பாடல்: கிரேசி மோகனின் “தாயுமானவர் திருப்புகழ்” – சங்கர சங்கர சம்போ 
இசை: குரு கல்யாண் 
============================================================

சங்கர சங்கர சம்போ சிவ சங்கர சங்கர சங்கர சம்போ

சாதாரணன் போல வந்தான் -ஏதும்
ஓதாமல் சில நேரம் சும்மா இருந்தான்
வேதா ரண்யம் ஊர் என்றான் -இதில்
சூதில்லை அம்மகாதேவன் தான் என்றான்….(1)

உண்டென்று ஒன்றுண்டு கேளாய் -அதை
உண்டு நான் உமிழ்கிறேன் ஒவ்வொரு நாளாய்
விண்டவர் கண்டிலர் கண்டாய் -அதைக்
கண்டு நீ கொண்டாட காட்சிகள் உண்டாய்….(2)

பதி பசு பாசங்கள் மூன்றும் -முறையே
விதி மதி வினை என்ற விவகாரமாகும்
நிதி உந்தன் நெஞ்சிலே காண்பாய் -அது
புதிதல்ல மணம்வீசும் பூத்த மலரான்மா….(3)புதிரான பூலோகக் கல்லை -நீ
பொய்யென்றும் மெய்யென்றும் பேரிடத் தொல்லை
அதுவென்றும் இதுவென்றும் இல்லை -சுத்த
அதுவே இதுவாக ஆனந்த எல்லை….(4)
 பண்டைநாள் வந்ததோர் பூச்சி -அது
 பலவாய்ப் பெருகிடப் பாரென்று ஆச்சி
 கொண்டதோர் கோலமே காட்சி -அதை
 உண்டில்லை கண்டிடும் உறுதி ஆராய்ச்சி….(5)
செத்ததோர் பாம்பிந்த தேகம் -சுக
 துக்கமிதில் காண்பது செல்லாத லாபம்
 அத்தைக்கு மீசைமேல் மோகம் -அத்தை
 சித்தப்பன் பார்த்திட சிரைத்திடும் யோகம்….(6)
 வேடனார் வேடத்தில் இறைவன் -அவனே
 விருந்தாகி நீயுண்ண வலைவீசும் இரைவன்
 பாடெல்லாம் அவனென்று பறைவாய் -ஜீவ
 பாவத்தில் பசுபாசம் மெழுகாகக் கரைவாய்….(7) 
பார்முதல் பூதம்நீ அல்ல -பஞ்ச
 புலன்களை ஆண்டிட முயலாதே வெல்ல
 யாரந்த நானென்று உள்ளே -உன்னிப்
 பாரவன் ஆன்மனாய் ஆகுவான் மெல்ல….(8)
 அன்பே சிவமென்ற ஜோதி -அதன்
 ஆதார சக்தியே அருளென்ற பாதி
 பண்பான பக்தர்கள் மீதி -இந்தப்
 பாங்குணர்ந் தோற்க்கில்லை பூலோக வ்யாதி….(9)
போக்கத்த சொப்பனம் நனவு -ஆழ்ந்த
தூக்கத்தில் நிற்பவன் யாரென்று வினவு
சாக்கிதால் சஞ்சலம் தீரும் -ரமண
வாக்கிதை மேற்கொள்ள வழிவந்து சேரும்….(10)
இறப்பதும் பிறப்பதும் யாரு -இங்கு
இருக்கையில் ஆராய்ந்து யோசித்துப் பாரு
உறக்கமே இறப்பென்ற மாயை -உணர
உறங்காமல் உறங்கிடப் போடான்மப் பாயை….(11)
நம்பிக்கை அறிவாக நீளும் -அவ
நம்பிக்கை அறியாமை அதுகுப்பைக் கூளம்
எம்பிக்கை போடட்டும் தாளம் -ஆன்ம
ஏகாந்த வாசியின் ஏற்றமே மூலம்….(12)இல்லாத இகம்சொப்ப னங்கள் -அதில்
இன்பத்தைத் துய்ப்போர்கள் இருள்பெற்ற மாக்கள்
உள்ளது ஓராயி ரங்கள் -உதறி
உணர்ந்திடு உணர்வென்னும் உச்சிப் பனங்கள்….(13)

சும்மா இருந்திடல் சுகமே -என்று
சொன்னார்கள் முன்னோர்கள் சிவமாகு அகமே
நம்மால் இயன்றது நகமே -அது
நாளாக நாளாக நம்பிக்கை முகமே….(14)….13-3
துன்மார்கப் பாதையில் துன்பம் -அந்த
சன்மார்கமே சச்சிதா னந்த இன்பம்
தென்மார்கம் பார்த்திடும் அன்பன் -மவுன
தத்துவம் தோள்கொடுத் தேவுதவும் நண்பன்….(15)ஓயாது துழைத்திடும் பெண்மை -சக்தி
ஓங்கார நாதத்தின் ரீங்காரத் தன்மை
தாயாகி அன்பர்க்கு நன்மை -நல்கும்
தத்துவம் அவளந்த பித்தர்க்கும் அம்மை….(16)

போகாத ஊருக்கு போக -இங்கு
சாகாது சாகிறோம் ஜனனித்து நோக
தேகான்ம பாவம் முடிக்க -சிவ
தேசிகன் சரணார விந்தம் பிடிக்க….(17)
செல்லாதா காசிந்த மேனி -இது
இல்லாத போதுமி ருப்பவன் ஞானி
கல்லாலின் கீழுற்ற கோலம் -அது
சொல்லாமல் காட்டிடும் சித்தாந்த ஜாலம்….(18)
சூலாயுதம் கொண்ட கையை -சக்தி
வேலாயுதன் வந்த விழிகர்ப்பப் பையை
ஆலால கண்டத்து மெய்யை -எண்ண
அதுநெஞ்சில் ஊற்றிடும் ஆனந்த நெய்யை….(20)
பொன்னார் மேனியன் இடையில் -வரிப்
புலித்தோல் பூண்டவன் ஏறுவான் விடையில்
உன்னார்வம் அவனெதிர் பார்ப்பான் -கொள்ள
உண்ணா முலையோடு வந்தருள் சேர்ப்பான்….(21)
சங்கர சங்கர சம்போ சிவ சங்கர சங்கர சங்கர சம்போ….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *