பதவி இழந்தோய்ந்த பிள்ளைகள் சார்பாய்
அதிதியன்னை கேட்டாள் அரியின் -உதவியை.
பூணும் தவம்கண்டு பூரித்து வாமனனாய்
ஓணத்தில் சேயாய் உதிப்பு….!

சேணம் பிடித்தைவர் சேனை ஜெயித்திட
வானத்து வைகுண்டம் விட்டகன்ற -ஓணத்தன்
வாத புரீசன் வடமதுரா மன்னவன்
கீதகோ விந்தந்தாள் காப்பு….!

களித்தெமுனா தீரத்தில் கோபியர் சூழ
குளித்தவர் காமத்தைக் கொன்று -அளித்தனன்
ஞானத்தை; அந்தநந்த நீலத்தை நாம்வணங்கி
ஓணத்தில் கொள்வோம் உவப்பு….!

வானத்தை மண்ணை வரமாய் பலிதந்த
தானத்தை அன்றளந்த தெய்வத்தை -ஓணத்து
வாமனக் குட்டனை வாத புரீசனை
நீமனக் கட்டில் நிறுத்து….!கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *