கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
திருதராஷ்ட்ரன் சஞ்ஜயன்சொல் தோல்வியைக் கேட்டு
திருதிரு ராட்ஷஸனாய் துக்கம்: -கருயிதன்
காரணம் க்ருஷ்ணையின்(திரெளபதி) கேள்வன்(அகமுடையான்) குறிதப்பா
வீரனாம் பார்த்தனின் வில்….கிரேசி மோகன்….!
அந்தக மன்னன் அறிவுசால் மந்திரி
சஞ்சயன் கண்டதைக் கேட்டனன் -வெஞ்சமரில்
கூடிநின்று பாண்டவர் கூடா கெளரவரை
சாடியது கேட்டுஉளச் சோர்வு….கிரேசி மோகன்….!