– சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்

புத்தாண்டு வருகின்றது .
புத்துணர்வு வருகின்றது.
புது வாழ்வு மலருமென்று
புது நம்பிக்கை தருகின்றது .

இவ்வாண்டு கவலைகள்
இத்தோடு முடியட்டும்
வருமாண்டு நம்வாழ்க்கை
வளமாக இருக்கட்டும் .

விழுகின்ற மழைநீரால்
விவசாயம் செழிக்கட்டும் .
அழுகின்ற நிலைமாறி
ஆனந்தம் கொழிக்கட்டும்..

அரசியல்வாதிகள் இனி
அறவழிக்குத் திரும்பட்டும்.
அவர்களைத் தேர்ந்தெடுப்போர்
அறிவோடு நடக்கட்டும் .

தூய சக்திகள் நம்மைத்
துடிப்போடு ஆளட்டும்
தீய சக்திகள் இனிமேல்
தீயில் பொசுங்கட்டும் .

மக்களிடையே பிரிவினைகள்
மண்ணோடு போகட்டும்
ஒற்றுமை மனநிலை
ஓங்கி வளரட்டும் .

பாமரர் நிலைமாறி
படிப்பறிவில் சிறக்கட்டும்
பாரதம் வல்லரசாய்
பார்போற்ற வளரட்டும் ..

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *