மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++++

காரிருளில் நள்ளிரவில்
ஒளிந்து பாடிக் கொண்டிருக்கிறது
ஓரிளம் கருங்குயில் !

முறிந்து கிடக்கும் சிறகுகளைச்
சேர்த்து நீ
பறக்கப் பயின்றிடு !

பிறந்த பின்பு
இத்தருண வரவுக்குத் தான் நீ
காத்திருந்தாய் !

கருங்குயில்
காரிருளில் பாடிக் கொண்டுள்ளது.
கிடக்கும் விழிகளை
எடுத்துக் கொள்,
கூர்ந்து நோக்கப் பயின்றிடு !

இத்துணைக் காலம்
இந்த விடுதலைக் குத்தான் நீ
காத்திருந்தாய் !

பறந்து போ கருங்குயிலே !
பறந்து போ !

காரிருள் வழியே நடந்து
வெளிச்சத் துக்குள்
நுழைவோம் !

இத்தருண விடுதலைக் குத்தான் நீ
காத்திருந்தாய் !

பறந்து போ கருங்குயிலே !
பறந்து போ !

++++++++++++

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *