தச மஹாவித்யா யாகம் நடைபெற்றது

0

தன்வந்திரி பீடத்தில்

தச மஹாவித்யா யாகம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 08.07.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தச மஹாவித்யா ஜபம் மற்றும் ஹோமம் நடைபெற்றது.

தசமகா வித்யா தேவியர்கள்:

பெண்மையின் சக்தியை தாய்மை முதல் சம்ஹாரம் வரை உணர்த்துபவர்கள் இந்த தேவியர்கள். இவர்களே ஸ்ரீசாக்த மார்க்கத்தின் ஆதிதேவியர்கள் ஆவார்கள். மேலும் மஹாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களின் போது இந்த தேவியர்கள் ஒவ்வொருவரும்தான் ஆதார சக்தியாக இருந்தார்கள் என்று ‘முண்டமாலா தந்திரம்’ என்ற நூல் கூறுகிறது. காளி, தாரா, ஸ்ரீவித்யா, புவனேஸ்வரி, பைரவி, ஸ்ரீ சின்னமஸ்தா, ஸ்ரீ தூமாவதி, ஸ்ரீ பகளாமுகி, ஸ்ரீ ராஜமாதங்கி, ஸ்ரீ கமலாத்மிகா என்ற பத்து தேவியர்கள்தான் தசமகா வித்யா தேவியர் என்று அழைக்கப்படுகின்றனர்.

பக்தர்கள் இத்தேவியர்களை வழிபட்டு பலனடைய வேண்டி ஒவ்வொரு தேவியருக்கும் தனித்தனியாக பீடம் அமைத்து கலச ஸ்தாபனம் செய்து மேற்கண்ட 10 தேவியர்களுக்கும் 16 வேத விற்பனர்கள் பங்கேற்று 1000 முறை ஜபம் செய்து ஹோமங்கள் நடைபெற்றது. இதில் தச மஹா தேவியர்களுக்குரிய புஷ்பங்கள், பஷங்கள், நிவேதனங்கள், திரவியங்கள் சேர்க்கப்பட்டு மஹாமேரு மற்றும் காயத்ரி தேவிக்கு 10 விதமான அபிஷேக திரவியங்கள் கொண்டு மஹா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நவாவர்ண பூஜையும், மஹா தீபாராதனையும் நடைபெற்றது. பங்கேற்ற பக்தர்களுக்கு மஹா பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்ட்து. இதில் வாலாஜாபேட்டை லாவண்யா மருத்துவ மனை நிர்வாகி டாக்டர் தொப்பகவுண்டர், திரு. கோபிநாத் தொப்பகவுண்டர் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதனை தொடர்ந்து இராகு காலத்தை முன்னிட்டு, இராகு கேது ப்ரீதி ஹோமமும், சர்பசாந்தி ஹோமமும் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *