சமர்
மதியழகன்
சூரியனை,
மீட்க வந்த வானத்திடம்
சண்டையிட்டது.
பூக்கள் வலிந்து சென்று
வேண்டியும்
வண்டுகள் தேன் குடிக்க
மறுத்தன.
கரை எவ்வளவு கெஞ்சியும்
அலை முத்தமிட வரவில்லை
காலில் விழுந்தும்
காற்றுக்குத் தலை வணங்க
மரங்கள் மறுத்தன.
உன்னைச் சும்மா விடாது
என்றது பூமி,
உதிக்க மறுத்த சூரியனோ
அதைச் சிறிதும்
சட்டை செய்யவில்லை.
யாகம் வளர்த்து
மழையரசியை அழைத்தார்கள்,
மழையரசி கடலரசனோடு
ஐக்கியமாகிவிட்டதாக
சேதி வந்தது…