(மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா)

கல்வியொடு செல்வம் தரவேண்டும் தாயே
கசடில்லா வீரம் தந்திடுவாய் தாயே
உள்ளமெலாம் உண்மை உறையச் செய்வாய்தாயே
உன்னையென்றும் மறவா வரமருள்வாய் தாயே

மாசுடையார் தொடர்பை மடியச்  செய்வாய்தாயே
மனமதிலே கருணை  வளரச்  செய்வாய்தாயே
தானதர்மம் செய்ய  தயைபுரிவாய்  தாயே
தர்மவழி  செல்ல  தக்கதுணை  நீயே

ஈனநிலை  போக  எனக்கருள்வாய்  தாயே
என்றும் உயர்வாக எண்ணமெனக் கருள்வாய்
ஊனமுடை   எண்ணம்  உதிக்காவண்ணம் எனக்கு
உனது கடைக்கண்ணால் எனைநோக்கு தாயே

இப்புவியில்  நானும்  ஏழ்மையுற்றை போதும்
தப்பிதங்கள்   செய்யா  தடுத்துவிடு  தாயே
எப்பவுமே வாழ்வில் என்றுமுன்னை  மறவா
முப்பொழுதும் நினைக்க முழுவருளைத் தாநீ

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *