- Saturday, November 26, 2011, 15:32
- செய்திகள்
- 0 views
வீரமாமுனிவரின் 331ஆவது பிறந்த நாள் விழா, சென்னை அண்ணா சாலையில் உள்ள வி.ஜி.பி வெற்றி மாளிகையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வி.ஜி.பி உலகத் தமிழ்ச் சங்கமும் வீரமாமுனிவர் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய இந்த விழாவில் வீரமாமுனிவரின் திருவுருவப் படத்தை சென்னை-மயிலை உயர் மறைமாவட்டப் பேராயர் டாக்டர்.ஏ.எம்.சின்னப்பா திறந்துவைத்தார்.
வீரமாமுனிவரின் தமிழ்ப் பணியை தம் இலக்கியப் பொழிவுகளில் வெகுவாகப் பரப்பி வரும் எழுச்சிக் கவிஞர் டாக்டர் எழில்வேந்தன் அவர்களுக்கு வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர்.கோ.விஸ்வநாதன் ‘வீரமாமுனிவர் விருது’ வழங்கிச் சிறப்பித்தார். டாக்டர் எழில்வேந்தன் எழுதிய ‘மங்கையராய்ப் பிறப்பதற்கு..’ என்ற ...
Full story
- Thursday, May 5, 2011, 9:53
- பொது
- 0 views
தகவல் - எழுச்சிக் கவிஞர் எழில்வேந்தன்
Full story
- Wednesday, August 25, 2010, 8:26
- கவிதைகள்
- 0 views
எழுச்சிக் கவிஞர் எழில்வேந்தன்
எழிலரசி: இந்தியத்தாய் பெற்று விட்ட
இறைஅருளோ, பெரும் பேறோ என்ன வென்பேன்.
கழிவிரக்கம் மிகக்கொண்ட கன்னித் தாயோ,
காசினியில் வந்துதித்த கடவுள் தானோ,
'வழியோரம் வதைபட்டுச் சாவோர் எல்லாம்
வாழ்வதற்குப் பிறந்தவர்தாம்' என்று ணர்த்த
அழிவில்லா ஆண்டவன்தான் அனுப்பி வைக்க
அன்னை தெரசென்று வந்த தூதர் தானோ!
என்னவென்பேன் இவள்பிறப்பை பெற்ற நாட்டை
யூகோசு லோவியா நாட்டு மண்ணில்
அன்னை இவள் தெரசாவாய் பிறந்தாள் அன்று
அவள்அருளைப் பெற்றதிந்த நாடு இன்று
பன்னிரண்டு வயதினிலே, சாவோர்க் கெல்லாம்
பணியாற்ற விரும்பிவிட்டாள், பாவை அன்றே.
கன்னித்தாய் ஆகிஇன்று கல்கத் தாவில்
கனிவோடு பணியாற்று கின்றாள் ...
Full story