ஒரு கதையை நடத்திச் செல்ல இருவர் வேண்டும்….PROTAGONIST & ANTAGONIST…..மேலும் PROTAGANISTஐ ANTOGANIST டுக்குஅடையாளம் காட்ட ஒருவரோ இல்லை ஒருத்தியோ வேண்டும்….பாகவதத்தில் PROTAGANIST கண்ணன்தான், ANTOGANIST கம்ஸன்தான்….. அன்றுANTOGANIST கம்ஸன் கைநழுவி ஆவேசமாய் ஆகாஸம் சென்று’’முட்டாளே !….உனது எருமை மாட்டு எமன் கோகுலத்தில் பசு மாட்டோடு விளையாடிக் கொண்டிருக்கிறான்’’ என்று பாகவதத்தில் கண்ணனை அடையாளம் காட்டியது ‘’ஆட்டகனிஸ்ட் காளி’’…..அதன்பின் வெகுநாள் கழித்து கண்ணனை தினமும்’’ முட்டாளே(அடியேன்தான்)….உனது காலைக் கடன் (திரு)மாலைக் கடன் கம்ப்யூட்டரில் வந்தாச்சு….எழுந்தேலோ ரெம்பாவாய் வெண்பாவாய்’’ என்று அடையாளம் காட்டிக் கொண்டிருப்பது ‘’கண்ணனை வரைந்து போட்டகனிஸ்ட் கேசவ்’’….இது என் அபிப்ராயம் & அனுபவம்….இனி வெண்பா(ஸாரி காலைக் கடன்)….!

KRISHNA FOR TODAY….
—————————————-

181014 -Kali appears before Kamsa -wcol-charcoal Strathmore 160gsm tinted paper 9×12″ lr

‘தூளியாட்டம் ஆடும், துவண்டவன் காலில்கோ
தூளியாய் ஒட்டித் துகள்பருக, -காளியாட்டம்
ஆடிட்டு கம்ஸனுக்கு அண்ணன் வரவைமுன்:
கோடிட்டு(வண்ணக் கோடிட்டு) கேசவ் (பின்)கழித்து’’….கிரேசி மோகன்…

“யாரிதுசின் னப்பொண்ணு! யாதுமாகி நின்றிடும்
பாரதி கண்ணம்மா போலிருக்கு ! -நேரெதிர்
கண்டாயோ கேசவா கண்ணனில் காளியை !
விண்டாயே வண்ணத்தில் வார்த்து”….கிரேசி மோகன் ..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *