படக்கவிதைப் போட்டி (158)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
மோகன்தாஸ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (28.04.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
காவிரி விளக்கு!!
???????
இயற்கையது ஏற்றி வைத்த
மணல் விளக்காம் காவிரியில்
நெய்யாகநீர் நெடுக ஓடி வர
எரிந்து வந்த வெளிச்சத்தினால்
இதுவரைக்கும்உயிர்வளர்த்தோம்!
இப்போது வந்த தீர்ப்பதினால்
ஏதோ கொஞ்சம் நிம்மதியுற்றோம்!
நந்தாசுடராக அணையாமலிருந்து
காத்ததுபோல் இனி எப்போதும்
தப்பாமல் காக்குமென நம்பியபின்
மேலாண்மை அமைத்திடாமல்
இழுத்தடிக்கும் போக்கதினால்
ஐந்துதிரிகளிலும் பிரகாசம் தந்த
ஐமுக தீவெளிச்சம் குறைகின்ற
ஐயம் …நம்நெஞ்சில் கவலைதந்து
போராட்டக்களம் புகுந்து விட்டோம்!!
ஆனாலும் இதுவரைக்கும்எந்தவித
ஆதாயமும் கிடைக்கின்ற சூழ்நிலை
அகப்படாமல் ஆளாய்பறக்கின்றோம்!
துறைதோறும் வளர்ந்திட்டாலும்
குறைவந்து குடிதண்ணீருக்குக்கூட
இறைஞ்சும்நிலைஏற்பட்டிருப்பதினால்
இனிநம் எதிர்காலம் இனித்திடுமா??
எழுவோம்!!ஏற்றியதீபம்காப்போம்..!!!
??????????????
ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி…
பவானி….ஈரோடு….
9442637264…….
Email..armurugan666@gmai.com
???????????????
காவிரி விளக்கு!!
???????
இயற்கையது ஏற்றி வைத்த
மணல் விளக்காம் காவிரியில்
நெய்யாகநீர் நெடுக ஓடி வர
எரிந்து வந்த வெளிச்சத்தினால்
இதுவரைக்கும்உயிர்வளர்த்தோம்!
இப்போது வந்த தீர்ப்பதினால்
ஏதோ கொஞ்சம் நிம்மதியுற்றோம்!
நந்தாசுடராக அணையாமலிருந்து
காத்ததுபோல் இனி எப்போதும்
தப்பாமல் காக்குமென நம்பியபின்
மேலாண்மை அமைத்திடாமல்
இழுத்தடிக்கும் போக்கதினால்
ஐந்துதிரிகளிலும் பிரகாசம் தந்த
ஐமுக தீவெளிச்சம் குறைகின்ற
ஐயம் …நம்நெஞ்சில் கவலைதந்து
போராட்டக்களம் புகுந்து விட்டோம்!!
ஆனாலும் இதுவரைக்கும்எந்தவித
ஆதாயமும் கிடைக்கின்ற சூழ்நிலை
அகப்படாமல் ஆளாய்பறக்கின்றோம்!
துறைதோறும் வளர்ந்திட்டாலும்
குறைவந்து குடிதண்ணீருக்குக்கூட
இறைஞ்சும்நிலைஏற்பட்டிருப்பதினால்
இனிநம் எதிர்காலம் இனித்திடுமா??
எழுவோம்!!ஏற்றியதீபம்காப்போம்..!!!
??????????????
ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி…
பவானி….ஈரோடு….
9442637264…….
Email..armurugan666@gmai.com
???????????????
வாழ்த்தும் விளக்கு…
குத்து விளக்கின் ஒளியினிலே
கல்வி கற்ற பெரியோர்முன்,
குத்து விளக்காம் மணமகளின்
குடும்பம் போற்றும் மணவிழாவில்,
தத்துவப் பொருளாய் ஒளிதந்திடும்
தன்மை கொண்ட விளக்கதுவும்,
நித்தம் வாழ மணமக்களை
நிறைவாய் வாழ்த்திடும் பந்தலிலே…!
செண்பக ஜெகதீசன்…
குத்துவிளக்கேற்றித் தொடங்கிய விழா..!
===============================
பத்துபேர் கூடுமிடத்தில் பந்தலும் மேடையும்
……….பார்த்துப் பார்த்துப் போடப் பட்டிருக்குமாம்..!
கொத்துக் கொத்தாய் மலர்கள் தொங்குமாம்
……….கூடியிருப்போரெலாம் மகிழ்ந்தே தோன்றுவர்..!
பொத்தாம் பொதுவாக அதுவோர் விழாவாம்
……….பகட்டுக்கு அங்கே பஞ்சமில்லை என்றாலும்..!
குத்துவிளக்கொன்று அங்கே ஏத்தா விட்டால்
……….கொண்டாட்டத் திற்கங்கே என்ன மதிப்பாம்..!
எத்துணை விழாக்கள் அமைத்தாலும் அவை
……….எல்லாவற்றுக்கும் மேலே ஒருமேடை தேவை..!
ஒத்துழைப்பு அங்கே இல்லாவிட்டால் மேடை
……….ஒன்றுக்கும் உதவாத செயல் போலாகிவிடும்..!
அத்துணை பேரும் விழிவைத்துக் காக்கவே
……….அனைவருக்கு மொரு தலைவரும் வருவார்..!
புத்தாடை உடுத்திய புதுத் தோரணையோடு
……….குத்துவிளக் கேற்றியதைத் துவக்கி வைப்பார்..!
