாண்ட உடைச்சி
என் முப்பாட்டன் மண்ணாக்கினாண்டா
அந்த மண்ணை உழுதுதானாடா
என் பட்டன் வளமாக்கினாண்டா
அந்த வளமான காட்டை
எங்க அப்பன் காப்பதினாண்ட
அதை களவாட நியும்வந்த
உன் கைகால்கள் இடம்மாறிப்போகும்
இது எங்கள் பிடிவாதமாகும்
நாங்க உலகையாண்ட ராஜராஜன் இரத்தம்
கொஞ்சம் துடிப்போடதாண்டா பாயும்