-சி. ஜெயபாரதன், கனடா

இல்லத்தில் அம்மாதான் ராணி!
ஆயினும்
எல்லோருக்கும் அவள் சேவகி!
வீட்டுக் கோட்டைக்குள்
அத்தனை ஆண்களும் ராஜா!
அம்மாதான் வேலைக்காரி!
அனைவருக்கும் பணிவிடை செய்து
படுத்துறங்க மணி
பத்தாகி விடும்!
 

நித்தமும்
பின்தூங்குவாள் இரவில்!
சேவல் கூவ
முன்னெழுவாள் தினமும்!
அம்மாவைத் தேடாத
ஆத்மாவே இல்லை வீட்டில்!
அம்மா இல்லா விட்டால்
கடிகாரத்தின் முட்கள்
நின்று விடும்!
 

எந்தப் பிள்ளைக்கும் அவள்
பந்தத் தாய்!
பால் கொடுப்பாள்
பாப்பாவுக்கு!
முதுகு தேய்ப்பாள்
அப்பாவுக்கு!
சமையல் அறைதான்
அவளது ஆலயம்!
இனிதாய் உணவு சமைத்துப்
பரிமாறி
எனக்கு மட்டும் வாயில்
ஊட்டுவாள்!
 

வேலையில் மூழ்கி
வேர்வையில் குளிப்பாள்!
எப்போ தாவது அடி வாங்குவாள்
அப்பாவிடம்!
தப்பாது மிதி வாங்குவாள்
மூத்த தமயனிடம்!
காசு கேட்டுக்
கையை முறிப்பான்
கடைசித் தம்பி!
கடன்காரன் வாசலில் திட்டுவான்!
கலங்கும்
கண்ணீரைத் துடைப்பது
கனலும் காற்றும்!
 

இல்லத் தரசி தாரமாய்
வந்த பிறகு,
செல்லத் தா​ய் வேண்டாத​
தொல்லைப் பிறவி!
​தாயிக்கும் தந்தைக்கும்
​சேய்கள் தரும்
​ஆயுள் தண்டனை
​ஓய்ந்து உய்வோர் இல்லம்​​​!

ஓய்வைக் கொடுப்பது
தாயிக்கு
நோயும் வலியும்;
ஆயினும் சோறு பொங்கும்
அடுப்பினில்!
ஆயுளை நீடிக்க வைப்பது
தாயுள்ளம்!
வாழும் போது எவராலும்
வணங்கப் படாது,
செத்த பிறகு
தெய்வ மாகிறாள்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *