உலா வரும் உற்சவங்கள் – “உத்சவ்” – தொலைக்காட்சி நிகழ்ச்சி
ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை ஒளிபரப்பாகி வரும் உன்னதமான நிகழ்ச்சி ‘உத்சவ்’.
மனிதன் ஓய்வெடுக்க நேரமின்றி உழைக்கும் சூழல் உருவாகியுள்ள இந்த கால கட்டத்தில் நமது கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை தழைக்க வைக்கும் தனிப்பெரும் முயற்சியாய் உருவாக்கப்பட்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் ஆன்மீகத்தின் தத்துவத்தை அனைவரும் அறிந்து போற்றும் வகையில் தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள குக்கிராமங்களில் உள்ள பாரம்பரியம் மிக்க ஆலயங்களின் அதிசயமிக்க திருவிழாக்களும் இந்நிகழ்ச்சியில் அரங்கேறுவது தனிச்சிறப்பு. இவை மட்டுமின்றி அவ்வப்போது உற்சவங்களை காண நேரடியாக ஒளிபரப்பு செய்து நேயர்களை அந்த திருத்தலங்களுக்கே அழைத்துச் செல்வது குறிப்பிடத்தக்கது.
ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் சைவ, வைணவ ஆலயங்கள் மட்டுமின்றி கிராம தேவதை ஆலயங்களின் அற்புதத் திருவிழாக்களும் படம் பிடிக்கப்பட்டு, பக்திப் பாடல்கள் இணைக்கப்பட்டு ஒளிபரப்பாகிறது.
திருவிழா என்றாலே கொண்டாட்டம் தான். அதிலும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் நடைபெறும் பிரம்மோற்சவ நிகழ்வுகள், வாழ்வில் காணக் கிடைக்காத பெரும் பேறுகள். இப்படி புகழ் பெற்ற ஆலயங்களின் திருவிழா நிகழ்வுகளை அனைவரும் கண்டு மகிழ்ந்திட அரிய வாய்ப்பை இந்நிகழ்ச்சி மூலம் வழங்குகிறது ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சி.
மாநிலத்தின் பல்வேறு பகுதியில் உள்ள ஆலயங்களில் நடைபெறும் உற்சவங்களை நேரடியாகச் சென்று கண்டு மகிழ வாய்ப்பில்லாதவர்களுக்கு இந்நிகழ்ச்சி ஒரு வரப்பிரசாதம்.