Author Archive

Page 1 of 3123

இதெல்லாம் அண்ணாதுரையை பெர்னாட்ஷாவாக்கிவிடுமா?

இதெல்லாம் அண்ணாதுரையை பெர்னாட்ஷாவாக்கிவிடுமா?
    வெங்கட் சுவாமிநாதன் நினைவுகளின் சுவட்டில் (பாகம் - II (பகுதி - 43)  அந்தக் காலத்தில் ஹிராகுட் / புர்லா முகாம்களில் என்ன தமிழ் தினசரி பத்திரிகை வந்தது, எது எனக்குப் படிக்கக் கிடைத்தது என்று நினைவில்லை. அங்கு யாரும், என்னையும் சேர்த்து, தமிழ் தினசரி பத்திரிகை எதுவும் வாங்கியதாக நினைவில்லை. ஆயினும் நான் ஒரு தமிழ் தினசரி பத்திரிக்கையின் மதிப்புரை பக்கத்தில் தான் இரண்டு புத்தகங்களின் மதிப்புரைகளைப் படித்துப் பார்த்த பின்தான் அவற்றை வரவழைத்தேன்.என்ற நினைவு என்னவோ மறையவில்லை. இரண்டு சிறுகதைத் தொகுப்புகள். ஒன்று ரகுநாதன் கதைகள். ... Full story

பொட்டில் அடித்த மாதிரி மூளையில் பளிச்சிட்டது!

பொட்டில் அடித்த மாதிரி மூளையில் பளிச்சிட்டது!
    வெங்கட்சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில் பாகம் - II (பகுதி - 42) இன்னொரு நண்பரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று இருந்தேன். அவர் பெயர் நினைவுக்கு வருவதாயில்லை. இப்போது தான் என்ன மாயமோ திடீரென்று மின்னல் அடிப்பது போல் நினைவில் பளிச்சிட்டது. அவர் பெயர் சிவ கோபால கிருஷ்ணன். “வாரும். உங்களுக்கு வீடு கிடைக்கிற வரையில் நம்மோடு தங்கலாம்,” என்று அழைத்து வரப்பட்டவர். இங்கே எங்கோ வேலை செய்யறது கிடக்கட்டும். உங்களுக்கு எதிலே இண்டெரெஸ்ட் என்று எங்களில் ஒருவர் கேட்க “பாட்டு” என்றார். அவர். “அடி சக்கை, எங்களுக்கு யாருக்குமே ... Full story

விசித்திரமான விதியின் விளையாட்டுகள்!

விசித்திரமான விதியின் விளையாட்டுகள்!
    வெங்கட் சாமிநாதன்   நினைவுகளின் சுவட்டில் பாகம் - II (பகுதி - 41) ராஜ்காங்பூர், கல்கத்தா சுற்றிவந்த புராணத்தை இவ்வளவு தூரம் நீட்டி முழக்கி சொன்னதில் ஒரு விஷயம் தவறி விட்டது. அது எங்களுடன் இருந்த ஜியார்ஜின் பிரசன்னத்தை. மறந்து தான் போனேன். எங்களுடன் அவரது பிரசன்னத்தை நான் மறந்த போதிலும் அவரது பிரசன்னத்தை மாத்திரம் கவனித்தவர்கள் உண்டு. நாங்களும் அவருடன் இருப்பது அந்த ஜீவன்களுக்கு எப்படி தெரியாமல் போகிறது?, ஜியார்ஜி மாத்திரமே அவர்களுக்கு தெரிவது எப்படி? என்பது எனக்கும் சரி மற்ற நண்பர்களுக்கும் புரிந்ததில்லை.... Full story

கல்கத்தா மாநகர தரிசனம்!

கல்கத்தா மாநகர தரிசனம்!
வெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில் பாகம் - II (பகுதி - 40) நாங்கள் அடுத்து பயணம் சென்றது கல்கத்தாவுக்கு. பஞ்சாட்சரம், மணி, இருவரைத் தவிர எங்களில் வேறு யாரும் பெரிய நகரத்தைப் பார்த்திராதவர்கள். அந்த நாட்களில் அப்படித்தான். எங்களுக்குத் தெரிந்தது எல்லாம் தஞ்சாவூர், திருநெல்வேலி, மாயவரம் போன்ற டவுன்கள் தான். வாஸ்தவம். சென்னை என்ற பெரு நகரம் ஹிராகுட்டுக்கும் எங்கள் அவரவரின் சொந்த கிராமம் அல்லது ஊருக்குமான இடையில் இருந்தது தான். அதைக் கடந்து தான் ... Full story

அமைதியும் சாந்தமும் நிறைந்த நாட்கள்!

அமைதியும் சாந்தமும் நிறைந்த நாட்கள்!
  வெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில் -  பாகம் - II (பகுதி - 39)  அடுத்த நாள் காலை ராஜ்காங்பூருக்குப் போனோம் என்பது நினைவில் இருக்கிறது. இந்தப் பயணம் முழுவதிலும் கலுங்காவைப் பற்றி ஜார்ஜ் தன்னிச்சையாகவே தகவல் அறிந்து கொண்டாரே தவிர நாங்கள் எங்கு செய்த பயணத்துக்கும் எவ்வித முன் தயாரிப்பும் இல்லாது தான் சென்றோம். எங்கே தங்குவது, எங்கே குளிப்பது போன்ற எந்த முன்னேற்பாடும் இல்லை. அவ்வப்போது நாங்கள் கிடைத்த இடத்தில் எங்களைச் சௌகரியப்படுத்திக் கொண்டோமேத் தவிர வேறு வசதிகள் ஏதும் செய்து கொள்ளவில்லை. இப்படி ... Full story

தூய மத உணர்வின் அர்ப்பண ரூபம்!

தூய மத உணர்வின் அர்ப்பண ரூபம்!
வெங்கட் சாமிநாதன்  நினைவுகளின் சுவட்டில் - பாகம் - II (பகுதி - 38) காலையில் எழுந்து பார்த்தால் கம்பும் கழியுமாக ரயில் நிலைய ப்ளாட்ஃபாரத்தில் இருந்த கூட்டம் இல்லை. ஆனால் ரயில் நிலையத்துக்கு வெளியே சுற்றிலும் அவர்களின் நடமாட்டம் இருந்தது. இரவில் பார்த்த பத்துப் பதினைந்து பேருக்கு மேலாக நிறையப் பேரின் நடமாட்டம் இருந்தது. இவர்கள எல்லாம் சுற்று வட்டார கிராமத்து ஜனங்கள். என்றார் ஜார்ஜ். சரி வாங்க காலைக் கடனெல்லாம் முடித்துவிட்டு குளித்து ஏதாச்சும் சாப்பிடலாம் என்று கிளம்பினோம். ஸ்டேஷனில் தான் எல்லா வசதிகளும் இருக்குமே. அது ஒரு ... Full story

எனக்குக் கிடைத்த ஹில்ஸா மாச்…!

எனக்குக் கிடைத்த ஹில்ஸா மாச்...!
நினைவுகளின் சுவட்டில் - பகுதி - II (பாகம் - 37) வெங்கட் சாமிநாதன் வங்காளிகளுக்கு மிகவும் பிடித்தது ஹில்ஸா மாச் அது புர்லாவில் கிடைப்பதில்லை. அதை யாராவது கல்கத்தாவிலிருந்து வந்தால் வாங்கி வருவார்கள். அப்படி அபூர்வமாக வருவதை புர்லாவிலிருக்கும் மற்ற வங்காளிகளுடன் யாரும் பகிர்ந்து கொள்வார்களா என்ன? மிருணால் சொன்னான்,.’ என் தங்கை வரவிருக்கிறாள். அப்போது அவளிடம் கட்டாயம் ஹில்ஸா மாச் வாங்கிக் கொடுத்து விடுவார்கள். அப்போ உன்னைக் கூப்பிடுவேன். கட்டாயம் வரணும்,” என்று சொல்லியிருக்கிறான். முதலில் ... Full story

திருமணத் தம்பதிகள் புகைப்படங்களும் + குறுக்கெழுத்துப் போட்டிகளும்!

திருமணத் தம்பதிகள் புகைப்படங்களும் + குறுக்கெழுத்துப் போட்டிகளும்!
வெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில் - பகுதி - II (பாகம் - 36)  இல்லஸ்ட்ரேட்டட் வீகலி ஆஃப் இந்தியா எனக்குப் பரிச்சயம் ஆகி நான் படிக்கத் தொடங்கியபோது சி.ஆர்.மண்டி என்பவர் அதன் ஆசிரியராக இருந்தார். பொதுவான அரசியல் சமூகம் பற்றிய கட்டுரைகளும் அது சம்பந்தமான படங்கள் நிறைந்தும் அதில் இருந்தன. அது போக, இந்தியாவில் அப்போது தெரியவந்த ஓவியர்களின் ஓவியங்களூம் அவ்வப்போது முழுப்பக்க அளவில் அதில் வந்தன. அது மாத்திரமல்ல.இன்னம் இரண்டு விஷயங்கள் வீக்லியை ஒரு பகுதி ... Full story

இந்திய ஓவியர்களும், ஓவியங்களும்!

இந்திய ஓவியர்களும், ஓவியங்களும்!
நினைவுகளின் சுவட்டில் (பகுதி - II பாகம் - 35) வெங்கட் சாமிநாதன் நான் Illustrated Weekly of India வுடன் பரிச்சயம் கொண்டிருந்த காலத்தில் அதற்கு C.R.Mandy என்பவர் ஆசிரியராக இருந்தார். அதன் பெயருக்கு ஏற்பவே எந்தக் கட்டுரையானாலும் நிறைய படங்கள் உடன் பிரசுரமாகி இருக்கும். படங்கள் இல்லாத பக்கமோ கட்டுரையோ அதில் பார்க்கமுடியாது. நான் வாங்கத் தொடங்கிய போது அது 12 அணாவுக்கு விற்று வந்தது. 12 அணா என்பது முக்கால் ரூபாய். படம் என்றதும் ... Full story

அறிவார்ந்த தேடல் அற்ற சூழலின் இன்னொரு பரிமாணம்!

அறிவார்ந்த தேடல் அற்ற சூழலின் இன்னொரு பரிமாணம்!
நினைவுகளின் சுவட்டில் (34) வெங்கட் சாமிநாதன் புர்லாவுக்கு வந்த பிறகு (1951) தான் தினசரி பத்திரிக்கை படிப்பது என்ற பழக்கம் ஏற்பட்டது. அதாவது ஆங்கில தினசரிப் பத்திரிக்கை. தினசரிப் பத்திரிக்கை படிக்கும் பழக்கம் கும்பகோணத்திலேயே, மகாமகக் குளத்தெருவில் குடியிருந்து படித்த காலத்தில் ஆரம்பித்தது என்றாலும் அது பக்கத்துத் தெருவில் இருந்த திராவிட கழக ரீடிங் ரூமுக்குப் பத்திரிக்கைகள் படிக்கும் பழக்கம் ஏற்பட்டதிலிருந்து தொடங்கியது. அது திராவிட கழகப் பத்திரிக்கைகளுக்கிடையே கிடந்த விடுதலையையும் படிக்கத் தொடங்கியதிலிருந்து ஏற்பட்ட பழக்கம். திராவிட ... Full story

உலகப்புகழ் புதினங்கள்!

உலகப்புகழ் புதினங்கள்!
நினைவுகளின் சுவட்டில் - (33)  வெங்கட் சாமிநாதன் ஸ்டாலின் சம்பந்தப்பட்ட The Great Purges - பற்றி எழுதிக்கொண்டு வரும்போது கம்யூனிஸக் கொள்கைகளால் கவரப்பட்டு பின்னர் ஸ்டாலின் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளிலும், ஸ்டாலினின் கொடூர யதேச்சாதிகாரத்திலும் வெறுப்புற்று வெளியேறியவர்கள் எழுதிய The God that Failed புத்தகத்தைப் பற்றிச் சொல்லி வந்தேன். அதில் சில பெயர்கள் என் மறதியில் விட்டுப் போயின. அதன் பின் எனக்கு ஒரே ஒரு பெயர்தான் நினைவுக்கு வந்தது. ஆர்தர் கெஸ்லர் என்னும் ... Full story

அன்றும்…….. இன்றும்…..?

அன்றும்........ இன்றும்.....?
வெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில்-(32) Life பத்திரிகையில் அன்னாட்களில் வெளிவந்த இன்னொரு கட்டுரைத் தொடர் மிக முக்கியமானதும், அதிர்ச்சி தருவதுமாக இருந்தது,. அது நான்கைந்து இதழ்களுக்கு வந்தது என்று நினைவு. ஒவ்வொரு இதழிலும், அந்தப் பெரிய அளவிலான பத்திரிகையிலும் ஆறேழு பக்கங்களுக்கு அக்கட்டுரை நீண்டது. தலைப்பு எனக்கு நினைவில்லை.  The Great Purges, என்று இருக்கவேண்டும். அல்லது The Great Stalinist Trials என்றும் இருக்கலாம். இன்று எனக்கு சரியாக நினைவில் இல்லை. ... Full story

பரிச்சயப் படுத்திய உலகம்

பரிச்சயப் படுத்திய உலகம்
வெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில்-(31)     ஹிராகுட்டில் எனக்குப் பரிச்சயமான உலகம், அந்த அணைக்கட்டின் தற்காலிக முகாமில் கிடைத்திருக்கக் கூடிய பரிச்சயங்கள் தான் என்று சொல்ல முடியாது. ஆனால் நேரில் எதிர்ப்படும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பு இருந்தால் அந்த முனைப்பு ஏற்படுத்தும் பரிச்சயங்கள் சாதாரணமாக அந்தந்த சூழல்களில் எதிர்ப்படாத பரிச்சயங்களையும் கூட முன் கொண்டு ... Full story

பரதமும், ஒடிசியும்!

பரதமும், ஒடிசியும்!
வெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில் (பகுதி – II – பாகம் – 30) ஒரு நாள் ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது ஹோட்டலின் உள்ளே நுழைந்தவர்கள் மூன்று நான்கு பேர் நாங்கள் தமிழில் பேசிக்கொண்டிருந்தது கேட்டு எங்கள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தனர்.   தமிழ் நாட்டில் ஏதோ ஊரிலிருந்து புதிதாக வந்திறங்கிய தோற்றம் தெளிவாகத் தெரிந்தது. வந்தவர்கள் எங்களைப் பார்த்து முகம் மலர புன்னகை ஒன்றை வீசினர். “ஏதோ பேச்சுக்கு, “புதுசா வந்திருக்கீங்களா?” ... Full story

தேநீர் – தே(ன்)- நீர்

தேநீர் - தே(ன்)- நீர்
வெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில்  (பகுதி – II – பாகம் – 29) அந்த இடத்தில் அந்த இரவு நேரத்தில் அங்கு ஒரு குடிசையில் விளக்கெரியும், அங்கு "டீ கிடைக்குமா?" என்று கேட்டால் டீ கிடைக்கும், என்பது எதிர்பாராது கிடைத்த ஒரு  சந்தோஷம். கிடைத்த சந்தோஷமா? வானத்திலிருந்து தேவர்கள் புஷ்ப மாரி பொழிந்த கதை தான். டீ கிடைத்தது,கொதிக்கக் கொதிக்க. கைகள் ... Full story
Page 1 of 3123
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.