- Saturday, January 14, 2012, 11:48
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
சுகியன்
அவள் வயது முப்பது ஒட்டிய நிறம் வெள்ளை! ஒட்டாத நிறம் சிவப்பு!
மணமான ஐந்து வருடத்தில் கடைசி வரைக் குடி போதையில்லாமல் பார்த்த நாளில்லை அவள் கணவனை!
அவள் துரதிஷ்டம் குழந்தை பாக்கியம் கடைசி வரை கிட்டவில்லை!
மஞ்சள் கழிவை அகற்றினாள் குளிப்பாட்ட வைத்தாள் மருந்து பரிமாறினாள் இரு சக்கர நாற்காலியில் அமர வைத்து வீட்டைச் சுற்றி வலம் வந்தாள் படுக்கை அறையில் ...
Full story
- Thursday, January 12, 2012, 9:09
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
சுகியன்
தண்டவாளத்தைப் போலவே,
கோடிகளில் வாழும் மிருகங்களின் உச்சகட்டக் கோடும்!
வறுமையில் வாடும் மனிதர்களின் உச்சகட்டக் கோடும்!
இணையாமல்
நீண்டு கொண்டே செல்கிறது,
நடுவே குறுக்கும் நெடுக்குமாய் இருக்கும்
நடுத்தர வர்க்கத்தின்
ஏக்கத்தை மட்டும் வைத்து என்ன செய்ய?
Full story
- Tuesday, December 6, 2011, 13:21
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
சுகியன்
பிறந்த மேனியாக வந்து
ஆடை அலங்காரம் செய்து
வாழ்க்கை என்ற படுக்கையை விரித்து
கர்வம் என்ற போர்வையைப் போர்த்தி
மதம் என்ற குறட்டையை உறுமுகிறாயே!
பூமி என்ற சவப்பெட்டியில்
உன் திறந்த மேனி கூட
சாம்பலாக மிஞ்சப் போவதில்லை!
Full story
- Wednesday, November 30, 2011, 12:25
- கட்டுரைகள்
- 0 views
சுகியன்
என் நண்பரின் ஆறு மாதக் குழந்தையைப் பார்ப்பதற்காக அவருடைய வீட்டிற்குச் சென்றிருந்தேன். நண்பனின் உறவினர் அந்தக் குழந்தையைத் தூக்கி, "செல்லக்குட்டி, கன்னுக்குட்டி, சிங்கக்குட்டி...” என்று கொஞ்சிக் கொண்டிருந்தார். சமையல் அறையில் இருந்து குழந்தையின் தாய் ஏதோ முனங்கிக் கொண்டே தேநீர் கொண்டு வந்தார். குழந்தையைக் கொஞ்சிக் கொண்டு இருந்தவர் தொடர்ந்து, “தங்கக்கட்டி..." என்று கொஞ்சும்போது, குழந்தையின் தாயின் முகத்தில் புன்னகையின் பூரிப்பைப் பார்க்க வேண்டுமே! அப்படியொரு சந்தோஷமான முகபாவனை.
பின்னர் நான் ...
Full story