ரா.பார்த்தசாரதி

 

கடவுள் எனும் முதலாளி,  கண்டு எடுத்த விவசாயி எனும்  தொழிலாளி

வீதியை சுத்தம் செய்யும்   துப்புரவாளர்  எனும்  தொழிலாளி

பூங்காவை சுத்தம் செய்யும் தோட்டக்காரன் எனும் தொழிலாளி

சொல்லை வைத்து விளையாடும் கவிஞ்சன் எனும் தொழிலாளி !

உழவுக்கும், தொழிலுக்கும்  வந்தனை செய்வோம்

வீணில் உண்டு  களிப்போரை நிந்தனை செய்வோம்

ஏரோட்டம் , நின்றால் , இங்கு காரோட்டம்  நிற்கும்

விவசாயின் இறக்கம் , நாட்டில்  ஏற்படும்  கலக்கம்  !

துப்புரவாளர்கள் நாட்டின் சுத்தத்திற்காக பாடுபடுகின்றான்

பூந்தோட்ட தோட்டக்காரன் பூங்காவை அழகுற செய்கின்றான்

அநீதிகள் நடப்பதை கவிஞ்சர்கள் எடுத்துரைக்க மறுக்கின்றான்

ஆள்பவர்களும்,,அரசியல்வாதிகளும், தன்னையே காத்துக்கொள்கிறான்!

தாய்தந்தையர், பட்ட கடனுக்கு பிள்ளைகள் கொத்தடிமை

பலமணி நேரம் வேலை, படிப்பதற்கு நேரமில்லா  நிலைமை

தீ பெட்டி , பட்டாசு தொழிலில்  சிறுவர்கள் கடன்பட்ட  கொத்தடிமைகள்

இன்றும் தீர்க்கப்படாத அடிமைபட்டு கல்வியறிவு இல்லா சிறுவர்கள் !

 

வியர்வினாலே  மேனி கரைந்து வெயிலாலே முகம் கறுத்து

பசியாலே பலமும் குறைந்து, கேள்வி குறிபோல் முதுகு வளைந்து,

துயரமடைந்த  கொத்தடிமைகள் இருக்கும்போது சந்தோஷ நாள் ஏது ?

தொழிலாளர்களின்  மதிப்பை உணர்ந்து நலம்பெற செய்வது யாரு?

தொழிலாளியின்  மதிப்பினை கார்ல் மார்க்ஸ் எடுத்துரைத்தான்

இன்றைய முதலாளிகள் அதனை கவலையின்றி  மறுத்துரைத்தான்

பேருக்காக தொழிலாளர் தினம் நாட்டில் கொண்டாடப்படுகின்றதே

தொழிலாளர்களை  அடிமையாக முதலாளி மனம் நினைக்குதே !

உலகை ஆளும் உழைக்கும் கரங்களே, ஒன்று கூடுங்களே

இந்த நாடு முழுதும் மலரவேண்டும் புரட்சி மலர்களே !

அடிமை எனும் மடமையை நீக்கி, உரிமையை நிலைநாட்டுங்கள்

தொழிலாளர்  தினத்தை எண்ணியாவது வளம்பெற நினைத்திடுங்கள்  !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *