- Monday, May 14, 2012, 4:54
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
ஐயப்பன் கிருஷ்ணன்
குயிலின் ஓசைக்கு உதவுவதாய் எண்ணி
குழலை எடுத்து ஊதப் போனான்...குழல் மட்டும் போதாதென்று கூடவே மத்தளம்வேணுமென்றான்
மத்தளம் வேகம் அதிகரிக்ககுழலின் ஓசையும் கூக்குரலாகபாவம் குயிலும் பறந்து போனது
குயில் மீண்டும் வருமென எண்ணிகுழலூத அவன் காத்திருக்கிறான்மத்தளக்காரனும் மருகி நிற்கிறான்
மருண்ட குயில் மறுபடி வருமா எனமரத்தில் இலைகள் சலசலக்கின்றன
படத்திற்கு நன்றி
http://flutesndrumsdonaghadee.webs.com/ Full story
- Friday, February 24, 2012, 12:15
- நுண்கலைகள், வண்ணப் படங்கள்
- 0 views
ஐயப்பன் கிருஷ்ணன்
வரவேற்கும் அழகான கொத்துப்'பூ'..
மழலையின் மயக்கும் சிரிப்'பூ'..
குறும்புப் பார்வையின் குறுகுறுப்'பூ'..
தட்டாரப்பூச்சியின் துறுதுறுப்'பூ'..
இலையா?.. பூச்சியா? எது ...
Full story
- Tuesday, February 7, 2012, 17:44
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
ஐயப்பன் கிருஷ்ணன்
சண்டையின் போதெழுந்த சுருக்கென்ற கோபத்தில் வெளியேறிச் சென்று தனெக்கெனத் துணையாய் என்றோ ஒப்புமையிட்ட பழைய நிலவொன்றைக் கையில் வைத்திருந்தாள்
பக்கத்திலேயே சில மான்களும், மீன்களும் பறவைகளுமென.
கடந்து வந்த காலங்களில் அவை மட்டும் அப்படியே மாறாமல் இருக்கிறது அவளின் நினைவேட்டில்.
படத்திற்கு நன்றி:
http://nature.desktopnexus.com/wallpaper/576630 Full story
- Tuesday, February 7, 2012, 11:09
- சிறப்புச் செய்திகள், பொது
- 0 views
நண்பர்களே,
போட்டியில் கலந்து கொள்ள முடிவு தேதி பிப்ரவரி 10 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இன்னும் தங்கள் படைப்புகளை அனுப்பாதவர்கள் அனுப்பலாமே. போட்டியின் முடிவுகள் மார்ச் மாதம் முத்ல் வாரத்தில் வெளிவரும். கலந்து கொண்டவர்களுக்கும், கலந்து கொள்ளப் போகிறவர்களுக்கும் வாழ்த்துகள்!
புத்தாண்டில் முதல் முயற்சியாக புற்றுநோய்விழிப்புணர்வு குறித்த இந்த போட்டிகளுடன் நேசம் தன் பணியை துவங்குகிறது. மார்பகம், கர்ப்பபைவாய், ரத்தம், எலும்பு, நரம்பு, தொண்டை, நுரையீரல் என்று உடம்பில் எந்த பாகத்திலும் ...
Full story
- Saturday, January 28, 2012, 12:23
- home-lit, இலக்கியம், கவிதைகள்
- 0 views
ஐயப்பன் கிருஷ்ணன்
உன் சிறகின் ஓர் இழை பற்றிஉன்னோடு பறந்திடவேதுடிக்கிறது என் உள்ளம்
உன்னைத் தீண்டவென்று ஆவலுடன் எழுமென் கைகளுக்குத்தூது வரும் நாளொன்றில்கரம் பற்றென்கிறது மனம்.
மனமது தினம் தினம் உன் வருகை எதிர் பார்த்துஉயிர்ப் பறவையின் சிறகசைப்பைநீ கொண்டு செல்லும் நாளுக்காய் வாடி நிற்கிறது உயிர்.
படத்திற்கு நன்றி:
http://www.picturesdepot.com/wallpapers/12595/love.html Full story
- Saturday, January 28, 2012, 9:28
- சிறப்புச் செய்திகள்
- 0 views
புத்தாண்டில் முதல் முயற்சியாக புற்றுநோய்விழிப்புணர்வு குறித்த இந்த போட்டிகளுடன் நேசம் தன் பணியை துவங்குகிறது. மார்பகம், கர்ப்பபைவாய், ரத்தம், எலும்பு, நரம்பு, தொண்டை, நுரையீரல் என்று உடம்பில் எந்த பாகத்திலும் புற்றுநோய் வரலாம். இதை கண்டறிவது என்பது கொஞ்சம் சிரமமான காரியம் என்றாலும் சில சோதனை அல்லது அறிகுறிகள் மூலம் ஸ்க்ரீனிங் எனப்படும் புற்றுநோய்கண்டறிதல் சோதனையை செய்வது நல்லது. 40 வயதுக்கு மேல் முழு உடல் பரிசோதனை செய்வது போல் அனைவரும் ஆரம்பகட்ட ...
Full story
- Thursday, January 5, 2012, 13:13
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
ஐயப்பன் கிருஷ்ணன்
விழி திறந்து வீழ்ந்த கிணற்றினிருந்து மீண்டு எரி கொள்ளித் தாண்டி இடர்களைக் கண்டு போராடிக் களைத்த வேளையில் கன்னத்தைத் தடவிச் செல்கிறது மணங்கமழ்தலுடனான தென்றல் களித்தது மனம் எத்தனை இப்படிக் கண்டேனென்று கைக்கொட்டிச் சிரித்து நகர்கிறது காலம்!!
படத்திற்கு நன்றி:
Full story
- Saturday, July 2, 2011, 10:47
- கவிதைகள்
- 1 views
ஐயப்பன் கிருஷ்ணன்
கருவண்டின் கண்ணொத்த கருஇருளை வழித்து மனதில் பூசிக் கொண்டாயிற்று இனியவள் வரலாம்...
கரும்பூச்சில் இனி தெரியாது அவள் முகம்...
மெல்லத் தின்று கொண்டிருக்கிறது கருநீலம் என்னை.
செந்தீப் பிழம்புகளும் பின்பு என்னை விழுங்கும்
நாளையும் அவள் வரலாம் வெண்சாம்பல் தனைப் பார்க்க மனதோடு வெந்து சாம்பலாக
>படத்திற்கு நன்றி
Full story