தமிழக அரசின் நுண்புலன் திறனற்ற நிலை

0

சேசாத்திரி பாஸ்கர்

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு தமிழக அரசின் நுண்புலன் திறனற்ற நிலையைக் காட்டுகிறது. போராட்டம் உச்ச நிலையை எட்டிய நிலையில் காவல்துறை சுதாரித்துக் கொண்டு நிலையை கட்டுக்குள் கொண்டு வரத் தவறியது பெரும் தவறு . இரண்டு சாமானியன் சண்டையிட்டுக் கொள்ளும்போது உணர்ச்சி மேலோங்கி வன்முறை நிகழலாம் . ஆனால் காவல் துறையினர் சட்டென உணர்ச்சி வசப்பட்டு பதிலுக்குப் பதில் வன்மத்தில் இறங்கியது கொடூரம் .போரட்டக்காரர்கள் அந்நிய நாட்டை சேர்ந்தவர்களா என்ன ? இராணுவத்தில் தான் எதிரி சுடப்பட்டு கீழே வீழ்ந்து மடிய வேண்டும் என்ற நியதி உண்டு . இவர்கள் எல்லோரும் மண்ணின் மைந்தர்கள் .இவர்கள் கோபத்தில் எடுத்த ஆயுதம் கற்களும் பாட்டில்களும் தான் . சில இடங்களில் பெட்ரோல் குண்டு . அவர்கள் செய்ததை ஞாயப்படுத்தவில்லை .அவர்களைச் சமாளிப்பது பெரிய காரியமில்லை என எல்லோருக்கும் தெரியும் . ஆனாலும் உணர்ச்சி மேலோங்கி காவல்துறை இயங்கியது மிகத் தவறு. ஒரு வன்முறை கூட்டத்தில் முதல் பிரயோகம் தடியடி .அதுவும் கால்களில் தான் நிகழ்த்த வேண்டும் . மிஞ்சிப் போனால் பிருஷ்டத்தில் அடிக்கலாம்சே. வன்முறையைக் கட்டுப்படுத்தச் செய்ய வேண்டிய முதல் பாடம் இது . அப்போதும் கூட்டம் கலையவில்லையெனில் டியர் காஸ் என சொல்லப்படும் கண்ணீர் புகைக்குண்டை பிரயோகம் செய்ய வேண்டும் . இதில் பெரும்பாலும் கூட்டம் கலைந்து விடும் . அல்லது பலகீனம் ஆகி விடும் . இதுவும் செய்து வன்முறை அடங்கவில்லை எனில் தான் துப்பாக்கிச் சூட்டை பிரயோகம் செய்ய வேண்டும் . அப்போது கூட ஒலி பெருக்கியில் அறிவித்து விட்டு அதனைச் செய்ய வேண்டும் . அப்படிச் சுடும்போது கூட கால்களை நோக்கித் தான் சுட வேண்டும் . இதை எந்தச் சூழலிலும் கடை பிடிக்க வேண்டிய நிர்பந்தம் காவலர்க்கு என்றும் உண்டு . கலவர பூமியில் இதை எல்லாம் பற்றி அவர்கள கவலைப்படவில்லை . ஒரு பெரிய அதிகாரிகளின் படை இருந்திருப்பின் ஒரு வழிகாட்டுதல் இருந்து இருக்கும் . இதை எல்லாம் காற்றில் பறக்க விட்டு வன்முறையை கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு என்று யார் காதில் பூ சுற்றுகிறார்கள் ? கால்களை நோக்கிச் சுட வேண்டிய காவலர்கள் ஏன் வண்டியின் மேல் நின்று குறி பார்க்கிறார்கள் ? தீய சக்தியும், எதிர்கட்சிகளும் செய்த சதியெனில் அந்த மாப்பிள்ளை இளைஞன் என்ன நக்சல்பாரியா? வாயில் சுடப்பட்டு இறந்த அந்த இளம் பெண் எந்த கட்சி ? மற்ற எல்லா நேரத்திலும் காவல்துறை எல்லா நிகழ்வுகளிலும் அங்கு பொருத்தப்பட்டு உள்ள காமிராப் பதிவை ஆராயுமே ? அதை ஏன் செய்ய முனையவில்லை ? முடிவுக்கு வந்து கொண்டிருந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும் சரி, ஆலையின் நூறு நாள் போராட்ட நிகழ்விலும் சரி காவல்துறை சகிக்காமல் செய்த ஒரு காரியம் தான் இந்த எதிர் வினை. எனக்கு என்னவோ இந்த காவல் வன்முறைக்கும் அந்த ஆலைக்கும் சம்பந்தம் இருக்கும் எனத் தோன்றுகிறது .இல்லாவிட்டால் சுமார் அஞ்சாயிரம் கூடிய கூட்டத்தைக் கூட சமாளிக்க முடியாத அளவுக்கா காவல்துறை பலகீனமாக இருக்கிறது ?இந்த வன்முறையை நினைத்துப் பார்க்கும் போது ஒரு வேளை இதே மனப்பான்மை தான் அவர்களுக்கு ஜல்லிக்கட்டிலும் இருந்திருக்கக் கூடும் என நினைக்கத் தோன்றுகிறது. அதிகாரிகளை மாற்றினால் சம்பவம் மறந்தா போய்விடும் . ஒன்று நிச்சயம் .இந்த அரசின் காவல்துறை க்ஷீன நிலையை எட்டி நாளாகி விட்டது . இவர்களுக்குத் தங்க வீடு , சீருடை தொகை, அதிகாரம் , போக்குவரத்துக்கான வண்டி, இவர்களின் ஷூக்களுக்கு பாலிஷ் தொகை எனப் பெரிய கௌரவம் கொடுத்தும் கூட இவர்கள் மக்கள் நண்பர்களாக இன்னும் மாற முடியவில்லை. Tamilnadu has Become a state of Police Raj.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *