நிறுத்திச் சொன்னால் பாசம் தெரியும்
அழுத்திச் சொன்னால் அர்த்தம் அறியும்
மெதுவாய்ச் சொன்னால் கடினம் புரியும்
பணிவாய்ச் சொன்னால் கருணை விரியும்
கத்திச் சொன்னால் தனிமை தணியும்
கதறிச் சொன்னால் விலகல் சரியும்
நீட்டிச் சொன்னால் காரியம் முடியும்
காட்டிச் சொன்னால் கல்லும் கரையும்
பாடிச் சொன்னால் அன்பின் குளிர்ச்சி
வாடிச் சொன்னால் அருளின் வளர்ச்சி
அணைத்துச் சொன்னால் அதுவே உணர்ச்சி
அடுக்கிச் சொன்னால் எதுவோ கிளர்ச்சி
அப்பா என்றால் அப்பாலில்லை
அப்பாடி எனில் அடிப்பாரில்லை
அப்பா தெய்வம் இப்பாரிட்டால்
எப்போதும் பயம் இல்லை இல்லை
சொல்லிப் பாருங்கள் இதுபோல் இன்று
பொருளைக் காண்பீர் அனுபவம் கொண்டு.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *