மண்ணுக்கு மரம் பாரமாகுமா, 
மரத்திற்கு  கிளை பாரமாகுமா, 
கொடிக்கு  காய் பாரமாகுமா 
குழந்தை தாய்க்கு பாரமாகுமா 
பிழைப்பிற்காக குழந்தையை 
தோளை தூளியாக்கிச் சுமந்து 
வயிற்று பிழைப்பிற்காக தினம் 
சுமந்து செல்லும் மலைஜாதிப் 
பெண்ணே !
உடலில் வலுவும், நெஞ்சில் துணிவுடன் 
உழைத்து பிள்ளையை காப்பாற்று 
கல்வியை புகட்டி, அறிவினை பெருக்கி 
நல்லறிஞ்சனாய்  வளர்ப்பாயாக 
இன்று உன் நிழலில் உன் பிள்ளை 
நாளை அவன் மடியில் உன் தலை 
அவனே உன்னை தாங்கும்  தூண் !
என எண்ணி செயலாற்று !

ரா.பார்த்தசாரதி 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *