181128_DWA wcol Canson A4 200gsm 600dpi Chanchalam hi manah Krishna Gita 6|34

காற்றினும் கஷ்டம் கவரிமனம் மானிடா!
ஊற்றெடுத்து ஓடும் உபத்திரவம்! -சாற்றிடு
கண்ணாநீர் கீதையைக் காதினில்: நான்செய்த
பண்ணாத பாவமும் போச்சு….!

மூப்பிழைய, மூச்சடைக்க, சாப்பாடே நஞ்சாக
கூப்பிடாத காலன் கரம்குலுக்க -ஆப்பழியும்(உடல் அழியும்)
அந்திம நாளேனும் அய்யோ மனமேநீ
நந்த குமாரனை நம்பு….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *