180814 – Mahabharatha -Dhritarashtra and Sanjaya -wcol charcoal Strathmore 160 gsm 100dpi lr

திருதராஷ்ட்ரன் சஞ்ஜயன்சொல் தோல்வியைக் கேட்டு
திருதிரு ராட்ஷஸனாய் துக்கம்: -கருயிதன்
காரணம் க்ருஷ்ணையின்(திரெளபதி) கேள்வன்(அகமுடையான்) குறிதப்பா
வீரனாம் பார்த்தனின் வில்….கிரேசி மோகன்….!

அந்தக மன்னன் அறிவுசால் மந்திரி
சஞ்சயன் கண்டதைக் கேட்டனன் -வெஞ்சமரில்
கூடிநின்று பாண்டவர் கூடா கெளரவரை
சாடியது கேட்டுஉளச் சோர்வு….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *