உலக நாயகனின் பிறந்தநாள் விழா நற்பணிகள் – செய்திகள்

0

நவம்பர் 7, பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இரத்த தானம் மற்றும் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.  மேலும் 6,7 நவம்பர் 2011, இரு நாட்களும் சென்னையில் பத்மஸ்ரீ கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் :

 

6 நவம்பர்

11காலை8 மணிக்கு

 

தென் சென்னை மாவட்ட நற்பணி இயக்கம் சார்பாக சாந்தோம் ஹைரோட்டில் உள்ள காக்கும் கரங்கள் முதியோர் இல்லத்திற்கு ரூ. 10,000/- மதிப்புள்ள மருந்துப் பொருட்கள், முதியோர் 100 பேருக்கு வேட்டி சேலைகள் மற்றும் காலை உணவு வழங்குதல்.

 

காலை 9 மணிக்கு

 

மத்திய சென்னை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதி நற்பணி இயக்கத்தின் சார்பாக சென்னை மாநகராட்சிப் பள்ளி மற்றும் சமூக நலக்கூடத்தில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நூறு இயக்கத் தோழர்கள் இரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி.

 

காலை 10 மணிக்கு

 

வடசென்னை மாவட்ட இயக்கத்தின் சார்பாக இராபுரம் PSRN அரசு மருத்துவனைக்கு 25 கல்லூரி மாணவ மாணவிகள், 100 இயக்கத் தோழர்கள் பங்கு கொள்ளும் இரத்த தான நிகழ்ச்சி மற்றும் 7 இயக்க சகோதரர்கள் உடல் உறுப்புக்கள் தானப் பத்திரம் வழங்கல்.

சென்னை இராயபுரம் உதவும் கைகள் அமைப்பிற்கு ஒரு மாத பயன்பாட்டிற்கான மளிகைப்பொருட்கள் வழங்குதல்.

 

காலை 11 மணிக்கு

 

மத்திய சென்னை மாவட்ட இயக்கத்தின் சார்பாக பெரம்பூர் எம்.எச். ரோடு சந்திரசேகர் கல்யாண மண்டபத்தில் சீப் மெமோரியல் குழந்தைகள் காப்பகத்திற்கு பீரோ, மளிகை பொருட்கள் காப்பக குழந்தைகளுக்கு சீருடை மற்றும் உணவு வழங்குதல்.  இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் மகாநதி சங்கர் அவர்கள் பங்கு கொள்கிறார்.

 

மதியம் 2 மணிக்கு

 

மத்திய சென்னை மாவட்ட இயக்கத்தின் சார்பாக ஆழ்வார்பேட்டை மகாராஷ்டிரா கல்யாண மண்டபத்தில் இரத்த தானம் மற்றும் எச்.ஐ.வி. -யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கான உணவு மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்குதல்.

 

மாலை 6 மணிக்கு

 

சென்னை முடிச்சூரில் புதிய கிளை இயக்கம் திறப்புவிழா மற்றும் தாம்பரம், குட்லைஃப் குழந்தைகள் இல்லத்திற்கு உணவு வழங்குதல்.

 

7 நவம்பர் 11 திங்கள் காலை 8 மணிக்கு

 

திருவள்ளுவர் கிழக்கு மாவட்ட இயக்கத்தின் சார்பாக எஸ்.பி. அன்னபூர்ணா திருமண மண்டபத்தில் 50 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை, 50 பெண்களுக்கு புடவைகள் மற்றும் மகாலட்சுமி ஆசிரமத்திற்கு ஒரு மாதத்திற்கான உணவுப்பொருட்கள் வழங்குதல்.

 

மாலை 6 மணிக்கு

 

வடசென்னை மாவட்ட இயக்கத்தின் சார்பாக பாரிமுனை ராஜா அண்ணாமலை அரங்கத்தில் நடைபெறும் நற்பணி விழாவில், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, தையல் இயந்திரம் மற்றும் 58 பேருக்கு வேட்டி சேலை வழங்குதல்.

மேற்காணும் விழாக்கள் அனைத்திலும் மாநில பொறுப்பாளர் ஆர். தங்கவேலு கலந்து கொண்டு நல உதவிகள் வழங்கவுள்ளார்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மத்திய சென்னை மாவட்ட நிர்வாகிகள் எஸ். ரமேஷ், எ. பஷீர், டி. விஸ்வநாதன், வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் எஸ். சங்கர், டாக்டர். எஸ். ஜெயக்குமார், தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஏழுமலை, பரமன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இயக்க நிர்வாகிகள் எ. பாபு, பி. ரூபலிங்கம் மற்றும் டி. ராஜன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *