மகாதேவஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண் .. அவுஸ்திரேலியா

 

 

வீரம்தனைக் கொடுத்து விடு
வித்தைகளும் கொடுத்து விடு
ஈரமுள்ள நெஞ்சம் தனை
எல்லோர்க்கும் ஈய்ந்து விடு
சூரன் உள்ளம் திருந்துவிட
ஈரம் தனை காட்டியவா
தொழு தழுது நிற்கின்றோம்
சுடர் கொழுந்தே துணைநீயே !

அருண கிரி கடைத்தேற
அருள் கொடுத்த வேல்முருகா
கச்சியப்பர் கவி புனைய
கருணை தனைக் காட்டியவா
இச்சை உடன் மயிலமர்ந்து
எங்கள் துயர் போக்கிடவா
என்னாளும் கதிர் வேலா
எங்கள் மனம் உன்வசமே !

பொருள் எமக்கு கொடுத்தாலும்
அருள் அதனுள் சேர்த்துவிடு
மருளென்னும் பேய் தன்னை
மாண்டு விடச் செய்துவிடு
செரு அதனை ஏற்றுநின்ற
செருக்கு மிக்க அசுரரயே
உரு காட்டி உய்வித்த
உன தடியைப் போற்றுகிறோம் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *