180616 -Balanarasimha and Prahlada lr

வாமனனாய் வந்தார், வடிவில் சிறுத்(து)அரி,
பூமன(பிரகலாத ஸ்வாமி) பக்திக்(குட்)உட் பட்டதால்: -கோமண
சோணை ரமணமுனி சொன்னது பக்திமனத்
தூணில் ஒளியும் துரும்பு(அங்குஷ்டாப்யாம்)….!

ஏந்தி இலக்குமியை யோக நரசிம்மமாய்
சாந்தி தவழ்கின்ற சிங்கத்தை -மாந்தி
திளைப்போர் வினைத்தூண் இளைத்து துரும்பாய்
களைத்தல் கதையின் கருத்து….!

கொச்சு பிரகலாதன் கொஞ்சு மழலையில்
உச்சரிக்க நாமம் உரத்(து)அப்போ -உச்சி
குளிர்ந்தவன் மேனியைக் கட்டிடும், சிங்கம்
மெலிந்துகர் ஜிக்க மியாவ்….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *