இம்முறை வெண்பா அல்ல…கட்டுரை….!


மன்னிக்க…..சென்றமுறை கேசவ் அனுப்பிய சூறைக் காற்று அசுரனை, சகடாசுரன் என்று தப்பாக எண்ணி வெண்பா எழுதிவிட்டேன்…பிள்ளைப் (கண்ணன்)பிராயச் சித்தமாய் கட்டுரை…. மீண்டும் கேசவ் கண்ணா மன்னிக்க…. இது பற்றிய ஆய்வில் ‘’டோங்க்ரே மஹராஜின்’’ பாகவத தஸம ஸ்கந்தம் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது…. நன்றி கேசவ்…. கண்ணனின் கோபம் சக்கிர அசுரன்(சகடாசுரன்) மீதல்ல…. கண்ணனே சங்கூதும் சக்கிரத்தான்(சுதர்ஸனம்) அல்லவா….

’’எனக்காக இவ்வளவு கோலாகலமாக உத்ஸவம் (கிருஷ்ண ஜனனம்) நடக்கும்போது…. என் தாயார் எங்கே!’’ வண்டிக்கு அடியில் பாலகிருஷ்ணன் நினைக்கிறான்…. தினசரி செயல்களை (நித்ய கர்மாக்கள்) விடவேண்டியதில்லை…. அவற்றிலேயே மூழ்கி பகவானை மறந்து விடக் கூடாது… யசோதை ஸ்ரீ கிருஷ்ணனை மறந்த நாளில் ஆபத்து வந்தது…. கம்ஸன் அனுப்பிய சகடாசுரன் ரூபத்தில்…. ஆக கண்ணனின் கோபம் ‘’தன்னை வண்டிக்கடியில் தூங்க விட்ட தாயார் (யசோதையார்) மீது…. அந்தக் கோவத்தை சகடாசுரன் மீது கண்ணன் காண்பித்தார்… உதைத்தார் சகடனை…. வான்முகடில் அவனை உதைத்துக் கொன்றார்….

சில பல லஷ்ஷத்திற்காக லஷ்யத்தை மறந்து விடாதீர்கள்…. நாம் ஸ்ரீ கிருஷ்ணனை (லஷ்யம்) அடைந்தே (வழி கேசவ் வண்ணம், கிரேசி எண்ணம் (வெண்பா), பக்தி) தீரவேண்டும் (டோங்க்ரே மஹராஜ்)….. டைப் அடித்து விரல் வலிக்கிறது…. வாசிக்கவும் டோங்க்ரேமஹராஜ் பாகவதம்….!

‘’பீலிபெய் (பீலிமயில் கண்ணன்) சாகாடும் (சாகடிப்பான்) அச்சுஇறும் (சகடாசுரன் அச்சை ஒடித்து) அப்பண்டம் (பரம்பொருள்)
சால (கம்ஸனால் அனுப்பப்பட்ட) மிகுத்துப் (அளவுக்கு மீறிய) பெயின் (கம்ஸனால் இம்ஸைக்கு உள்ளான கண்ணனின் PAIN)”….’’வண்டியில் அளவுக்கு மீறிய, இலேசான மயிற்பீலியும் அச்சை உடைத்து விடும்’’….. வாகாகக் கிடைத்த வள்ளுவர்…. அளவுக்கு மீறினால் (கம்ஸன்போல்) அமிர்தமும் (அமுதன் கண்ணன்) விஷம்…. கற்கண்டும் காலன்(கம்ஸன் உயிருக்கு பீலிமயில் கண்ணன்)… குறள் வாசிக்க வைத்ததற்கு நன்றி கேசவ் …..!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *