முனைவர் வே. சுமதி

தொப்புள் கொடியில்
முளைவிட்ட
சொற்பிளம்புகள்
அறுக்கப்பட்டு
ஆனந்தஜோதியாய்
ருத்ரதாண்டவமாடுகிறது….
பல நேரங்களில்
உக்கிரமாகவே
பிரசவமாகி,
தலைவிரிகோலாமாய்
தாண்டவமாடுகிறது…
வலிகளான சொற்கள்
மௌனத்தின்
பாதைகளில்
விழிகளை நோக்கி
ஒற்றைக்காலில்
கூத்தாடுகிறது….
எண்ணங்களின்
எண்ணற்ற வடிவங்களும்
நல்லநேரம் பார்த்தே
நிதானமாய்
பிரயோகிக்கப்படுகிறது
கானல்நீராய்…
யுகயுகமாய் காத்திருந்த
ஆயுதங்களின்
கூர்முனைகள்
நெம்புகோலால்
பழுதுபார்க்கப்படுகிறது
புழுக்களிடம்…..

முனைவர் வே. சுமதி,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி,
பொள்ளாச்சி.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *