ஜீவன் முக்த ஜகத்குரு
–மீ.விசுவநாதன்
உனக்கும் எனக்கும் தெரியுமா? – அந்த
உயர்ந்த துறவிப் பெருமைகள் ?
கனக்கும் மனத்து கவலையை – அவர்
கரைத்து விடுவார் புரியுமா?
சினத்தை அடக்கி சிவனையே – தவம்
செய்யும் சிறந்த தவசியாம் !
தினத்தை அறிந்து உலகினை – நல்ல
திசைக்குத் திருப்பி விடுவராம்.
கருங்கற் சிலைக்குள் கடவுளை – நாம்
காணும் வழியை உரைப்பராம்
சிருங்க கிரியில் இருப்பினும் – நம்
சிறிய உளத்தும் நிறைவராம் !
பெருங்கு ணத்“த பிநவரே“ – எளிய
சீடர் நமக்கே அருள்வராம்
நெருங்கி யவரை நினைவிலே – ஒரு
நிமிடம் இருத்தப் பழகுவோம்.
(இன்று 06.11.2018 தீபாவளித் திருநாள்.
ஜகத்குரு அனந்த ஸ்ரீ விபூஷித
ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்தரின் ஜெயந்தி தினம்)