என்றும் என் இதயத்தில்
என்னருகில் நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலதே
உன்னருகில் நான் இருந்தால் உன் இதயம் சிறகடுக்குதே
காதல் இதுதானோ உன் கண் விழிப் பார்வையிலே
என் இதயம் துடிக்காதோ உன் மோகன புன்னகையிலே !
காதலுக்கு தேவை கனிவான பார்வையே
இருவிழிகள் சந்திப்பின் காந்த பார்வையே
இரு இதயங்கள் சேர்ந்து இணையம் சுகமே
இரு மனங்கள் ஒரு மனமாய் திகழ்ந்திடுமே !
காதலியே, நீ என் இதயவானில் ஓர் வெண்ணிலா
உன் அழகை எண்ணி பாடுவேன் கவிதை உலா
உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதினிலே
இன்பம் எனும் சுவர்க்கம் தோன்றிடும் வாசலிலே !
நான் சந்திரன் என்றால் நீ மலர்ந்திடும் அல்லிப் பூ
நான் இமை என்றால் நீ என் கண்
நான் உடல் என்றால் நீ என் உயிர்.
நான் பேச்சு என்றால் நீ என் மூச்சு .
காதல் எனும் மொழி பேச வருவேன் உன் வாசலுக்கே
விழி நிறைய நீர் சுமந்து வழி நனைய உன்னை காண்பதற்கே
உன்னை நான் பார்க்கும்போது நான் ஊமையாகின்றேன்
உன்னை சிறை வைப்பேன் என்றும் என் இதயத்தில் !
ரா.பார்த்தசாரதி