என்றும் என் இதயத்தில்

0

 

 

என்னருகில் நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலதே

உன்னருகில் நான் இருந்தால் உன் இதயம் சிறகடுக்குதே

காதல் இதுதானோ உன் கண் விழிப் பார்வையிலே

என் இதயம் துடிக்காதோ உன் மோகன புன்னகையிலே !

காதலுக்கு தேவை கனிவான பார்வையே

இருவிழிகள் சந்திப்பின் காந்த பார்வையே

இரு இதயங்கள் சேர்ந்து இணையம் சுகமே

இரு மனங்கள் ஒரு மனமாய் திகழ்ந்திடுமே !

காதலியே, நீ என் இதயவானில் ஓர் வெண்ணிலா

உன் அழகை எண்ணி பாடுவேன் கவிதை உலா

உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதினிலே

இன்பம் எனும் சுவர்க்கம் தோன்றிடும் வாசலிலே !

நான் சந்திரன் என்றால் நீ மலர்ந்திடும் அல்லிப் பூ

நான் இமை என்றால் நீ என் கண்

நான் உடல் என்றால் நீ என் உயிர்.

நான் பேச்சு என்றால் நீ என் மூச்சு .

காதல் எனும் மொழி பேச வருவேன் உன் வாசலுக்கே

விழி நிறைய நீர் சுமந்து வழி நனைய உன்னை காண்பதற்கே

உன்னை நான் பார்க்கும்போது நான் ஊமையாகின்றேன்

உன்னை சிறை வைப்பேன் என்றும் என் இதயத்தில் !

ரா.பார்த்தசாரதி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *