- Thursday, December 8, 2011, 3:24
- பொது
- 0 views
பவள சங்கரி
அன்புச் செல்லங்களுக்கு இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
இந்தக் கணிணி யுகத்தில் என்னதான் வீடீயோ கேம், தொலைக்காட்சி நிகழ்ச்சி, திரைப்படம் என்று எண்ணிலடங்கா பொழுது போக்குகள் இருந்தாலும், நம் பழமையான மரபுக் கதைகள் கேட்பதென்றால் ஒரு தனிப்பட்ட ஆனந்தம்தானே! அதுவும் ராஜா கதை என்றால் மேலும் சுவைதானே? இதோ அப்படி ஒரு கதை உங்களுக்காக இந்த குழந்தைகள் தின பரிசாக!
புதிர்
அந்தக்காலத்தில் அரசன் என்றாலே மக்கள் தெய்வமாகக் கொண்டாடுவார்கள். அவரும் அதற்கேற்றார் போன்று மக்களிடம் மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டிருப்பார். தன் நாட்டு மக்களை தம் குடும்ப உறுப்பினர்களாகவே கருதி அவர்களின் நலனிலும் இயன்றவரை அக்கறை கொள்ளுவார். தம் குதிரையில் ஏறி நாட்டையும், காட்டையும் கூட அடிக்கொரு முறை வலம் வந்து மக்களின் குறைகள் தீர்ப்பதையே கடமையாகக் கொண்டிருப்பார்.
அது போன்று ஒரு முறை ராஜா மதிவர்மன் ஒரு காட்டிற்குச் சென்றார். மதிவர்மனுக்கு எப்போதும் பெண்கள் என்றால் தனி மதிப்பும், மரியாதையும் உண்டு. காரணம் பெண்களுக்கு மட்டுமே எசமானர் விசுவாசம் அதிகம் என்பது அவர் கனிப்பு!அதனாலேயே அவர்கள் பூசைக்குரியவர்கள் என்ற திடமான நம்பிக்கையும் கொண்டிருந்தார்.
Full story
- Wednesday, December 7, 2011, 19:37
- Featured, பொது
- 0 views
நாகேஸ்வரி அண்ணாமலை
செல்லப் பிராணிகள் வளர்க்கும் அமெரிக்கர்களில் ஜேசன் டுபின் என்பவரும் ஒருவர். எம்மி என்னும் ஜெர்மன் ஷெப்பர்ட் என்னும் வகையைச் சேர்ந்த நாய் ஒன்றை க்ரேஃப்ட்வெர்க் கே9 என்னும் கம்பெனியிடமிருந்து இன்டெர்நெட் மூலம் 7500 டாலருக்கு அவர் வாங்கியிருந்தார். ஆன்லைனில் சாமான்கள் வாங்குவது போல் செல்லப் பிராணிகளையும் அமெரிக்கர்கள் வாங்குகிறார்கள். இந்தக் கம்பெனி இருப்பது அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் இருக்கும் ராசெஸ்டர் என்னும் ஊரில். ஜேசன் வசிப்பது கிழக்குப் பகுதியில் ...
Full story
- Wednesday, December 7, 2011, 16:52
- நறுக்..துணுக்...
- 0 views
நறுக்.. துணுக்...(8)
பவள சங்கரி
நாசா உறுதிப்படுத்திய பூமியைப் போன்ற மற்றொரு கிரகம்!
அண்டவெளியில் , பூமியைப் போன்று உயிரினங்கள் சுகமாக வாழ்வதற்கு ஏற்புடையதாக வேறு ஏதும் கிரகங்கள் உள்ளதா என்பதனை அறியும் விதமாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் கெப்ளர் விண்கலம் ஆய்வு செய்து கொண்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு பிரெஞ்சு விஞ்ஞானிகளால் பூமியைப் போன்ற கிரகம் ஒன்று வெகு தொலைவில் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றிக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கெப்ளர் ...
Full story
- Tuesday, December 6, 2011, 6:42
- பொது
- 0 views
அன்பு நண்பர்களே,
நம் வல்லமை மின்னிதழ் தள மேலாளர் திரு காமேஷ் மற்றும் திருமதி யாங் தம்பதியினருக்கு 2011 நவம்பர் மாதம் 30 ஆம் நாள் ஹாங்காங் நேரப்படி புதன் கிழமை விடியற்காலை 2.50 மணிக்கு (இந்திய நேரப்படி 0.20 மணி) சைனா நாட்டில் மிக அழகான குட்டி தேவதை பிறந்திருக்கிறாள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். திருமதி யாங் அவர்களின் விருப்பத்திற்கிணங்க குழந்தைக்கு செல்வி என்றுஅழகிய நாமகரணமும் சூட்டியுள்ளார்கள.குழந்தை செல்வி ...
Full story
- Monday, December 5, 2011, 15:23
- பொது
- 0 views
ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் உபயோகமான நிகழ்ச்சி “ராஜ யோகம்”.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பொன்மொழியின் படி அமையப் பெற்றதுதான் மனித வாழ்க்கை. இப்பிறப்பில் நம்மால் முடிந்த நல்லவற்றை இயலாதோர்க்கும், இல்லாதோர்க்கும் செய்தால் இப்புண்ணியம் தொடரும் பிறப்புகளின் நம்மை நற்கதி அடையவைக்கும் என்பது சாஸ்திரங்கள் சொல்லும் உண்மை.
அதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் பிரபல ஜோதிட நிபுணர் முனைவர் கே. ராம் அவர்கள் கலந்துகொண்டு தொலைபேசி மூலம் நேயர்கள் தங்களது இன்றைய ...
Full story
- Monday, December 5, 2011, 15:17
- பொது
- 0 views
ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் தினந்தோறும் காலை வேளையில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இந்நிகழ்ச்சி இடம்பெறுகிறது.
காலை 05:00 மணிக்கு தொடங்கி 08:30 மணி வரை பல்வேறு புதிய அம்சங்களுடன் ஒளிபரப்பாகிசரும் இந்நிகழ்ச்சியில் 5 மணிக்கு பஜனையும், 05:30 க்கு ராக நமனமும் அதைத் தொடர்ந்து 6 மணிக்கு சுப்ரபாதமும் இடம்பெறுகிறது. இதன் முத்தாய்ப்பாய் 06:30 மணிக்கு பிரபல உபன்யாசகர் வழங்கும் நாராயணியம் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து யோகாவும் இடம்பெறுகின்றன.
சுப உதயம் நிகழ்ச்சியில் 7 மணிக்கு பல்வேறு பக்தி நிகழ்வுகளின் தொகுப்பான பக்தி சிஞ்சனா இடம்பெற ...
Full story
- Friday, December 2, 2011, 22:25
- பொது
- 0 views
மனிதன் இடம் விட்டு இடம் மாறுவது போல், கிரகங்களும் இடம் மாறுகின்றன. அதில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக விளங்குவது சனி கிரகம். கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற சனி பகவானிடம் எல்லோருக்கும் ஒரு பயம் உண்டு. ஏனெனில் வாழ்வில் மனிதனுக்குப் பல சோதனைகளைத் தந்து, வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரிய வைப்பதோடு, மனிதனை ஆன்மீகத்தின் பால் கொண்டு செல்வதும் அவரே! ...
Full story
- Wednesday, November 30, 2011, 13:50
- பொது
- 0 views
வை.கோபாலகிருஷ்ணன்
வஸந்தி அந்தப் பிரபல வங்கியின் காசாளர். பணம் கட்டவோ வாங்கவோ அங்குப் பல கவுண்டர்கள் இருப்பினும், வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் விரும்புவது வஸந்தியின் சேவையை மட்டும்தான்.
மிகவும் அழகான இளம் வயதுப் பெண் என்பதால் மட்டுமல்ல. தேனீ போன்ற சுறுசுறுப்பு. வாடிக்கையாளர்களின் பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பாதவள். தன்னை நாடி வரும் அனைவருக்குமே சிரித்த முகத்துடன், சிறப்பான ஒரு வித வாஞ்சையுடன் கூடிய உபசரிப்பும் வரவேற்பும் அளிப்பவள். ...
Full story
- Wednesday, November 30, 2011, 0:01
- Featured, கட்டுரைகள், பொது
- 0 views
கேப்டன் கணேஷ்
தாவரங்களுக்கும் உயிர் உண்டு. அவைகளுக்கும் உணர்வுகள் உண்டு என்று கண்டறிந்தவர் யார் தெரியுமா? மார்கோனி கம்பியில்லாத் தகவல் தொடர்பை கண்டுபிடிப்பதற்கு ஓர் ஆண்டிற்கு முன்பே அதைக் கண்டறிந்தும், புகழ் விரும்பாமல் அடக்கமாய் இருந்தவர் யார் தெரியுமா?
இன்று அவருக்கு 153 வது பிறந்த நாள். அவர் தான் ஆச்சார்ய சர் ஜகதீச சந்திர போஸ்.
ஆச்சார்ய சர் ஜகதீச சந்திர போஸ்
1858 ஆம் ஆண்டு நவம்பர் ...
Full story
- Tuesday, November 29, 2011, 22:57
- செய்திகள், திரை, பொது
- 0 views
சமீபத்தில் வெளியாகி வெள்ளித்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘வித்தகன்’. நையாண்டி வசனங்கள், குண்டக்க மண்டக்க எதிர் வசனங்கள் என தனது வழக்கமான சரக்குடன் அதிரடியையும் சேர்த்துக் கொடுத்திருக்கிறார் நடிகர் பார்த்திபன். நேர்மை தவறாத கறார் போலீஸாக படத்தில் கலக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
ரசிகர்களின் ஆதரவுக்கும் பத்திரிக்கை துறை மற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இயக்குநர், நடிகர் பார்த்திபன் விடுத்துள்ள செய்தி : “அபாரமாக ஓடி ...
Full story
- Tuesday, November 29, 2011, 17:10
- பொது
- 0 views
வள்ளல் வடிவேல் முருகனின் அருமை பெருமைகளை, அழகுத் தமிழில் பிரபல உபன்யாசகர் லட்சுமி ராஜரத்தினம் வழங்கும் பக்தி நிகழ்ச்சி கந்தபுராணம். ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 8:30 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவருகிறது.
குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் சிறு சிறு பாடல்களும் இடம்பெறுவதால் கந்தபுராணம் நேயர்களின் பக்தி உணர்வை பன்மடங்கு அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.
அறுபடை வீடுகளில் குடிகொண்டு அருளாட்சி புரியும் முருகப் பெருமானின் அவதார பெருமைகளையும் அற்புத திருவிளையாடல்களையும் பல்வேறு கிளைக் கதைகளுடன் தனக்கே உரித்தான தனிப் பாணியில் வழங்குகிறார் லட்சுமி ராஜரத்தினம்.
...
Full story
- Monday, November 28, 2011, 20:55
- பொது
- 0 views
2000 ஆண்டுகளுக்கு முன்பான, தமிழ்நாட்டு வரலாற்றை விவரிக்கும் "பாலை" திரைப்படத்தை வெற்றிபெறச் செய்வோம் என நாம் தமிழர் கட்சி அறிவிப்பு விடுத்துள்ளது.
இப்படம் வெளியாகப் போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை என ஆதங்கப்பட்டு படத்தின் இயக்குநர் ம.செந்தமிழன் ஊடகங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதம் கண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான், இயக்குநர் செந்தமிழனுடன் கைபேசியில் பேசினார்.
படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று கூறிய இயக்குநர் சீமான், ...
Full story
- Monday, November 28, 2011, 20:43
- பொது
- 0 views
சென்னை, அடையாறு பகுதியின் காந்தி நகர் பகுதியில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு இயங்கி வரும் ஒரு சேவை மையம் சேவாலயா. இந்த அமைப்பு பல்வேறு சமூக நலப் பணிகளைச் செய்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக மகாகவி பாரதியார் மேல்நிலைப் பள்ளியை நடத்தி வருகின்றது.
இந்த மகாகவி பாரதியார் பள்ளியின் மாணவர்கள் தொடர்ந்து இரண்டாம் முறையாக ஒரு சர்வதேச விருதினை வென்றுள்ளனர்.
அஹமதாபாத் -ல் உள்ள ரிவர் சைட் பள்ளி சர்வதேச அளவில் நடத்திய போட்டி “டிசைன் ஃபார் சேன்ஜ்”(Design for Change) அதாவது மாற்றத்திற்கான ...
Full story
- Monday, November 28, 2011, 17:33
- நறுக்..துணுக்..., பொது
- 0 views
நறுக்... துணுக்.. (7)
பவள சங்கரி
பூமியிலிருந்து 123 டிரில்லியன் மைல்களுக்கு அப்பால் புதிதாக பூமி போன்று ஒரு கோளம் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! கிளீஸ் 581G என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் ஆச்சரியமானதும் , மகிழ்ச்சிகரமானதும் கூட!.....ஆஸ்ட்ரோ - பிசிகல் ஜர்னல் இந்த ஆய்வைப்பற்றிக் கூறும் போது திரவ நீர் இருப்பதும், பூமியின் புவியீர்ப்பு விசை போல 4 மடங்கு அதிகமாகவே அங்கு ஈர்ப்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. நம்முடைய பூமி போலவே கிளீஸ் 581ம் நீள் வட்ட வடிவ பாதையில் சுற்றி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ...
Full story
- Monday, November 28, 2011, 14:27
- பொது
- 0 views
:lol: மனிதன் தன் அனைத்துக் கவலைகளையும் மறந்து செய்யும் ஒரே செயல் சிரிப்பத்து மட்டும் தான். நாமும் சிரித்து நம்மை சுற்றியுள்ளவர்களையும் :lol: சிரிக்கவைத்து மகிச்சியுடன் வாழ சிறப்பான சிரிப்பு யோகாவை :lol: கற்றுக்கொள்ளுங்கள். கவலைகளை மறந்து நோய்நொடிகள் நீங்கி களிப்புடன் வாழுங்கள். அம்பத்தூர் கிருஷ்ணபுரம் பூங்காவில் வாராவாரம் ஞாயிறு காலை ஆறு மணி முதல் ஆறரை மணி வரை சிரிப்பானந்தா அவர்களால் இலவசமாகக் கற்றுத்தரப்படும் ‘சிரிப்பு யோகா’ ...
Full story