Author Archive

Page 1 of 3123

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (6)

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்   (6)
    சக்தி சக்திதாசன்  முந்தைய மடலைப் படிக்க அன்பினியவர்களே !   இதோ ஆறாவது மடலுடன் இதயத்தில் எழும் விடையற்ற வினாக்களுடன் உங்களைச் சந்திக்கிறேன். என்ன இது? வினாக்கள் என்கிறான், விடைகள் என்கிறான், புரியவில்லையே!  என்று எண்ணுவது தெரிகிறது. நாம் பல செய்திகளைப் பத்திரிகையில் பார்க்கிறோம், தொலைக்காட்சியில் ரசிக்கிறோம், ஊடகங்களின் மூலம் உள்வாங்கிக் கொள்கிறோம். ஆனால் அவற்றின் ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் …(5)

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் ...(5)
  சக்திசக்திதாசன் அன்பினியவர்களே ! 1976ம் ஆண்டுக்குப் பின்னர் கடுமையான வறட்சிக்குள்ளான இங்கிலாந்து மக்களின் மனங்களும் வறண்டு விட்டதோ என்று எண்ணிக் கொண்டிருந்த வேளை . . . . தாழ்ந்த காலநிலை அழுத்தத்தை அட்லாண்டிக் சமுத்திரப் பகுதிகளில் இருந்து இங்கிலாந்தை நோக்கி இயற்கை தள்ளியதால், மேகமூட்டங்கள் திரண்டு இயற்கையன்னை கொஞ்சம் கொஞ்சமாய் தன் கண்ணீரைக் கொட்டிக் கொட்டி இம்மண்ணை நனைத்த நிகழ்வு நெஞ்சத்தை நிரப்பியது. துடித்த விரல்களிலிருந்து சொட்டின எழுத்துக்கள்!... Full story

மகாத்மா காந்தியடிகளின் புனித இரத்தம் காசாக்கப்படுவது….?

மகாத்மா காந்தியடிகளின் புனித இரத்தம் காசாக்கப்படுவது....?
    சக்திசக்திதாசன் அன்பினியவர்களே ! நான்கு வாரங்கள் ஓடி விட்டவனவா ? ஆமாம் நான்காவது மடலை உங்களுக்கு வரைந்து கொண்டிருக்கும் போதுதான் நான்கு வாரங்கள் ஓடி விட்டது என்பது புரிகிறது. காலத்தின் ஒட்டம் கனரத வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. எமது வாழ்க்கையின் நீளமும் குறைந்து கொண்டே போகிறது. இந்த வேக ஓட்டத்தின் கணிப்பிலே எமது கடந்தகாலங்கள் எத்தனை வேகத்தில் ஓடியிருக்கின்றன என்பதைக் கணிக்கக் கூடியதாக இருக்கிறது. என்னடா இவன் எதற்கு இத்தனை பீடிகை போடுகிறான் என்று நீங்கள் உங்கள் புருவத்தைச் சுருக்கி வினாவெழுப்புவது புரிகிறது. கடந்தகாலம் ... Full story

கவியரசரின் கானவரிகளுக்குள் காணாமல் போன வேளை

கவியரசரின் கானவரிகளுக்குள் காணாமல் போன வேளை
சக்தி சக்திதாசன் கவியரசரின் அனுபவச் செறிவை, தமிழ்ச் சொல்லாற்றலை, படைப்புத் திறமையை, கவிதைகளின் ஆழத்தைக் கண்டு எத்தனையோ முறை வியந்திருக்கின்றேன். வியந்து கொண்டிருக்கின்றேன். கவிதைகள் எழுதுகின்றோம், ஒருவரின் படைப்பைப் படித்துக் கருத்துச் சொல்லுகின்றோம். ஆனால் ஒரு காட்சியைக் கூறிவிட்டு அந்தச் சூழலுக்கேற்றவாறு, கதையோட்டத்தோடு இணைத்து ஒரு பாடல் அமையுங்கள் என்று தயாரிப்பாளரும், இயக்குனரும் வேண்டுகோள் விடுக்கும் போது, அத்தனைச் சொற்களையும் எந்தக் களஞ்சியத்திலிருந்து எமது கவியரசர் எடுப்பாரோ தெரியாது, ஆனால் அவர் தனது பாடலை ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் ……….. (3)

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் ........... (3)
  சக்திசக்திதாசன் அன்பினியவர்களே ! இவ்வாரம் இங்கிலாந்தின் எண்ணெய்ச் சட்டியில் என்ன கொதிக்கிறது ? "லண்டன்" உலகத்தின் நகரங்களிலே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தலைநகரம். உலகின் பல முன்னனி வங்கிகளின் பொருளாதார பரிமாற்றங்கள் நிகழும் ஓர் பொருளாதார வியாபார ஸ்தலமாக லண்டன் விளங்குகிறது. இத்தகைய ஒரு முக்கிய நகரின் நகரபிதா (மேயர்) எனும் பதவிக்குரிய முக்கியத்துவம் இங்கிலாந்து நாட்டு மக்களிடையே உணரப்படுகிறதா? கேள்விக்குறியாகவே இருக்கிறது. 1965ம் ஆண்டுவரை லண்டன் மாநகர நிர்வாக சபை (London county council) எனும் பெயரில் இயங்கி ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் …….. (2)

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் ........ (2)
  சக்திசக்திதாசன் சனிக்கிழமை (07.04.2012) காலை எழுந்து காப்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது " இந்த ஈஸ்டர் விடுமுறைக்கு என்ன வித்தியாசமாகப் பண்ணலாம்?" என என் மனைவி வினவ இருவருமே மண்டையைப் போட்டுத் துருவினோம். விளைவு ...... காரை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு அண்மித்த ரயில்வே ஸ்டேசனுக்கு அருகில் சென்று காரை நிறுத்தி விட்டு பேருந்துப் பயணத்திற்கான டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு பேருந்தில் ஏறி உட்கார்ந்தோம். பேருந்துப் பயணத்தில் நாங்களிருவருமே சிறு குழந்தைகள் போன்றே மகிழ்வுடன் இரட்டை தட்டுப் பேருந்தில் மேல்தட்டில் அமர்ந்து கொண்டே வெளிக் ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் ….. 1

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் ..... 1
சக்திசக்திதாசன் அன்பினியவர்களே ! பதிவுகள் என்பது காலத்தின் கண்ணாடியாகும். விஞ்ஞானம் காற்றுக் கதியில் வேகமாக முன்னேறிக் கொண்டு இருக்கும் இக்கால கட்டத்திலே நிகழ்காலத்தின் பதிவுகள் பல வழிகளில் பதிவு செய்யப்படுகின்றன. நடப்பனவற்றை அப்படியே பதிவு செய்து சரித்திர உண்மைகளாகக் (Historical facts) காட்டும் வகை ஒருபுறம், கொஞ்சம் சாயத்தைப் பூசி தமக்குக் ஏற்ற வகையில் (Spining the facts) படம் பிடித்துக் காட்டும் வகை ஒருபுறம், நடந்த நிகழ்வினைக் கொஞ்சம் உண்மைகளைச் சுருக்கி (Economical with the truth) சொல்லும் வகை ஒரு புறம் என பலவகையில் இப்பதிவுகள் நிகழந்த ... Full story

கவியரசர் எனும் வானவில்

கவியரசர் எனும் வானவில்
சக்தி சக்திதாசன் சொல்லாமல் புதையும் சோகங்களை சொல்லிப்போகும் வரிகளவை. நில்லாமல் துள்ளும் இதயத்தின் ஆனந்தப் பொழுதுகளை ஆராதித்திடும் வாசகங்கள். புரியாத உணர்வுகளுக்கு வடிகால் அமைத்து அவற்றை நெஞ்சமெனும் தோட்டத்திற்கு நீரூற்ற வைக்கின்ற அற்புத ஆற்றல். இவைகளனைத்தையும் தன்னுள்ளே பெட்டகமாய்ப் பூட்டி வைத்த இயற்கை தந்த அற்புதத் தமிழ்க் கவிஞரே எமது கவியரசர். இவரின் ஆக்கங்கள் எவற்றை எடுத்தாலும் இகத்தை மறந்து நான் அதனுள் புதைந்து போவதென் வழக்கம். தமிழ் இலக்கியம் என்னும் வற்றாத ... Full story

கொஞ்சநேரம் என்னை மறந்து

கொஞ்சநேரம் என்னை மறந்து
சக்தி சக்திதாசன் சங்க கால இலக்கியம் என்பது தேனைப் போன்றது. மலருக்கு மலர் தாவித் திரியும் வண்டு ஒரு தேன் குடத்தினில் விழுந்து விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள், அது தேடி வந்த தேன் அதைச்சுற்றிலும் இருக்கும். ஆனாலும் அதைப் பருக முடியாதபடி அந்தத் தேனினுள் வண்டு அமிழ்ந்து விடுகிறது. அதே போலத்தான் சில வேளைகளில் இலக்கிய நீராட வேண்டும் எனும் வேட்கையில் சுனைகளைத் தேடித்திரியும் நான் கடலினுள்ளே அமிழ்ந்து விடுவது போல ... Full story

காதோடுதான் நான் பேசுவேன்

காதோடுதான் நான் பேசுவேன்
சக்தி சக்திதாசன் உலகில் பெரும்பான்மையாக சராசரி ஆசைகளை மனதில் தேக்கி வைத்து அதன்பால் எழும் சராசரி கனவுகளுக்குள் தம்மைப் புதைத்து வாழ்வோரே எம்மில் பலராக இருக்கிறோம். எம் கனவுகளின் அடிப்படையில் எமது வாழ்க்கையின் லட்சியங்கள் எனச் சிலவற்றை வரையறுத்துக் கொண்டு அவற்றை அடைய எம்மாலான முயற்சிகளை எடுத்துக் கொள்கிறோம். இதுவே உலகில் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கைப் பயணமாகிறது. எம்முடைய வாழ்க்கை வெற்றியானதொன்று என்றோ அன்றி விரக்தியான தோல்வியுற்றதொன்று ... Full story

பூத்திடும் புத்தாண்டு

பூத்திடும் புத்தாண்டு
சக்தி சக்திதாசன் பறந்தோடியது ஒரு வருடம்பாய்ந்து வந்தது புது வருடம்புதுப் புது நம்பிக்கைகளைபொலிவிக்கும் புத்தாண்டு கடந்து செல்லும் வருடத்தினுள்புதைந்து போன கனவுகள்புதிதாய் மீண்டும் அரும்பாகிபுதுமலர்களாய் புத்தாண்டில் மாற்றம் காண்பது இயற்கை நியதிமாற்றி வைப்பது இறையின் கணக்குமனிதன் மனதில் கொள்வது ஒன்றேமங்கா விளக்காய் நம்பிக்கையை கேட்டது கிடைக்கவில்லை என்றுகொடுத்தது திரும்பவில்லை என்றுஎடுத்தது நிலைக்கவில்லை என்றுஎத்தனையோ ஏமாற்றங்கள் இருந்தாலும் அடுத்தொரு வருடம் பிறந்திடும் போதுஅதற்குள் கிடைத்திடும் மகிழ்ச்சிகள் எனும்அசைக்க ... Full story

எல்லாம் இருந்தும் …. எதுவும் இல்லாமல் …….

எல்லாம் இருந்தும் .... எதுவும் இல்லாமல் .......
சக்தி சக்திதாசன் என்ன இது ஒரு புரியாத புதிர் தலைப்பு ? எனப் புருவங்கள் உயர்வது தெரிகிறது. வருட இறுதியிலே இங்கிலாந்திலிருக்கும் ஒரு புலம் பெயர் தமிழனின் பார்வையில் அவ்வருட நடப்புக்களை அசை போட்டுப் பார்ப்பது என் வழக்கம். அந்த அசைபோடுதல் தான் இம்முறை இவ்வடிவத்திலான தலைப்பை எடுத்துள்ளது. காரணம் என்ன என்கிறீர்களா? 2011 சிக்கலான பல கேள்விகளை அரசியல் தலைவர்கள் மத்தியில் குறிப்பாக மேலைநாட்டு அரசியல் தலைவர்கள் மத்தியில் தூக்கிப் போட்டுள்ளது. இங்கிலாந்தைப் பொறுத்தளவில் இவ்வாண்டின் ஆரம்பமே சிக்கல்களுடன் தான் ஆரம்பமாகியது. ஆனால் ஆண்டின் ... Full story

நத்தார் வாழ்த்துக்கள்

நத்தார் வாழ்த்துக்கள்
சக்தி சக்திதாசன்  தேவபாலகன் பிறந்தநாள் தேவன் யேசுவின் பெருநாள் அன்பு வழியின் திருநாள் அகிலம் மகிழும் நன்னாள் முள்ளில் கீரீடம் அணிந்தே முழுமுதற் பொருளை உணர்த்தியவன் சிலுவையில் ஆணியைத் தாங்கியே சிந்தையில் நல்வழி புகுத்தியவன் மூன்று முதுபெரும் அறிஞர் முழுதாய் அவன் பிறப்பறிந்தனர் மாட்டுத் தொழுவமதில் யேசுபிரான் மாதா மடியில் தவழ்ந்தவன் கருணையின் பிறப்பிடம் அறிந்தே கவியரசர் யேசுகாவியம் படைத்திட்டார் இனித்திடும் வகையில் வாழ்க்கையை இயக்கிட இயேசு ... Full story

கண்ணதாசனோடு கலந்த பொழுதுகள்

கண்ணதாசனோடு கலந்த பொழுதுகள்
சக்தி சக்திதாசன் கவிஞன், தத்துவாசிரியன், எழுத்தாளன், இலக்கியவாதி எத்தனை வடிவங்களில் இவ்வினிய மனிதன் என் இதயத்தினில் வலம் வருகிறான்?  அத்தனைப் பாக்களை இத்தரை மீதினில் பத்தரை மாற்றுத் தமிழருக்காய்ப் படைத்திட்ட இக்கவிஞன் மாபெரும் அறிஞனா? முதுகலை ஞானியா?  இல்லையே !  வெறும் எட்டு ஆண்டுகள் மட்டும் கல்விதனைக் கற்று எட்டாக் கவிகளுக்கெல்லாம் எட்டா வகையில் எளிமை மிகப் பாடல்களை யாத்து எத்துணைச் சாதனை படைத்த இக்கவியரசன் தனை என்னெஞ்சில் எண்ணும் ... Full story

பாரதில் மாகவி பாரதி உதித்த தினம்

பாரதில் மாகவி பாரதி உதித்த தினம்
சக்தி சக்திதாசன்============================தரணியில் நீ பிறந்தநாள்தாய் எந்தன் தமிழ்தங்கமாய் ஜொலித்த் நாள்இல்லை உனக்கு செல்வம் ஒன்றும்இருந்தும் சிங்கமென‌இனிய தமிழில் கர்ஜித்தாயே !எத்தனை துயர் கண்டாய்எமதினிய பாரதியே !அத்தனை கணங்களையும்அன்னைத் தமிழ் பாடிஅரவணைத்துக் கொண்ட‌அரிய எம் தமிழ் ஆழி நீவருடங்கள் தோறும் தவறாமல்வந்தேகும் ஜயன் உனக்குப் பிறந்தநாள்வாழும் தமிழ் அன்னை சொந்தங்கள்வகுத்தொட்டோமா ... Full story
Page 1 of 3123
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.