Author Archive

Page 1 of 41234

காற்றில் ஆடும் தீபங்கள் (3)

காற்றில் ஆடும் தீபங்கள் (3)
    பவள சங்கரி வாழ்வியல் வண்ணங்கள்! தீபம் (3) - தாளம் தப்பிய ராகம்? திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று நாம் கால்ங்காலமாக மூளைச்சலவை செய்யப்பட்டு வளர்ந்து வந்துவிட்டோம் என்றே நினைக்கத் தோன்றுகிறது. அதையே தெய்வ வாக்காக எடுத்துக் கொண்டு வாழ்ந்த பெண்டிரின் மன நிலைமை இன்றைய பல பெண்களுக்கு சற்றும் இல்லை என்றே தோன்றுகிறது. கல்வியறிவில் நல்ல முன்னேற்றம், பொருளாதார சுதந்திரம் பணியிடங்களில் உயர் பதவிகள் இவைகளெல்லாம் நல்ல மாற்றங்களை சமுதாயத்தில் ஏற்படுத்தியிருந்தாலும், ஒரு ... Full story

கவிக்குயிலின் கவிமுகம்!

கவிக்குயிலின்  கவிமுகம்!
    சரோஜினி நாயுடு (1879 - 1949) இந்திய ஆங்கிலக் கவிஞர், சுதந்திரப் போராட்ட வீரர், பெண்ணுரிமை, அரசியல் ஆர்வலர், சொற்பொழிவாளர், மற்றும் நிர்வாகி இந்திய தேசிய காங்கிரஸ் முதல் பெண் தலைவர், மற்றும் முதல் இந்திய மாநில கவர்னராக இருந்தவர். இளமையில் எளிதில் உணர்ச்சிவயப்படுகிற ஒரு பெண்ணாகவும் இருந்திருக்கிறார். “ எம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக காடுகள் மற்றும் மலைக்குகைகளின் காதலர்களாகவும், பெரிய கற்பனாவாதிகளாகவும், அறிஞர்களாகவும், பெருந்துறவிகளாகவும் கூட இருந்துள்ளார்கள்” என்ற இவரது வாதத்தின் ... Full story

உழைப்புக்கேத்த ஊதியம்.. ஒழுக்கத்துக்கேத்த சேமிப்பு!

உழைப்புக்கேத்த ஊதியம்.. ஒழுக்கத்துக்கேத்த சேமிப்பு!
    வண்டிக்கார பழனியம்மாள் - சிறப்பு நேர்காணல் அன்றாடம் ”வீட்டில் மாடாய் உழைத்து ஓடாய் தேய்கிறேன்” என்று குளுகுளுவென்று மின்விசிறியின் கீழ் உட்கார்ந்து கொண்டு வீட்டு வேலைகள் செய்வதற்கு, ஒரு உதவி ஆளையும் வைத்துக் கொண்டு, புலம்பித் தீர்க்கும் பெண்கள் மத்தியில் 31 வருடங்களாக மாடாகவே உழைக்கும் ஒரு பெண்மணியைப் பார்த்திருக்கிறீர்களா? இரண்டு குடம் தண்ணீர் தூக்கினால், உடம்பிற்கு ஒத்துக் கொள்வதில்லை, டாக்டர் என்னை கனமான பொருட்கள் தூக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள் என்று ... Full story

வெண்ணிலவில் ஒருகருமுகில்! (34)

வெண்ணிலவில் ஒருகருமுகில்! (34)
  பவள சங்கரி அமெரிக்காவிலிருந்து, இந்தியா வந்து சேரும் அநத நீண்ட பயணம் துளியும் சலிப்பு தட்டவில்லை இருவருக்கும். தங்களின் காதல் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் உன்னத தருணம் அல்லவா அது! இத்தனை நாட்கள் பட்டாம்பூச்சியாய் படபடக்கும் அந்த கண்களும், குழந்தைச் சிரிப்பும், கன்றின் துள்ளலும் எங்குதான் மறைத்து வைத்திருந்தாளோ தெரியவில்லையே என்று, தன் தோளின்மீது தலைசாய்த்து சுகமாக உறங்கும் அந்த வளர்ந்த குழந்தையை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். தன் செய்கை தனக்கே சங்கடத்தை ஏற்படுத்த மெல்லிய ... Full story

காற்றில் ஆடும் தீபங்கள்

காற்றில் ஆடும் தீபங்கள்
    பவள சங்கரி வாழ்வியல் வண்ணங்கள் (2)   நிறம் மாறிய பூக்கள்! கருப்பினவாதத்தின் உச்ச நிலையில் தம் பள்ளிப் பருவத்தில் தாம் பட்ட துயரில் மனம் நொந்து, ஒதுக்கப்பட்ட சிறுவனாக, பலூன் விற்கும் தன் தாத்தாவிடம் சென்று முறையிட, அவரும் மற்ற பலூன்களுடன் ஒரு கருப்பு வண்ண பலூனில் சற்று காற்றை அதிகமாகவே பிடித்து, மேலே பறக்க விட, அந்த பலூன் மற்றவைகளைவிட மிக உயரமாக பறக்க ஆரம்பிக்கிறது.. அதைக்கண்ட அந்த சிறுவனின் மனதில் உற்சாகம். அப்படி என்றால் இந்த கருமை நிறம் என் செயல்களுக்குத் தடையில்லையா என்று ... Full story

வெண்ணிலவில் ஒருகருமுகில்! (33)

வெண்ணிலவில் ஒருகருமுகில்! (33)
   பவள சங்கரி மாறனின் அம்மா, மங்களம் சாமி கும்பிட்டுவிட்டு கோவிலிலிருந்து வெளியே வந்து கொண்டிருக்கிறார். ஒத்தையடிப் பாதை வழியாக நடந்து வந்தே ஆக வேண்டும். திடீரென்று சாலையோர தோட்டத்திலிருந்து கருநாகம் ஒன்று சீறிப்பாய்ந்து மளமளவென்று வெளியே வந்துவிட்டது. மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தவர்கள் காதில் புஸ்...... புஸ் என்று ஒரு சத்தம் வித்தியாசமாக வர இருவரும் சட்டென்று திரும்பிப் பார்க்க, அங்கு கருநாகம் ஒன்று மூன்று சுற்று போட்டு தலையை உயர்த்திக் கொண்டு படம் எடுத்து ஆடிக்கொண்டிருந்தது. பகீர் என்றது இருவருக்கும். அந்த நாகத்தின் பார்வை முழுவதும் மங்களத்தின் மீதே ... Full story

காற்றில் ஆடும் தீபங்கள்

காற்றில் ஆடும் தீபங்கள்
    பவள சங்கரி  வாழ்வியல் வண்ணங்கள் (1) பெண்களை, குத்துவிளக்கு, குலவிளக்கு என்று கொண்டாடுவது பெரும்பாலும் நம் தமிழர் மரபு. அம்மரபு வழி பண்பாடு பெண்களுக்கென்று ஒரு எல்லைக்கோட்டையும் நிர்ணயித்து வைத்துள்ளது. அந்த எல்லைக்கோட்டினுள் வாழ்த் தெரிந்த பெண்மகள், தம் சுய விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடாமல் ஒரு தவ வாழ்க்கையை மேற்கொண்டு காலத்தை கடத்தி வந்த காலங்கள், பெண்களின் வாழ்க்கைக்குப் பாதுகாப்பு என்பது உறுதியான ஒன்றாக இருந்தது. பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம், கல்வியறிவு, என முன்னேற்றமடைய ... Full story

வெண்ணிலவில் ஒரு கருமுகில்! (32)

வெண்ணிலவில் ஒரு கருமுகில்! (32)
  பவள சங்கரி பரிசுப் பொருட்கள் தேர்ந்தெடுப்பது என்பது ஒரு கலை. கொடுக்கப் போகும் மனிதரின் உள்ளம் அறிந்து, அவர் விருப்பம் அறிந்து, தேவையறிந்து அளிக்கப்படும் அந்த பரிசு கொடுப்பவருக்கும், பெறுபவருக்கும் இடையே நெருக்கத்தை அதிகரிக்கும். அதன் விலை மதிப்போ அல்லது தரமோ பேசுவதில்லை. காலம் அறிந்து சூழலுக்கேற்றவாறு கொடுக்கக்கூடிய பரிசுப் பொருள் காலத்திற்கும் நினைவில் நிற்கக் கூடியவை. சில நேரங்களில் இது வேடிக்கையாக மாறிவிடுவதும் உண்டு. தன் தோழிக்கு காதல் பறவைகள் என்றால் பிடிக்கும் என்பதால் அத்துனை நண்பர்களும் விதவிதமாக, பார்க்கும் இடங்களிலிருந்தெல்லாம் வாங்கிக் கொண்டுவந்து குவிக்க வீடே காதல் ... Full story

LEAD, KINDLY LIGHT – மொழிபெயர்ப்பு

 LEAD, KINDLY LIGHT - மொழிபெயர்ப்பு
  சோதிவடிவே தயைகூர்ந்து வழிநடத்து!   ஜான் எச்.நியூ-மேன் - 1833   இளம் துறவியாக, இத்தாலி நாட்டில் பயணம் மேற்கொள்ளும் வேளையில், ஜான் நியூமேன் நோய்வாய்ப்பட்டு, மூன்று வாரங்கள் ஜியோவானியில் ஒரு குடிலில் தங்க வேண்டியதாகிறது. உடல் நலம் பெற்று பேலர்மோவிற்குத் தம் பயணத்தை தொடர்ந்தார். ”என் தங்குமிடத்திலிருந்து புறப்படும் முன் என் படுக்கையின் மீது அமர்ந்து கொண்டு வேதனையுடன் தேம்பியழ ஆரம்பித்தேன். என் செவிலியராக பணியாற்றிய உதவியாளர் அதற்கான காரணத்தைக் கேட்டார். உடல் நலனில் ஏதேனும் ... Full story

செருமனியிலும் இன்றும் வாழும் காந்தி!

செருமனியிலும் இன்றும் வாழும் காந்தி!
  நறுக்.. துணுக்.... (21) செருமனியின் புதிய குடியரசுத் தலைவர் ஜோசிம் கௌக் சென்ற வெள்ளிக்கிழமை நாட்டின் 11வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டபின் தம் நாட்டு மக்களை ஊக்குவிக்கும் பொருட்டும், அவர்கள் தங்கள் அச்சத்தை விட்டொழித்து, ஜனநாயகம் மற்றும் அதன் தலைமையின் மீதும் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளும்படியும், ”தன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே ஒருவர் தம் வாழ்க்கையில் முன்னேற்றமும், வெற்றியும் காண முடியும் என்ற மகாத்மா ... Full story

வெண்ணிலவில் ஒரு கருமுகில்! (31)

வெண்ணிலவில் ஒரு கருமுகில்! (31)
  பவள சங்கரி நண்பர்கள் சேர்ந்து விட்டால் அங்கு கொண்டாட்டத்திற்கு பஞ்சமேது... குடும்பத்தினர்கள், அவரவர்களும் தங்கள் சொந்த கதையையும் சோகக் கதையையும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். குழந்தைகள் அடிக்கும் லூட்டிகள் பெற்றோருக்கு வேண்டுமானால் சமாளிப்பது சிரமமாகலாம். ஆனால் அவர்கள் படும்பாட்டை கேட்பவர்களுக்கு சுவாரசியத்தில் குறைவிருக்காது. குழந்தைகள் எளிதாக தாங்கள் வாழும் இடங்களுக்குத் தகுந்தவாரு தங்களை பழக்கப்படுத்திக் கொள்கிறார்கள். அங்கிருக்கும் மற்ற குழந்தைகளைப் பார்த்து சகல பழக்கங்களையும் கற்றுக் கொள்ளத் தயங்குவதும் இல்லை. நாகரீகத்தில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில், நம் நாட்டின் சூழலில் வளர்ந்த பெற்றோர்களின் குழந்தைகள் அங்கிருக்கும் குழந்தைகள் ... Full story

அக்கக்கூ……..

அக்கக்கூ........
  பவள சங்கரி அக்கக்கூ... அக்கக்கூ..... அக்கக்கூ.....களத்து மேட்டில் கானாங்குருவி ஒன்னுகசிந்துருகி காதலனின் வரவிற்காய்தவமிருக்க, திசைமாறிய புள்ளதுபேசிய மொழிகள் பலவும் சிந்தையை நிறைத்து பேதலித்தபுத்தியும் நொந்த மனமும்கொண்ட பேதை அவள்நட்ட கல்லாய் நலிந்து நிற்கஆம்பி பூத்த வரப்பதனில்ஆனந்தமாய் காகலூகம் ஒன்னுகருத்தாய் கதைபாடி சேதிசொல்லஆம்பரியமாய்க் கண்டதும் பற்றிக் கொள்ளும்மானுடக் காதலது விட்டவுடன்தொற்றிக் கொள்ளும் மற்றுமொரு துணையை!புள்ளின் இனமோ தனிமையில் வாடினாலும்துணைவேறு ... Full story

கோடை மழை!

கோடை மழை!
பவள சங்கரி நறுக்.. துணுக்...... (20) புற்று நோய் என்றாலே அதன் வலியின் கொடுமையைப் போன்றே, அதற்கான மருந்துகளின் விலையின் சுமையும், அவர்களைப் பராமரிக்கும் குடும்பத்தாருக்கு அதே அளவு வேதனை அளிப்பதகாவே இருக்கிறது. ’நெக்ஸ்வார்’ என்ற, சிறுநீரக மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்கான மாத்திரைகள் , 120 மாத்திரைகள் கொண்ட பெட்டியை,பேயர் என்ற பன்னாட்டு மருந்து நிறுவனம், இந்தியாவிற்கு ரூ2.84 லட்சத்திற்கு விற்று வந்தது. ஹைதராபாத் நகரைச் சேர்ந்த ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்குக் காப்புரிமைச் சட்டத்தின், சிறப்புச் ... Full story

வானில் வண்ண ஒளி வெள்ளம்!

வானில் வண்ண ஒளி வெள்ளம்!
  பவள சங்கரி நறுக்... துணுக்.....(19) பல ஆண்டுகளுக்குப் பிறகு பூமியை காந்தப் புயல் தாக்கியது. இந்த காந்தப் புயல் ஐரோப்பிய நாடுகளின் வட முனையில் உள்ள அயர்லாந்து, இங்கிலாந்தின் வட பகுதியான ஸ்காட்லாந்து, நார்வே ஆகிய பகுதிகளைத் தாக்கியது. அப்போது வானில் நீலம், பச்சை வண்னங்கள் கலந்த ஒளி வெள்ளம், மின்னல் போல தோன்றியது. நாசாவைச் சார்ந்த விஞ்ஞானிகள் அதிநவீன தொலை நோக்குக் கருவிகள் மூலம் இதனைப் பதிவு செய்துள்ளார்கள். சூரியனில் நேற்று முன் தினம் கரோனா பிளாஸ்மா ... Full story

மனித நேயச் சிந்தையின் உயிர்ப்பு!

மனித நேயச் சிந்தையின் உயிர்ப்பு!
  பவள சங்கரி அந்த நான் இல்லை நான் - கவிதை மலர் மதிப்புரை.  ஒருவரை ஒருவர் எழுதிக் கொள்கிறோம்! கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் கவிதையுடனான உறவு தொடங்கிய விதம் மிகச்சுவையான ஆரம்பம்....... ”அந்த நான் இல்லை நான்” என்ற கவிதைத் தொகுப்பில்.”புதுக்கவிதைப் புனலில் ஆடும் இவர், மரபுக் கவிதை மழையிலும் நனைபவர்” என்று கவிஞர் க.து.மு.இக்பால் அவர்களின் ... Full story
Page 1 of 41234
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.