சூழல்
- Wednesday, October 10, 2018, 12:55
- இலக்கியம், கவிதைகள்
- Add a comment
கவிஞர் பூராம்
தூரலொடு கூடிய பெருமழை
கூட்ட நெரிச்சலில்
அவளுக்கருகில் அவன்
விரும்புவதில்லை இதுபோன்ற
நெருக்கத்தை
அவளின் பரிசம் அவனை
விலக மறுத்தது
அவளின் தேவையும் நிராகரிக்க மனமில்லாத
மனதோடு அவனும்
உடல்கள் உரசலில் இனம்புரியாத இன்பத்துடன்
பயணத்தின் நடுவே
சூழல் கண்காணிப்பின்
அருவருப்பும் அவளின் புரிதலும்
இன்பமெல்லாம் அடி வனத்திற்கு அப்பால்
சிறிய அவமானத்துடன்
அவள் நினைவோடு
கடந்து செல்லும் காற்று.