வண்ணத்தமிழ் பாட்டிசைத்த வரகவி

0

மரபின் மைந்தன் முத்தையா

காலத்தின் தோள்களிலே குயிலாக உட்கார்ந்து
கானங்கள் இசைத்தவனைப் பாடு
காற்றுவரும் திசையெல்லாம் குளிர்ந்துவரும் அவன்பாட்டில்
கூறியுள்ள வாழ்க்கைமுறை தேடு

ஞானத்தின் கருவூலம் தான் என்று இருந்தாலும்
நான் என்ற ஆணவமே இன்றி
வானத்தின் செய்திகளை வார்த்தைகளில் வார்த்தளித்த
கண்ணதாசக் கவியரசே நன்றி

சூட்சுமங்கள் எத்தனையோ சொல்லி வைத்த உன் கவிதை
சூத்திரமாய் இருக்குதய்யா வாழ்வில்
காட்சிக்கு இலை எனிலும் கருத்தெல்லாம் நிறைந்தவனே
கைகூப்பினோம் உனது நாளில்

சிறுகூடல் பட்டியையோர் ஷேத்திரமாய் ஆக்கியவன்
சிறகடித்து ஆண்டுகளும் ஓடும்
வருங்காலம் எப்போதும் வரகவியே உன்னுடைய
வண்ணத்தமிழ் பாட்டிசைத்தே வாழும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *