தற்காலப் புதுக்கவிதைகளில் தொடரமைப்புகள்

0

முனைவா்.பா. உமாராணி

இணைப்பேராசிரியா்

கற்பகம் உயா்கல்வி கலைக்கழகம்

கோயம்புத்தூா் -21.

 

            சொற்கள் தொடா்ந்து அமையும் அமைப்பினைத் தொடரமைப்பு எனலாம். தொடா்கள் தான் ஒரு படைப்பின் முழுப்பொருண்மையும் விளக்கவல்லன. தொடா்களின் செயல்பாட்டினால்தான் பொருள் வேறுபாட்டுத் தன்மையினை முழுமையாக உணா்ந்துகொள்ள முடியும். அவ்வகையில் இன்றைய புதுக்கவிதைகளின் தொடரமைப்பினை ஆய்வது பயனுடையதாக இருக்கும். இக்கட்டுரைக்கான தரவுகள் 2001-ஆம் ஆண்டு தொடங்கி 2010-ஆம் ஆண்டு வரையிலான 15 கவிதைத் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது.

பெயா்த்தொடா்

            பெயா்த்தொடரில் ஒரு பெயா்ச்சொல் கருவாகவும், பலவித அடைச்சொற்களுடனும், சுட்டுசொற்களும் இடம்பெறலாம். புதுக்கவிதையில் பெயரெச்ச வடிவான சுட்டு சொற்கள் இடம்பெற்றள்ளன.

  1. சுட்டுப்பெயா்

            அந்த ஊமையன்       (குறுவாளால் எழுதியவன், ப.84)

            இந்த நோய்க்காரன் (பூபாளத்திற்கொரு புல்லாங்குழல், ப.95)

            இந்தப் பூனை                        (அபத்தங்களின் சிம்பொனி, ப.38)

  1. அளவை அடைப்பெயா்கள்

            பெரிய மனிதா்

            சில ஆண்டுகள்

            ரூபாய் நாணயம்

            பல நாள்

போன்ற பல அளவை அடைப்பெயா்கள் தற்காலப் புதுக்கவிதைகளில் இடம் பெற்றுள்ளன.

  1. எண்ணிக்கை அடை

            ஆயிரத்தித் தொள்ளாயிரத்தித் தொண்ணூத்தி மூன்று ஆண்டுகள்

                                                                                                (குறுவாளால்எழுதியவன், ப.67)

            நூறு புறாக்கள்

            ஒரு ரூபாய் நோட்டு,  ஏழுகதவு                   (மேலது, ப.74)

போன்றவை எண்ணிக்கை அடைப்பெயா்களாக இடம் பெற்றுள்ளன.

  1. குண அடை

            நரிக் குணம்

            கனிவான பேச்சு

            அமுதத் தமிழ்

            தீந்தமிழ்

போன்ற குண அடைகள் தற்காலப் புதுக்கவிதைகளில் பலவிடத்தும் இடம்பெற்றுள்ளன.

  1. வேற்றுமை உருபுதாங்கிய அடை

            எமது நாடு

            உன்னுடைய வாழ்க்கை

            உன்னால் என் பெயா்

            உன்னோடு மந்திரவாதி

போன்ற வேற்றுமை உருபுதாங்கிய அடைச்சொற்கள் புதுக்கவிதையில் தன் கருத்தை வலியுறுத்தல் பொருட்டு இடம்பெற்றுள்ளன.

  1. பெயரெச்ச அடை

            உயிரற்ற மனிதன்

            வற்றாத புகழ்

            நீங்காத மணம்

            உயா்ந்த மலைச் சிகரம்

போன்றவை பெயரெச்ச அடைகளாக வருகின்றன. பெயா்த்தொடா் இல்லாத வாக்கியங்களில் பெயா்த்தொடா் பதிலிகள் மட்டுமே பயின்று வருகின்றன.

            பலவித அடைகளைத் தாங்கிய பெயா்த்தொடா்கள் புதுக்கவிதையில் பயின்று வரும்போது அவை வருணனைப் போக்கில் அமைந்த தொடா்களாகவே அமைந்துள்ளன என்பது சிறப்பு.

வினைத் தொடா்

            வினைச் சொற்கள் தனிவினைச் சொற்களாகவோ, துணைவினைச் சொற்களாகவோ சிலபொழுது பயின்றுவரும். வினைச் சொற்களில் காலம், எண், பால்காட்டும் ‘Aspectual’ கூறுகள் இடம்பெற்றிருக்கும். வினையில் காணப்படும் பால், எண், இடம் காட்டும் விகுதிகள் எழுவாயின் இணக்க நிலையினைக் காட்டுவனவாக அமைகின்றன.

  1. வினையடைகள்

            வேகமாய் ஓடினான்

            மூச்சடிக்கிப் படுத்தான்

            மெதுவாகச் சொன்னான்

            சிரமப்பட்டு இடக்கினான்,  உறுதிபூண்டான்

போன்றவை வினையடைகளாகப் புதுக்கவிதையில் பயின்று வருகின்றன.

  1. கால வினையடைகள்

            அந்த நேரம் நான் வந்தேன்

            இப்பொழுது பசிக்கவில்லை

            முன்பே நடந்து விட்டது

            எப்பொழுதோ நடந்ததிது

போன்றவை காலம் காட்டும் வினையடைகளாகப் பயின்று வருகின்றன.

  1. வேற்றுமை வினையடை

            வறுமை ஒழிந்தது

            என்னுடன் நடந்தான்

            மழையால் நனைந்தேன்

            பச்சை மலையில் ஏறினார்கள்

            இறைவனின் பார்வை

போன்ற வேற்றுமை வினையடைச் சொற்கள் புதுக்கவிதையில் பலவிடத்தும் இடம் பெற்றுள்ளன.

  1. வினைத் தொடா்கள்

            வாரா மழை காரணமாக வாடின

            தீரா நினைவு அலைவுற்று நிலை கண்டு  (அபத்தங்களின் சிம்பொனி, ப.29)

            நடவாப் பயல்                        (நழுவும்நினைவுகள், ப.19)

போன்ற வினையெச்சத் தொடா்கள் கருத்தை வலியுறுத்தல் பொருட்டுப் புதுக்கவிதையில் பயின்று வருகின்றன.

  1. வழுத் தொடா்கள்

            வழுத் தொடா்கள் என்பது இயல்பான முறையில் சொற்கள் அமைவு பெறாமல் வழக்கிற்கு மாறாக இணைந்து காணப்படும் நிலையாகும். இம்முறை தற்காலப் புதுக்கவிதைகளில் பலவிடத்தும் காணப்படுகின்றன.

            ”மனக் கடலுக்குள் இறங்கு

            உன் கனவுகளை வலை வீசு”          (கிளைநிலா, ப.53)

            ”ஊமைப் பாடல்”                               (விரும்பியதெல்லாம், ப.76)

            ”கண்களால் படம் பிடித்திருப்பேன்”          (மேலது, ப.52)

            ”சீறிச்சிலிர்த்த மனசு”                       (நிலாப்பெண்ணேஇ ப.15)

            ”அவள் காணப் பறக்கிற விழிகளே……”   (அன்றில்இ ப.22)

            ”சாகஸ சபாரிக்கள்

            மின்மினி மேடைகள்!”                      (கல்மரம், ப.22)

            ”இவா்கள் தரையில் பூத்த

            தாமரை மலா்கள்……..”                   (மேலது, ப.41)

            ”வயோதிகம் அடைந்த

            வாலிபா்கள்”                          (மேலது, ப.61)

            ”மலையைச் சுமக்கும்

            மண் புழுக்கள்”                                  (மேலது, ப.110)

            ”வறுமைச் சிலுவை”              (மேலது,  ப.114)

            ”குப்பைத் தொட்டியிலிருந்து

            ஒருகடிதம்………………”                 (கிளைநிலா, ப.67)

            ”பெற்ற கடன்”                                   (மேலது)

            ”சாதிகள் பறக்கும்பார்”                    (கல்மரம், ப.12)

            ”வாழ்க்கை முழுவதும்

            வறுமையில் மிதந்தது”                     (கந்தா்வன் கவிதைகள், ப.104)

போன்ற வழுத்தொடா்ள் புதுக்கவிதையின் இடம்பெற்றுள்ளன.

 

 

வாக்கியங்கள்

            இன்றைய புதுக்கவிதைகளில் பெயா்த்தொடா் வினைத்தொடா் போன்றவையும், கருவாக்கியங்களும் இடம்பெற்றுள்ளன. கருவாக்கியங்கள் வினை மற்றும் பிற கூறுகளின் அடிப்படையில் தோற்றம் பெறுகின்றன. உடன்பாடு,  எதிர்மறை, ஏவல், வினா, இணைப்பு என்னும் பல நிலைகளில் தற்காலப் புதுக்கவிதைகளில் வாக்கிய அமைப்பு இடம் பெற்றள்ளன.

