கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
பூதனை தான்யசோதை பூமிக்குத் தாய்ப்பாலை
போதனை செய்யப் பிறந்தபிரான்: -தீதான
நஞ்சுண்ண பேய்ச்சி நகிலுண்ட கண்ணபிரான்
அஞ்சலென்று மோக்ஷம் அளிப்பு….!
பல்லில்லா பாலகன் என்றெண்ணி பூதனை
கொல்லவந்த கண்ணனைக் கண்டதும் -இல்லம்
புகுந்து முலைதிணித்துப் பார்த்திட வாய்க்குள்
முகுந்தனுக்கு முப்பத்தி மூணூ(நமக்கெல்லாம் 32)….!
முலைகனத் தாயை அலைக்கழிய விட்டு
கொலைகுண பூதனை கொங்கை -மலைசுவைத்தாய்
அந்நஞ்சைப் பாம்பின்மேல் ஆடி ஜெரித்தவன்பால்
நன்நெஞ்சே நிற்பாய் நினைந்து….கிரேசி மோகன்….!
’’தூங்க வருகவே’’….!
———————————————————-
பூதனை நச்சுப் பாலொடு அவளின்
வேதனை தீரக் குடித்துக் களைத்தவன்
சீதரன், கோமளன், ஸ்யாமளன், என்னுளத்
தீதினை விரட்டித் தூங்க வருகவே….!