தொழிலாளர் தினம்
ரா.பார்த்தசாரதி
கடவுள் எனும் முதலாளி, கண்டு எடுத்த விவசாயி எனும் தொழிலாளி
வீதியை சுத்தம் செய்யும் துப்புரவாளர் எனும் தொழிலாளி
பூங்காவை சுத்தம் செய்யும் தோட்டக்காரன் எனும் தொழிலாளி
சொல்லை வைத்து விளையாடும் கவிஞ்சன் எனும் தொழிலாளி !
உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
வீணில் உண்டு களிப்போரை நிந்தனை செய்வோம்
ஏரோட்டம் , நின்றால் , இங்கு காரோட்டம் நிற்கும்
விவசாயின் இறக்கம் , நாட்டில் ஏற்படும் கலக்கம் !
துப்புரவாளர்கள் நாட்டின் சுத்தத்திற்காக பாடுபடுகின்றான்
பூந்தோட்ட தோட்டக்காரன் பூங்காவை அழகுற செய்கின்றான்
அநீதிகள் நடப்பதை கவிஞ்சர்கள் எடுத்துரைக்க மறுக்கின்றான்
ஆள்பவர்களும்,,அரசியல்வாதிகளும், தன்னையே காத்துக்கொள்கிறான்!
தாய்தந்தையர், பட்ட கடனுக்கு பிள்ளைகள் கொத்தடிமை
பலமணி நேரம் வேலை, படிப்பதற்கு நேரமில்லா நிலைமை
தீ பெட்டி , பட்டாசு தொழிலில் சிறுவர்கள் கடன்பட்ட கொத்தடிமைகள்
இன்றும் தீர்க்கப்படாத அடிமைபட்டு கல்வியறிவு இல்லா சிறுவர்கள் !
வியர்வினாலே மேனி கரைந்து வெயிலாலே முகம் கறுத்து
பசியாலே பலமும் குறைந்து, கேள்வி குறிபோல் முதுகு வளைந்து,
துயரமடைந்த கொத்தடிமைகள் இருக்கும்போது சந்தோஷ நாள் ஏது ?
தொழிலாளர்களின் மதிப்பை உணர்ந்து நலம்பெற செய்வது யாரு?
தொழிலாளியின் மதிப்பினை கார்ல் மார்க்ஸ் எடுத்துரைத்தான்
இன்றைய முதலாளிகள் அதனை கவலையின்றி மறுத்துரைத்தான்
பேருக்காக தொழிலாளர் தினம் நாட்டில் கொண்டாடப்படுகின்றதே
தொழிலாளர்களை அடிமையாக முதலாளி மனம் நினைக்குதே !
உலகை ஆளும் உழைக்கும் கரங்களே, ஒன்று கூடுங்களே
இந்த நாடு முழுதும் மலரவேண்டும் புரட்சி மலர்களே !
அடிமை எனும் மடமையை நீக்கி, உரிமையை நிலைநாட்டுங்கள்
தொழிலாளர் தினத்தை எண்ணியாவது வளம்பெற நினைத்திடுங்கள் !