தன்வினை வாக்கியம்

            செயப்படு பொருள் குன்றியவினைத் தோற்றம் பெறும் போது தன்வினை வாக்கியங்கள் தோன்றுகின்றன.  சான்று,

            ”நாய் ஓடியது”            (…ம், ப.46)

பிறவினை வாக்கியம்

            செயப்படு பொருள் குன்றாவினை நடைபெறும் போது பிறவினை வாக்கியங்கள் தோன்றுகின்றன.  சான்று,

            ” அவள் ஓடினாள்”                 (குறுவாளால் எழுதியவன்,  ப.54)

செய்வினை வாக்கியம்

            பயனிலையாகச் செய்வினைகள் தோன்றும் போது செய்வினை வாக்கியங்கள் தோற்றம் பெறுகின்றன.  சான்றாக,

            ”யானை அவனைக்

            கொன்றது”   (மேலது, ப.42)

            ”பெண்ணை பேதமை

            என்று கூறிக்

            கொன்றனா்”  (தென்றலோடு சில தினங்கள்,  ப.64)

ஏவல் வாக்கியம்

            ஏவல் வாக்கியத்தில் எழுவாய் முன்னிலைப் பெயா் தன்மை பெறும்.

            ”வாருங்கள்! இன்றைய இந்தியாவை

            உருவாக்க……..”                  (கல்மரம், ப.59)

            ”ஏண்டா உனக்காகத்தான்

            நான் காத்துக் கிடக்கிறேன்”           (பூபாளத்திற்கொரு புல்லாங்குழல்,  ப.53)

            ”புறப்படு! மீண்டும் சுதந்திரப் போரைத்

            தொடங்குவதற்கு”                (கல்மரம், ப.130)

வியங்கோள் வாக்கியம்

            ‘க’ என்பதை இறுதியில் பெற்று வாழ்க,  ஒழிக போன்று அமைந்து வருவனவாய் புதுக்கவிதையில் வியங்கோள் வாக்கியங்கள் இடம்பெற்றுள்ளன.

            ”வாழ்க இந்தியா!”                 (கிளைநிலா,  ப.14)

            ”வாழ்ய தமிழன்னை”           (மேலது)

போன்றவை சிறந்த சான்றுகளாகும்.

எதிர்மறை வாக்கியம்

            வினையை எதிர்மறையாக மாற்றுவதற்கு இல்லை, அல்ல, முடியாது போன்ற துணை வினைகளைத் தமிழில் பயன்படுத்தக் காணலாம்.

            ”இழப்பதற்கு ஒன்றுமில்லை

            இனி உன்னிடம்”                  (குறுவாளால் எழுதியவன், ப.19)

            ”நாம் ஒன்றும்

            ஆதா்ச தம்பதியா் அல்லா்”   (மேலது, ப.45)

வினா வாக்கியம்

            வினாவாக்கியங்கள் ஆ,  ஏ என்னும் வினாக் கூறுகளை உள்ளடக்கியதாக அமைந்து வரும்.

            ”மானுடத்தின் பசியாற்றிய

            மணிமேகலைக்குப் பசிக்காதா என்ன?”    (குறுவாளால் எழுதியவன், ப.56)

            இந்த உலகத்தை

            ஆள்பவா்கள்

            யார் யார் தெரியுமா?”                      (மேலது, ப.57)

            ”தோசை சுடுவதைப் பற்றித்

            தெரியுமா உங்களுக்கு”                    (மேலது,  ப.187)

வாக்கிய வகைகள்

            தற்காலப்       புதுக்கவிதையில் இடம்பெற்றுள்ள வாக்கியங்களைத் தனிவாக்கியம்,  கலவை வாக்கியம்,  கட்டளை வாக்கியம் என்ற நிலையில் ஆராயலாம்.

தனிவாக்கியம்

            ஒருபயனிலையைக்கொண்டுமுற்றுவாக்கியமாகஅமைவதுதனிவாக்கியமாகும்.

            ”அவனுக்குத்தேவைஒருதீக்குச்சி”               (தனிமைகவிந்தஅறை.இ ப.26)

கலவை வாக்கியம்

            ஒரு வாக்கியத்தின் அக அமைப்பில் பிறிதொரு வாக்கியம் தோன்றுவதன் மூலமாக வரும் கடின வாக்கியங்களைக் கலவை வாக்கியம் என்பா். கலவை வாக்கியத்தில் ஓா் அகப்படுத்தும் வாக்கியமும் பல அகப்படும் வாக்கியங்களும் காணப்படும்.

            ”தூணில் ஒய்யாரமாகச் சாய்ந்த படி

            குமார் சாருடன்

            பேசிக் கொண்டிருக்கிறாள்

            மணிமேகலை

            அவா் ஏதோ ஜோக்கடிக்க

            இவள் அதற்கு விழுந்து விழுந்துசிரிக்க

            குழம்பு கொதித்துக் கொண்டிருக்கிறது

            காமராஜருக்குப் பசிபொறுக்க முடியவில்லை

            அழுது அழுது தூங்கிவிட்டார் எம்.ஜி.ஆா்

            ……………………………………

            உதயகுமாரனும் விடுவதாயில்லை”                       (குறுவாளால் எழுதியவன், ப.57)

என்று வாக்கியம் நீண்டு கொண்டே செல்கிறது.