சித்திரப் பூப்போலேச் சிரிக்கின்ற சிங்காரிகள்
……….சீராக சப்தஒலி எழுப்பியே கைதட்டுவார்கள்..!
மத்தியில் நிற்பவரைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டு
……….மலர்க் கொத்தைக் கொடுத்தபின் வாழ்த்துவர்..!
முத்திரை பதிப்பதுபோல் அனைவரும் தம்
……….முத்தான வாழ்த்தை யெலாமங்கே உதிர்ப்பார்..!
வித்தகராமவர் மனிதரில் மாணிக்க மென்றும்
……….வித்தியாசம் இல்லாத வரென்றும் முழங்குவர்..!
தீபம்
ஆதியும் அந்தமும் காணவியலா ஒளிப்பிழம்பினுள்
ஆண்டவனும் ஆதவனும்,
அவனி மாந்தரின் அறியாமை இருளகற்றும் ஒளியாக
அவதாரமும் ஆன்றோரும்,
புறஉலகை அறியும் காட்சியும் ஜோதியாலே…….
அகவுணர்வின் தரிசனமும் ஜோதியாலே………
விளக்கின் ஒளியில் பேதமில்லை
விளக்கம் புரிந்தால் மோதலில்லை
எந்த வடிவ விளக்கானாலும்
நெய்யும் திரியும் இணைந்தே ஒளிரும்
ஒருமித்த நிலையில் ஒளிரும் ஜோதி
நீ அறியவே விளக்கிடும் விளக்கு,
வடிவத்தில் இல்லை ஒளியின் கூர்மை
வைக்கும் இடத்திலும் இல்லை ஒளியின் கூர்மை
ஏற்றும் கரத்திலும் இல்லை ஒளியின் கூர்மை
ஏற்றத்தாழ்விலாமை போதிப்பதே ஒளியின் மேன்மை,
ஐந்து முகமும் ஒளியின் தீட்சண்யம்
ஐந்தின் ஒளியேற்றலில் சாத்திர விதிகளாம்,
ஒன்றாம் முகத்தில் நினைத்த காரியம் கைகூடுமாம்
இரண்டாம் முகத்தில் குடும்ப ஒற்றுமை ஓங்குமாம்
மூன்றாம் முகத்தில் புத்திர விருத்தி கிட்டுமாம்
நான்காம் முகத்தில் சர்வபீடை நிவர்த்தியாம்
ஐந்தாம் முகத்தில் ஐஸ்வர்யம் கூட சகலமும் கை கூட
சாத்திர சூத்திரம் ஒளியின் பலனை ஓதுவது போல
ஐம்புலனையும் ஆறாம் அறிவால் ஒளியூட்டிடு
ஒவ்வொரு புலனும் இருண்மை கிழிக்கட்டும்
ஒளியாய் புலனைப் பட்டை தீட்டிடு
உன்னுள் எரியும் உள்ளொளி கண்டிடு
ஆன்ம தரினத்தால் அமைதி கொண்டிடு
பாத்தியன்ன தாழி ஊற்றம், கருதுகள் பொழிந்த பொன்னொளி தீர்த்தம்
மத்தியன்ன நெடிது பாயும் பஞ்சுத் திரியின் பிணை வரிப்படிவம்
கத்தியன்ன கூர்முனை பணிந்து நடுநாயகமாய் நல்லொளிச் சிரசம்
சுத்தியன்ன சுடரொளி ஏற்கும் பஞ்சமுகத்தின் பட்டொளிக்கிரணம்
ஒத்தியன்ன ஒழுங்கு செய்து நேர்த்தி விளைக்கும் நல்லுடல் தண்டம்
நெத்தியன்ன தெங்கு சுமக்கும் பசுங்குடை வார்த்தத் தங்கக் குடலம்
ஆத்தியன்ன வெண்ணீர்க்கலயம், மஞ்சள் சொரிந்த மற்றொரு கலயம்
பத்தியன்ன மறைமுறைபோற்றலில் தெண்ணீரேந்திய திரள்கால் பாத்திரம்
சத்தியன்ன ஓதனம் சாற்றும் கதலி இலையிலோர் நல்லணிச் சேற்றம்
முத்தியன்ன முழுமுனை ஏற்றம்! மோனவரப்பில் மங்கலத் தோற்றம்!
எத்தியன்ன அளவு அறிந்து போகம் காக்கும் நல்லெழில் போதகம்!
குத்துவிளக்கெனும் இறைவடிவம்…
-ஆ. செந்தில் குமார்.
தங்கநிறப் பதுமையென விளங்குகின்ற விளக்கு..
மங்களங்கள் நிறைவேறச் செய்கின்ற விளக்கு..
எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளின் வடிவாய்..
மங்கையர் பூச்சொரிந்து வழிபடுகின்ற விளக்கு…!
அங்கத்தின் உச்சியில் கலசமொன் றிருக்கும்..
அகல்போன்ற அமைப்பில் ஐந்துமுகம் இருக்கும்..
அடிபாகப்பீடம் அலர்ந்த தாமரை போன்றிருக்கும்…
அழகிய வோர் தண்டு இவையிரண்டையும் இணைக்கும்…!
அடியிடைநுனியெனும் பாகங்கள் முத்தொழில் புரிந்திடும் தேவர்கள்..
அகலெனும் அமைப்பின் தீபங்கள் நமதுடற்கூறின் ஐம்புலன்கள்..
பஞ்சுத்திரியே கலைமகளாம் பரவுமொளியே அலைமகளாம்..
நெஞ்சத்தினுள்ளே ஒளிவடிவாய் இருக்குமுருவே இத்திருவிளக்காம்…!