இந்த வார வல்லமையாளராக வானியல் விஞ்ஞானி ஜாசிலின் பர்னல் அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. பல்ஸார் (Pulsar) என்னும் வேகமாகச் சுழல்கிற இறந்துபட்ட நட்சத்திரங்களை முதன்முதலில் கண்டறிந்தவர் பேரா. பர்னல். அவர் மாணவராக இருக்கும்போது நடந்த கண்டுபிடிப்பு ஆனதால், அவரது பேராசிரியர் ஹ்யுயிஷ் நோபல் பரிசை வென்றார்.
இப்போது 3 மில்லியன் $ பரிசான Special Breakthrough Prize ஜாஷ் பர்னலுக்கு அளிக்கப்பட்டுள்ளது. முழுப் பரிசுத் தொகையையும் பெண்கள் பௌதீகவியலில் ஆராய்ச்சி செய்ய வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். இப்பரிசைப் பெறும் முதல் பெண்மணி ஜாஸ்லின் பர்னல் ஆவார். இவர்க்கு முன்னர் ஸ்டீபன் ஹாக்கிங், ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்புக் குழு, ஈர்ப்புவிசை அலைகள் (Gravity waves) கண்டறிந்தோருக்கு இந்த பிரேக்துரோ பரிசில் வழங்கப்பட்டது.
(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 )
முனைவர் நா. கணேசன் ஹூஸ்டன் மாநகரில் 30 ஆண்டுகளாக விண்வெளி இயங்கியல் (Space Dynamics) பொறியாளராகப் பணியாற்றுகிறார். இணையம் தொடங்கிய நாளிலிருந்து தமிழ், இந்தியாவின் வரலாற்றில் திராவிட மொழிகளைப் பேசுவோரின் பங்கு, சிந்து சமவெளியும் தமிழர்களும், சொல்லாய்வுகள் பற்றி எழுதிவருகிறார். அமெரிக்காவில் பேரா. ஹார்ட் அமைத்த பெர்க்கிலி தமிழிருக்கை அமைய உதவியவர். தற்போது ஹூஸ்டன் பல்கலையில் 6 மில்லியன் டாலரில் நிரந்தரமான தமிழிருக்கை அமைக்கும் குழுவின் பொருளாளர், யூனிக்கோடு குறியேற்றம் தமிழுக்கு கணினி, இணையம், செல்பேசிகளில் அமைய உழைத்தவர். ’எழுத்து என்பது ஒரு கருவி. பொருளாதாரம், பணிகள் போன்றன நெருங்கிவரும் இந்தியாவில், ரோமன்/ஆங்கில எழுத்தில் இந்திய மொழிகள் எழுதும்முறை (ISO 15919) பரவலாக வேண்டும். அரசியல், உணர்ச்சி என்பதற்கும் மேலாக, இந்தியமொழிகளுக்கு இடையே உள்ள உறவுகளை அறிய இம்முறை உதவும். அப்போது, இந்தி எழுத்தைத் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் திணிக்கும் தேவை இல்லாமல் போய்விடும். ’India as a Linguistic Area’ எனும் பேரா. எமனோவின் கோட்பாட்டை ரோமன் இலிபி துணையாக இந்திய அரசாங்கம் ஏற்பது நாட்டுவளர்ச்சிக்கு உதவும்’ என்ற கொள்கையுடையவர். உசாத்துணை: http://muelangovan.blogspot.com/2008/06/blog-post_29.html
வல்லமையாளர் வானியல் விஞ்ஞானி ஜாசிலின் பர்னல் அவர்களுக்கு வாழ்த்துகள். இயற்பியல் ஆய்வில் ஈடுபடும் பெண்களுக்குத் தம் பரிசுத் தொகை முழுவதையும் அறிவித்திருப்பது, போற்றத் தகுந்தது. இது, பெண்களை ஊக்குவிக்கும். ஆய்வுகள் பெருகி, மேலும் மேலும் இத்தகைய புதிய கண்டுபிடிப்புகள் உருவாக, மகளிர் உழைப்பாராக.
வல்லமையாளர் வானியல் விஞ்ஞானி ஜாசிலின் பர்னல் அவர்களுக்கு வாழ்த்துகள். இயற்பியல் ஆய்வில் ஈடுபடும் பெண்களுக்குத் தம் பரிசுத் தொகை முழுவதையும் அறிவித்திருப்பது, போற்றத் தகுந்தது. இது, பெண்களை ஊக்குவிக்கும். ஆய்வுகள் பெருகி, மேலும் மேலும் இத்தகைய புதிய கண்டுபிடிப்புகள் உருவாக, மகளிர் உழைப்பாராக.