தாயும் குழந்தையும்
மண்ணுக்கு மரம் பாரமாகுமா,
மரத்திற்கு கிளை பாரமாகுமா,
கொடிக்கு காய் பாரமாகுமா
குழந்தை தாய்க்கு பாரமாகுமா
பிழைப்பிற்காக குழந்தையை
தோளை தூளியாக்கிச் சுமந்து
வயிற்று பிழைப்பிற்காக தினம்
சுமந்து செல்லும் மலைஜாதிப்
பெண்ணே !
உடலில் வலுவும், நெஞ்சில் துணிவுடன்
உழைத்து பிள்ளையை காப்பாற்று
கல்வியை புகட்டி, அறிவினை பெருக்கி
நல்லறிஞ்சனாய் வளர்ப்பாயாக
இன்று உன் நிழலில் உன் பிள்ளை
நாளை அவன் மடியில் உன் தலை
அவனே உன்னை தாங்கும் தூண் !
என எண்ணி செயலாற்று !
ரா.பார்த்தசாரதி