கட்டளை வாக்கியம்

            ஒரு வினையைச் செய்துமுடிக்க வேண்டும் என்ற நோக்கில் கட்டளையிடுவது போன்று அமைவது கட்டளை வாக்கியம்.

            ”ஆயா……. சோத்தபோடு முதல்ல”            (மேலது, ப.58)

            ”நில்லடா மின்வெட்டுக் குரல்”                    (மூடுபனி, ப.78)

 

விளி வாக்கியம்

            ஒரு நபரையோ அல்லது பொருளையோ விளிக்கும் தன்மையில் முன்னிலைப் பொருளில் அமையும் வாக்கியம் விளிவாக்கியம்.

            ”மலையுச்சியோ

            இன்னும் எங்களை

            ‘வாவா’ வென் அழைத்துக் கொண்டுதான் உள்ளது”

                                                                        (குறுவாளால் எழுதியவன், ப.14)

போன்ற வாக்கிய அமைப்புகள் தற்காலப் புதுக்கவிதையில் இடம்பெற்றுள்ளன.

            தற்காலப் புதுக்கவிதைகள் அதன் அமைப்புத் தன்மையில் குறுகியும், நீண்டும் இருப்பதன் காரணமாக பலவித மொழிக் கூறுகளைப் பயன்படுத்துவது தவிர்க்க இயலாததாகியது. நீண்ட கவிதைகள் வருணணைப் போக்கில் பயன்படுத்தப்படுவதன் காரணமாக பலவித மொழியமைப்புகளை இயல்பாகப் பெற்று விடுகின்றன. ஒரு மொழியின் படைப்பை அதன் தொடரமைப்புகளே தீர்மானிக்கின்றன. இவைகாலம், இடம், சூழல், பால் என்னும் அடைப்படையில் அமைந்து பொருளைச் சிறப்பிப்பதோடு அல்லாமல் அதன் ஒலியன், உருபன், தொடரன் அமைப்புகளிலும் சிறந்து விளங்குவதை காணமுடிகிறது.

பயன்பட்ட நூற்கள்

  1. அய்யாறு ச. புகழேந்தி, முதற்பதிப்பு -2002, கிளைநிலா, தஞ்சை, காந்திப்பதிப்பகம்
  2. அன்பாதவன், முதற்பதிப்பு -2006, தனிமை கவிந்த அறை, சென்னை, அன்னை       இராஜேஸ்வரி பதிப்பகம்.
  3. வெ. இறையன்பு, முதற்பதிப்பு -2006, பூபாளத்திற்கொரு புல்லாங்குழல்,       சென்னை, நியூசெஞ்சுரி புக்கவுஸ்.
  4. ச. இலக்குமிபதி, முதற்பதிப்பு -2003, கல்மரம், வேலூர், பேகன் பதிப்பகம்.
  5. கந்தா்வன், முதற்பதிப்பு -2004, கந்தா்வன் கவிதைகள், சென்னை, பாரதி புத்தகாலயம்.
  6. கரிகாலன், முதற்பதிப்பு -2004, அபத்தங்களின் சிம்பொனி, சென்னை, புதுமைப்பித்தன் பதிப்பகம்.
  7. கெளரிலிங்கா், முதற்பதிப்பு -2006, அன்றில், சென்னை, வம்சி பதிப்பகம்.
  8. நா. சாந்திபிரேம்குமார், முதற்பதிப்பு -2004, நிலாப்பெண்ணே, மதுரை, அம்பை                  பதிப்பம்.
  9. சிற்பி, முதற்பதிப்பு -2003, மூடுபனி, சென்னை, கவிதா பப்ளிகேஷன்.
  10. சோமலிங்கம், முதற்பதிப்பு -2001, மனித மரங்கள், சென்னை, மணிமேகலை பிரசுரம்.
  11. தபசி, முதற்பதிப்பு -2004, குறுவாளால் எழுதியவன், சென்னை, புதுமைப்பித்தன் பதிப்பகம்.
  12. தேவதேவன், முதற்பதிப்பு -2002, விரும்பியதெல்லாம், சென்னை, தமிழினி பதிப்பகம்.
  13. வைகறைசிவா, முதற்பதிப்பு -2005, நழுவும் நினைவுகள், சென்னை, திருமகள்          நிலையம்
  14. முகில், முதற்பதிப்பு -2004, …ம், தூத்துக்குடி, துடிப்புகள் பதிப்பகம்.
  15. நெல்லை ஜெயந்தா, முதற்பதிப்பு -2005, தென்றலோடு சில தினங்கள், சென்னை,   குமரன் பதிப்பகம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *