Author Archive

Page 1 of 212

செரியாக் கல்வியின் சுமை-16

செரியாக் கல்வியின் சுமை-16
அவ்வை மகள் இங்கு பள்ளிகளுக்குள் பன்றி வரும், நரி வரும்!! பத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் பற்றி இரு வாரங்களாக நாம் தொடர்ந்து பேசிவருகிறோம் ஏனெனில் பிரச்சனையின் தீவிரம் அத்தகையது. நாம் இவ்விஷயத்தில் இதுகாறும் பேசியிருக்கிற விஷயங்களை ஒரு துரித மீள்பார்வையாகப் பார்த்து விட்டு மேலே தொடருவோம்:  (1)    குழந்தைகளின் பாடப்புத்தகங்களைக் குழந்தைகள் வீட்டிலிருந்து தாமே பள்ளிக்குச்  சுமந்துகொண்டு சென்று கற்கவேண்டிய  நிலையை ... Full story

அன்னைக்கு வணக்கம்

அன்னைக்கு வணக்கம்
  அவ்வை மகள் இயற்கைக் கொடைஎன்பர் இறைவன் அருளென்பர் பிறப்பின் ஊற்றென்பர்பிறவிப் பயனென்பர் பாசப்பேழைஎன்பர் விசுவாசக் கோட்டைஎன்பர் பேசும் தெய்வமென்பர் நேசக் குன்றென்பர்அணை இவளென்பர் அரண் இவளென்பர் அன்பு இவளென்பர் அமைதி இவளென்பர் ஆற்றல் இவளென்பர் தேற்றல் இவளென்பர் உறுதி இவளென்பர் ஊக்கம் இவளென்பர் இரக்கம் இவளென்பர் நெருக்கம் இவளென்பர் தியாகச் சுடரென்பர் மனந் ... Full story

செரியாத கல்வியின் சுமை – 15

செரியாத கல்வியின் சுமை – 15
அவ்வை மகள் பைண்டர் எனும் எளிய ஏற்பாடுஒரு ஆண்டுக் (year-long course) கல்வியாக குழந்தைகள் ஒவ்வொரு பாடத்தையும் படிக்கிற காரணத்தால், நிறைய நோட்டுப் புத்தகங்கள் தேவைப்படுகின்றன, அது மட்டுமல்லாது, நாம் ஏற்கனவே பார்த்தது போல, வீட்டுப் பாடம், கிளாஸ் நோட்ஸ், இத்யாதிகளுக்காக நிறைய நோட்டுப் புத்தகங்கள் கோரப்படுகின்றன எனவும் பார்த்தோம். இவற்றைக் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் வீட்டிலிருந்து பள்ளிக்கும், பள்ளியிலிருந்து வீட்டிற்கும் சுமக்க வேண்டியிருக்கிறது. சுமக்கும் பாரம் குழந்தைகளுக்கு ... Full story

செரியாத கல்வியின் சுமை – 14

செரியாத கல்வியின் சுமை - 14
அவ்வை மகள்தாட்கள் கொண்டே சாதிக்க முடியும்! புத்தக-நோட்டுப் புத்தக மூட்டைகள் சுமந்தபடி பள்ளிக் குழந்தைகள் போவதும் வருவதும் குழந்தைகளுக்கு மட்டுமா தொந்திரவு? அவர்கள் பயணிக்கும் பேருந்துகளில் இப்பைகளால் ஏற்படும் இடைஞ்சல் எத்தனை? – நெருக்கடி எத்தனை? – சிறிதும் பெரிதுமாகப் பேருந்துக்குள் ஏற்படுகிற விபத்துக்கள் எத்தனை? பொதுப்பேருந்தில்பயணம் செய்தாக வேண்டிய குழந்தைகள் ஒவ்வொரு நாளும் பிற பயணிகளிடம் வசவு வாங்காமல் பள்ளி சென்று வருவதில்லை என்றால் இதற்குக் ... Full story

செரியாத கல்வியின் சுமை – 13

செரியாத கல்வியின் சுமை – 13
அவ்வை மகள் பிரமாணப் பத்திரமாக ஒரு சேர்க்கை விண்ணப்பம் சென்ற பகுதியில், சென்னை நண்பர் அனுப்பியிருந்த பள்ளிக்கூடச் சேர்க்கை விண்ணப்பத்திலே கேட்கப்பட்டிருந்த கேள்விகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அந்த விண்ணப்பப் படிவத்தில் இருந்த பல கேள்விகளில் ஒரு பகுதி: 1) பள்ளிக்குக் குழந்தையை அனுப்புவதில் நீங்கள் என்ன எதிர்பார்ப்பு வைத்திருக்கிறீர்கள்? (அ) பாடங்கள் மட்டும் படித்தல் போதும்(ஆ) படிப்புக்குக் கூடுதலான கற்றலும் வேண்டும். (2) குழந்தை ஒரு ... Full story

“ரோபோப் பூனை” வியாதி: மனிதர்களுக்கு ஆபத்து?

