ஆஸ்கார் விருதுகளைப் பத்து ஆண்டு முன்னர் பெற்ற இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் அவர்களை இவ்வார வல்லமையாளர் என அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது. கணினி தொழில்நுட்பத்தை சினிமா இசையில் புகுத்தியவர். மேற்கத்திய சங்கீதத்தின் வளர்ச்சியை உள்வாங்கி இந்திய திரையிசையாக தமிழ், ஹிந்தி மொழிகளில் தருவதில் மிக வல்லவர் ரகுமான். ‘இளையராஜா 75’ என்ற பல்லாயிரம் பேர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தன் குருவை வாழ்த்தி ‘கீபோர்ட்’ வாசித்து புகழ்மிக்க புன்னகைமன்னன் படப்பாடலை மீண்டும் இசைத்தார். மும்பை, ஹாலிவுட் இசையமைப்புகளில் நீண்ட காலம் செலவிட்ட இரகுமான் இப்போது சென்னையில் நேரத்தைச் செலவிடுகிறார். ராஜீவ் மேனன் இயக்கி, மதன்கார்க்கி பாடல்களுடன் “சர்வம் தாள மயம்” என்ற கர்நாடக சங்கீத உலகம் பற்றிய நல்ல திரைப்படம் தமிழில் உருவாகியுள்ளது. வாழ்த்துகள் திரு. இரகுமானுக்கும், அவர் இன்னும் தர இருக்கும் தமிழின் புத்திசைப் பாடல்களுக்கும்!
சாஸ்திரீய சங்கீதம் என்னும் பிரவாகத்தில் இந்தியாவின் பழைய சமூக அமைப்பில் இரு கோடிகளும் இணைவது 3000+ ஆண்டுகளாய் நிகழ்ந்துவருகிறது. பாணர், நாட்டார் இசைக் கலைகள், நாட்டிய மரபுகள் மேட்டிமை மரபுகளாக உருமாற்றம் ஆகின்றன. இந்த ம்யூஸிக்காலஜி ஸப்ஜெக்ட்டை வெகுஜனங்கள் பார்க்கும் சினிமாக்களிலே விட்டுவிடுகிறார்கள் என்கிறார் ‘டெஸ்லா’ கணேஷ்.

காத்தவராயன் சினிமாவை எடுத்துக்கொள்ளுங்கள். சிவாஜி – சாவித்திரி படம்.இதில் தும்புரா வாசித்துக்கொண்டு சிவாஜி கிழவனாக நடிப்பார். தும்பி (பஞ்சாபில்) – தும்புரு (> தம்புரா). இது மத்திய கிழக்கு நாடுகளில் எல்லாம் பரவியுள்ளது. தும்பி = சுரைக்குடுவை. ‘வரவு எட்டணா செலவு பத்தணா’… துந்தனா என்னும் பாட்டிலே வரும்.  இதுபோன்ற கருவியை வைத்துக் கொண்டு வில் யாழ் வாசிப்பது கின்னரம். ‘கிழவி சொன்னால் கின்னாரக் காரனுக்கு ஏறாது’ (பழமொழி). காத்தவராயன் கதை என்னும் நாட்டுப்புறக் கதை டெஸ்லா கணேஷ் சொல்லும் செய்தியை உள்ளடக்கியது. ஆரியமாலா – கின்னரம் வாசிக்கும் பாணன் காத்தவராயன்.  கின்னரம் ~ ராவணஹஸ்தம் (Pre-Violin History):
https://groups.google.com/forum/#!topic/santhavasantham/aMK2Pa10Wvc

3000+ ஆண்டுக்கு முன்னும் ஜாதி அமைப்பின் இரு கோடிகளும் இசையில் சந்தித்துள்ளன. இதைத்தான் குசீலவர் (Cf. Kuyiluvar in Sangam Tamil) பாடல்களும், கிரவுஞ்ச வதை என்னும் வான்மீகியின் பாலகாண்ட சருக்கமும் காட்டிநிற்கின்றன. சாம கானம் பாடும் போது ‘wish-chant’ என்னும் பாடலுக்கு க்ரௌஞ்ச-ஸாமன் எனப் பெயர். விளரி எனத் தமிழிசை கூறும் தைவத ஸ்வரம் (6th note – high note in sapta svaras, dedicated to Asuras and Brhaspati) அன்றில்/க்ரௌஞ்சம் ஏங்கும் பாடல் ரிக்வேதத்தில் சில பாட்டுகளைப் பாட பாணர், குயிலுவரிடம் இருந்து உள்வாங்கப்பட்டுள்ளது. மிக நீண்ட பயணம் இந்தியாவின் சங்கீதம், அதில் சுடரும் விண்மீன் ரகுமான்.

செம்பூழிக் காலத்தை ஆராய்கிறேன். பீர் என்ற சிந்து மாகாணத்தில் உருவான சொல் தமிழ் அடிப்படைத் தாது கொண்டது. பிரான், பிராட்டி; தம்பிரான் (சைவ ஆதீனங்கள்), தம்புராட்டி (கேரள தரவாடுகள்) ஓர்மிக்கவும்.  பீர் எனுஜ் சொல் அறபி, ஈரான், வடமொழி போன்ற மொழிகளில் அதன் வேர் காட்டவியலாது. சூபி பீர் அவர்களிடம் பக்தி பூண்டு ரகுமானின் தாயாருடன் இஸ்லாம் மதத்தைத் தழுவியவர் ரகுமான். திலீப் என்பது பெற்றோர் இட்ட பெயர். வட இந்தியாவின் ஹிந்துஸ்தானி சங்கீதமும், அதன் முன்னனிக் கலைஞர்களுடனும் புதிய படைப்புகளைத் தந்து புகழும், பணமும் ஈட்டுகிறார். இவரது பாடல்கள் என்றால்  படமே ஹிட் தான்.

“He suggested the names: “Abdul Rahman” and “Abdul Rahim” and said that either name would be good for me. I instantly loved the name “Rahman.” It was a Hindu astrologer who gave me my Muslim name.” https://scroll.in/article/699665/Why-I-converted:-The-transformation-of-Dilip-Kumar-into-AR-Rahman

https://scroll.in/reel/897429/10-things-we-learnt-about-ar-rahman-from-the-authorised-biography-notes-of-a-dream

https://indianexpress.com/article/lifestyle/books/ar-rahman-biography-notes-of-a-dream-ar-rahman-oscar-5444054/

(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *