-மேகலா இராமமூர்த்தி
திரு. பார்கவ் கேஷவ் எடுத்த இந்த ஒளிப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படமாகத் தெரிவுசெய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!
இருளும் ஒளியும் இணைந்த இந்த வண்ணக் கலவை, பல்வேறு எண்ண அலைகளை நம் மனக்கடலில் எறிகின்றன. காரிருளும் பேரொளியும் இணைந்து ஒரு நாளை அமைப்பதுபோல், மகிழ்வெனும் ஒளியும் இடுக்கண் எனும் இருளும் ...
Full story
-மேகலா இராமமூர்த்தி
நீரில் துள்ளும் மீனைப் பிடிக்கும் ஆவலில் துணியைப் பிடித்திருக்கும் இந்தச் சிறார்களின் முகத்தில் மகிழ்ச்சி துள்ளிவிளையாடக் காண்கிறேன்!
கிராமத்துச் சிறுவர்களின் இயல்பான இச்செயலை வெகு நளினத்தோடு படம்பிடித்துவந்திருக்கும் திரு. வெங்கட் சிவாவுக்கும், இந்தப் படத்தைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்த, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர், திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் என் நன்றி!
தூண்டில்போட்டுப் பிடித்தால்தான் மீன் சிக்குமா? இல்லை…எம்போல் துணிபோட்டுப் பிடித்தாலும் அது சிக்கும் என்று நமக்குச் சொல்லித்தருகிறார்கள் இச்சிறுவர்கள்!...
Full story
- Friday, April 6, 2018, 5:53
- இலக்கியம், கட்டுரைகள்
-மேகலா இராமமூர்த்தி
இந்நிலவுலகில் எத்தனையோ பெருஞ்சான்றோர்கள் தோன்றி மக்களுக்கு அறவுரை பகர்ந்திருக்கின்றார்கள்! எத்தனை எத்தனையோ நன்னெறிகள் அவர்களால் பரப்பப்பட்டிருக்கின்றன! வாழ்வியலை வகுத்துரைக்கும் எத்தனையோ அறநூல்கள் அவர்களால் இயற்றப்பட்டிருக்கின்றன. அவற்றால் ஆய பயன் என்ன?
நன்மையை வளர்க்க அம்மாமனிதர்கள் எவ்வளவோ பாடுபட்டபோதினும், இங்கே வளர்ந்த தீமைகளும் கெடுதல்களுமே அதிகம். இதில் வேதனை என்னவென்றால்…பேரறஞ் சொன்ன அப்பெரியோர்கள் பலரும் வரலாற்றில் தீயவர்களால் இரக்கமின்றிக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான்!
ஆம், சாக்ரடீஸ் எனும் சிந்தனையாளனுக்கு விஷத்தையும், ஏசுநாதருக்குச் சிலுவையையும், நபிகள் நாயகத்துக்குக் ...
Full story
-மேகலா இராமமூர்த்தி
நெடிதுயர்ந்து நிற்கும் மரங்களையும் கீழே வீழ்ந்திருக்கும் அவற்றின் வரிநிழலையும் அழகாய்ப் படமெடுத்து வந்திருக்கிறார் திரு. ஆய்மன் பின் முபாரக். இப்படத்தை இவ்வாரக் கவிதைப் போட்டிக்காகத் தெரிவுசெய்து தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவரும் என் நன்றியறிதலுக்கு உரியோர்.
வரிசையாய் வானளாவி நிற்கும் இம்மரங்களின் தண்டுப்பகுதியும் கிளைகளுமே பார்வைக்குக் கிடைக்கின்றன. அவற்றின் இலைகள் துல்லியமாய்த் தெரியவில்லை. எனினும் பக்கவாட்டில் காணப்படும் ...
Full story
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
வெங்கட் சிவா எடுத்த
இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (07.04.2018) வரை ...
Full story
-மேகலா இராமமூர்த்தி
இந்த மூதாட்டியின் முகத்தில் தெரிவது சோகமா? தவிப்பா? இல்லை எல்லா உணர்வுகளையும் அவித்துப் பெற்ற ஞானவரம்பான மோனநிலையா?
திரு. முத்துக்குமாரின் கைவண்ணத்தில் உருவான இந்தக் கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தைக் கவிதைப் போட்டிக்குத் தெரிந்தெடுத்துத் தந்திருக்கிறார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞருக்கும் தேர்வாளருக்கும் என் நன்றி!
உலகில் கலப்படமில்லாத் தூய்மையுடையது தாய்மை. அத்தாய்மை சுமந்துநிற்கும் ...
Full story
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
ஆய்மன் பின் முபாரக் எடுத்த
இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (31.03.2018) ...
Full story
- Monday, March 26, 2018, 5:29
- இலக்கியம், கட்டுரைகள்
-மேகலா இராமமூர்த்தி
இராம காதையில் நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்தும் மாவீரன் ஒருவன் உண்டென்றால் அது வானர குலத்தோன்றலாகிய வாலிதான்!
கிட்கிந்தை மலையின் அரசனாகத் திகழ்ந்த வாலி, இணையற்ற பெருவீரன். இந்திரனின் மகனாகக் குறிக்கப்படும் அவன், போரில் தன்னை வெல்லக் கூடிய ஆற்றல் பெற்றவர் எவருமில்லை என்று சொல்லுமளவுக்கு வீரமும் பராக்கிரமமும் மிக்கோனாய்த் திகழ்ந்து வந்தான்.
சிறந்த சிவபக்தனாக அறியப்படும் வாலி, தான் போர்புரியும் வேளையில் எதிராளியின் பலத்தில் பாதி தனக்கு வந்துவிடும் எனும் வரத்தையும் சிவனிடமிருந்து ...
Full story
-மேகலா இராமமூர்த்தி
நெகிழியின் உள்ளிருக்கும் குடத்தைத் தொட்டு நெகிழும் மக்களைத் தன் ஒளிப்படப்பெட்டிக்குள் அழகாய் ஒளித்து வந்திருக்கிறார் திரு. ஜேக்சன் ஹெர்பி. இப்படத்தைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருக்கிறார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி.
இலவசங்கள்மூலம் மக்களைத் தம் வசப்படுத்தி அவற்றிற்கு அடிமையாய் அவர்களை மாற்றும் அவலத்தை ஆரம்பித்துவைத்த பெருமை அரசியல்கட்சிகளையே சாரும். சுயஉழைப்பின்றிக் கிடைக்கும் பொருட்களுக்கும் களவாடிக் ...
Full story
- Monday, March 19, 2018, 5:55
- Featured, home-lit, இலக்கியம், கவிதைகள், நுண்கலைகள், படக்கவிதைப் போட்டிகள், பத்திகள், வண்ணப் படங்கள்
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
முத்துக்குமார் எடுத்த
இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (24.03.2018) வரை உங்கள் ...
Full story
-மேகலா இராமமூர்த்தி
பலவண்ணங்களைச் சிதறடித்துச் சாலம் காட்டும் இந்தப் புகைப்படத்திலிருப்பது மலரா? இலையா? என்று மலைக்கவைக்கிறது இதனைப் புகைப்படம் எடுத்திருக்கும் கலைத்திறன்! இப்படத்தை இவ்வாரப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியரான திருமதி. சாந்தி மாரியப்பனே இப்புகைப்படத்தை எடுத்தவருங்கூட. அவருக்கு என் நன்றியும் பாராட்டும்!
நீலமும் பச்சையும் கலந்தொளிரும் இந்தக் கோலமிகு படத்திற்குக் கருத்தொடு கவிவடிக்கக் கவிவலவர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களைக் கனிவோடு வரவேற்போம்!...
Full story
- Monday, March 12, 2018, 7:46
- Featured, home-lit, இலக்கியம், கவிதைகள், நுண்கலைகள், படக்கவிதைப் போட்டிகள், பத்திகள், வண்ணப் படங்கள்
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
ஜேக்சன் ஹெர்பி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (17.03.2018) வரை உங்கள் ...
Full story
- Wednesday, March 7, 2018, 6:14
- கட்டுரைகள், பொது
-மேகலா இராமமூர்த்தி
உலக வரலாற்றில் முதலாளித்துவத்தின் முதுகெலும்பை முறித்து, ஒடுக்கப்பட்ட வர்க்கமான தொழிலாளர்களைத் தலைநிமிர வைத்ததோடு, அவர்களை ஆட்சிபீடத்திலும் அமர்த்திய பெருமைக்குரியவர் விளாடிமிர் லெனின் (Vladimir Lenin). 1870ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் நாள் ரஷ்யாவின் சிம்பிர்ஸ்க் (Simbirsk) நகரில் பிறந்த லெனின், சட்டம் பயின்றவர். காரல் மார்க்ஸின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுத் தன்னை ஒரு
மார்க்சியவாதி என்று அறிவித்துக்கொண்ட அவர், அக்கொள்கைகளை ரஷ்யத் தொழிலாளர்களிடம் பரப்புரை செய்துவந்தார். ரஷ்யாவில் முதலாளித்துவத்தை முடிவுக்குக் ...
Full story
-மேகலா இராமமூர்த்தி
படக்கவிதைப் போட்டி 150ஆவது வாரத்தைத் தொட்டு வெற்றிநடை போட்டுவருகின்றது. இதனைச் சாத்தியமாக்கிய நண்பர்கள் அனைவருக்கும் வல்லமையின் நெஞ்சார்ந்த நன்றி.
உணவூட்டி மகிழும் காகங்களை அழகாய்ப் படம்பிடித்து வந்திருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. படக்கவிதை போட்டிக்கு இதனைத் தெரிவுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். ஆற்றல்மிகு இவ்விரு மகளிரும் என் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியோர்.
காகத்தின் சிறப்பியல்புகளாகச் ...
Full story
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
சாந்தி மாரியப்பன் எடுத்த
இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (10.03.2018) வரை ...
Full story