“ரோபோப் பூனை” வியாதி: மனிதர்களுக்கு ஆபத்து?
    ரேணுகா ராஜசேகரன்PhD (Chem); PhD (Education); PhD(Admin)Educator and Professor, USA நேற்று முன் தினம் வந்த செய்தி: இங்கிலாந்தில், பூனைகள் மர்மமான முறையில் நடக்கின்றன. வால் முறைப்பாய் நீண்டு நிற்க, உடம்பை நீளவாக்கில் இழுத்தபடி, நீட்டிய காதுகளுடன், கண்கள் அகலத் திறந்து இருகண்களும் எதிர்வருவதை விழிப்புடன் உற்று நோக்கியபடி இருக்க, பின்னங்கால்களை முன்னோக்கி இழுத்து வைத்துக் கொண்டு எதன் மீதோ பாய எத்தனிக்கும் தோரணையுடன் பூனைகள் நிற்கலாகின்றன, எச்சரிக்கையாய் நடக்கலாகின்றன. முதலில் ஒரு பூனை - இரு பூனை என ஆரம்பித்தது ... Full story

செரியாத கல்வியின் சுமை – 12

செரியாத கல்வியின் சுமை - 12
அவ்வை மகள் படிப்பில் சிறந்த குழந்தைகள் மட்டுமே வேண்டும் என்று கல்விக்கூடங்கள் எவ்வாறு கோர முடியும்? எந்த ஒரு பெற்றோரும் தமது குழந்தை தம்மை விடவும் கூடுதலான கல்வியறிவு பெற்றுச் சிறக்க வேண்டும் என்றே பிரயாசைப்படுவர். “தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் இனிது தானே! இது பெற்றோர்களின் இயற்கையான சுபாவம். இந்த ஒரு சுபாவம் தான், இந்த ஒரே ஒரு சுபாவம் தான் கல்வி நிறுவனங்களுக்கு வெல்லக் கட்டியாக ... Full story

பாதைகளும் மீள்பார்வை தரும் புத்தாண்டு

பாதைகளும் மீள்பார்வை தரும் புத்தாண்டு
அவ்வை மகள் சந்தமுறப்பாடுகிறேன் முழுமனதாய் அந்தாதிஅந்தாதிச் சந்தமெந்தன் செல்கதிக்குச் சிந்தைக்கு சிந்தை துரகமெனவோடியப் பிந்தை நிலைநிலையாடிப் படம் காட்டவென் சித்தாம்புயத்துபுயமிருந்தும் கால்கையிருந்துமன்றொன்றும் ஒன்றும் வில்க்ககிலீர் வாலாபாக் குண்டுமழைமழைக்குருதி மண்ணைச் செம்மைச் சூளையிடசூளையிடம்பெயலாக் கரம் சுற்றக் கண்முன்னேமுன்னே ஆங்கெழுந்த மத்துகளில் துடித்தெழுந்து எழுந்தழைக்கா மரணம் பிழைக்ககிலீர் பலி வீணே!வீணேபோகுமோ அவர்தம் பாடுகளும் பாதைகளும்பாதைகளும் மீள்பார்வைதரும் புத்தாண்டு பிறந்திடவும்பிறந்திடவும் நந்தனத்தில் முந்தைநிலை நினைவகற்றோம்நினைவகற்றோம் வையத்து ... Full story

செரியாத கல்வியின் சுமை..! (11)

செரியாத கல்வியின் சுமை..! (11)
அவ்வை மகள் கசாப்புக் கடையைப் போல–கருவாட்டுக் கடையைப் போல மூன்றே வயதான, எல்.கே.ஜி வகுப்பில் உள்ள, குழந்தை ஐந்து என்கிற ஒரு எண்ணைக் கண்ணாடி பிம்பமாக (mirror image) எழுதி இருப்பதைக் குற்றமாகக் கருதியதோடு மட்டுமல்லாது, இவ்வாறு மாற்றி எழுதியதால் குழந்தை சொல் பேச்சு கேட்காத அடங்காப் பிடாரி என்றும் படிப்பிலே வீக் என்றும் குழந்தைக்குப் பட்டம் சூட்டி, அவனை டியூஷனில் போட வேண்டும் என்று ஆணையிட்டதோடு மட்டுமல்லாது, "டியூஷனில் வேறு விதமாகச் சொல்லித் தருவீர்களா" என நான் கேட்டதை, ... Full story

செரியாத கல்வியின் சுமைகள் (10)

  அவ்வை மகள் சேதாரமாகும் நுண்மான் நுழைபுலம் சென்ற பகுதியில் நாம் கண்டது: கணக்கு போடும்போது ஒவ்வொரு தனி மனித மூளையும் தனித்துவ வழியில் இயங்குகின்ற இயற்கையைப் புரிந்து கொள்ளாமல் ஆசிரியர்கள் தாம் விரும்பும் வகையில் கணிதச் செயல்பாட்டை தமது மாணவர்கள் நிகழ்த்த வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இதில் ஒவ்வொரு மாணவன் அல்லது மாணவியின் மூளைக்குள்ளே கணக்கு நிகழ்த்துகிற இரசாயன மாற்றங்களை - உளப்பாங்கு பேதங்களை – உணர்ச்சி நிலைகளை அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை! எனது மகன் எல்கேஜி வகுப்பில் படித்தபோது நடந்த நிகழ்ச்சி இது. சென்னையில் ஒரு பள்ளி. அவ்வப்போது ... Full story

“செரியாத “ கல்வியின் சுமை..! (9)

“செரியாத “ கல்வியின் சுமை..! (9)
அவ்வை மகள் சென்ற பகுதியில் இரண்டு முக்கிய வினாக்களை எழுப்பினோம். அவையாவன: நூற்றுக்கு நூறு வாங்குகிற மாணவர் உண்மையிலேயே , அறிவாளியா? நூற்றுக்கு நூறு வாங்காத மாணவர் அறிவிலியா? இவ்வினாக்களுக்கான விடையின் விவாதத்திற்கு மீண்டும் வருவோம். உலக இயக்கத்திற்கு உந்து சக்தியாய் அமைய ஆலைகளும், தொழிலும், வணிகமும், கலைகளும், நூலும், ஆன்மீகமும், இலக்கியமும், அரசியலும், ஜோசியமும், காவலும், இராணுவமும், கப்பலும், வானூர்திகளும், சட்டமும் தேவை. இவை யாவும் சாதாரணத் தேவைகள் ... Full story

“செரியாத “ கல்வியின் சுமை..! (8)

“செரியாத “ கல்வியின் சுமை..! (8)
  அவ்வை மகள் செரியாத கல்வியின் சுமைகள் கற்பவரின் “அறிவு” என்கிற ஒன்றை நமக்கு வசதியான வகையில் பார்த்தபடி அதனின் நமக்கு வசதியான ஒரு சில பரிமாணங்களை மட்டுமே கவனித்து அப்பரிமாணங்களை, நமக்கு வசதியான வகையில் அளவீடு செய்து அந்த அளவீட்டின் அடிப்படையில் கற்பவர்களை மதிப்பீடு செய்கிறோம். எண்களுக்கு ஏற்ற மதிப்பீடு என்பதுதான் மதிப்பெண்களின் வேலை மதிப்பெண்கள் தருவதன் வேலை. ஆனால் நடைமுறையிலோ மதிப்பீடு என்கிறது மதிப்பு என்பதாக மாறிப் ... Full story

உலகோர் உள்ளம் நிறைந்த அன்னை

உலகோர் உள்ளம் நிறைந்த அன்னை
அவ்வை மகள் "பரம்பொருளுக்கு மட்டுமே நான் அடிபணிபவள்; எந்த எஜமானனுக்கும், எந்த விதிக்கும், எந்தச் சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் நான் அடிமை செய்வதில்லை. எனது சித்தமும், எனது வாழ்வும், நான் எனும் சுயமும் பரம்பொருளுக்கு அர்ப்பணமாகி விட்டன. அப்பரம்பொருளின் விருப்பம் அதுதானென்றால், எனது இரத்தம் முழுவதையும் சொட்டுச் சொட்டாய் வழங்க நான் என்னைத் தயார் செய்து கொண்டு விட்டேன். பரம்பொருளின் சேவையில் எந்த ஒன்றும் தியாகமில்லை. அது ஒரு பேரானந்தம்." இது அன்னை ... Full story

“செரியாத “ கல்வியின் சுமை..! (7)

“செரியாத “ கல்வியின் சுமை..! (7)
அவ்வை மகள்  கணக்கு போடணும்னா ஆகாயம் மாதிரி அகலம் வேணும். பாயின் கேர் எனும் அலாதியான போக்கு கொண்ட கணித மேதையைப் பற்றிப் பேசினோம். பாயின் கேர் மற்றும் ராமானுஜனின் கணித வரலாற்றுச் சிந்தனைகளை கவனிப்பது நல்லது எனவும் பார்த்தோம். இவ்விருவரின் கணித வரலாற்றுச் சிந்தனைகளைக் காணும் முன்னர் இராமானுஜன் தொடர்பான சில விஷயங்களையும் இன்ன ஒரு சில விஷயங்களையும் அறிந்து கொள்ளுவது நன்று. பாயின் கேர் போன்று ... Full story

தாய்மை தவறும் அம்மாக்கள்

தாய்மை தவறும் அம்மாக்கள்
அவ்வை மகள் எவரொருவருக்கும் தாய் போல் ஒரு உறவை எவராலும் தர முடியாது. மீண்டும் ஒரு தாய் வயிற்றில் பிறக்கவா போகிறோம் என்று, ஒரு தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் தமக்கிடையே பேதமிருப்பினும், அவற்றை ஒதுக்கித் தள்ளி ஒற்றுமையுடன் வாழ்வது கண்கூடு. அன்பென்றாலே அது அம்மா தான். மற்ற உறவுகளெல்லாம் சும்மாதான்!! ஆனால் மாறி வருகின்ற உலகச் சூழல்களில் - அம்மாக்களின் பாரம்பரியக் குணாதிசயங்களான பொறுப்புணர்வு, கடைமையுணர்வு - கட்டுப்பாட்டுக் கோட்பாடு ஆகியன ... Full story
Page 1 of 212
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.