Archive for the ‘நேர்காணல்கள்’ Category

நாங்களும் மாணவர்கள்தான்!

நாங்களும் மாணவர்கள்தான்!
  பவள சங்கரி நேர்காணல் - சித்தார்த்தா பள்ளி மாணவர்கள் உழைப்பவர்களின் கையில்தான் உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒருநாளும் முன்னேற முடியாது.! - காந்தியடிகளின் இந்த சத்தியமான வார்த்தைகள் எக்காலத்திற்கும், மனிதராய்ப் பிறந்த எந்நாட்டவருக்கும் பொருந்தக்கூடியது. ஒரு குழந்தை பிறந்தவுடன், பெற்றவர்களுக்குத் தம் குழந்தையின் எதிர்காலம் குறித்து பல கனவுகளும், கற்பனைகளும் உடன் தோன்றுவதும் இயற்கை. அதனை நன்முறையில் செயல்படுத்தும் வகையில் அவர்கள் மனதில் தோன்றக்கூடிய அடுத்த விசயம் குழந்தையின் கல்வி. தம் குழந்தையை, ஒரு பிரபலமான பள்ளியில் சிறந்த மாணவனாக உருவாக்க வேண்டும் என்பதுதான் ... Full story

மனதில் உறுதி வேண்டும்!

மனதில் உறுதி வேண்டும்!
பவள சங்கரி நேர்காணல் - திருமதி வசந்தா சுத்தானந்தம் கணவரின் படத்தின் முன் பணிவாக வணங்கி அன்றைய பணிகள் செவ்வனே நடைபெற அவர்தம் ஆசியும் வேண்டி அவருடைய இருக்கையில் அமர்ந்த மறு நிமிடத்திலிருந்து சுறுசுறுப்பாகத் தம் பணிகளைத் துவங்கியவர், இடையிடையே , திடீரென ஒரு நாள் இப்பணிச் சுமையை எப்படி ஏற்றுக் கொள்ள முடிந்தது? என்ற நம் கேள்விக்கு அவ்வப்போது பதிலும் அளித்துக் கொண்டேயிருந்தார். ஈரோடு எம்.பி. என். நாச்சிமுத்து பொறியியல் கல்லூரியின் தாளாளர், திருமதி வசந்தா சுத்தானந்தம். ... Full story

கரித்துண்டினால் ஓவியம்!

கரித்துண்டினால் ஓவியம்!
ஓவியர் திரு சங்கர நாராயணன்- சங்கருடன் நேர்காணல். விஜய திருவேங்கடம் கரித் துண்டினால் ஓவியம் என்பது கற்கால விடயமாக இருந்து, அவ்வப்போது, ஆங்காங்கே, அகன்ற வீதிகளில் அல்லது கடற்கரையோரம், ஏதேனும் ஓர் ஏழை ஓவியன் தெய்வத் திருவுருவங்களை கரித்துண்டினால்வரைந்திருப்பது வழிப்போக்கர் பலரையும் கவர்ந்திருக்கலாம். இவ்வாண்டு அறிஞர் மு வ வின் நூற்றாண்டு என்பதால் அவரது புதினம் "கரித்துண்டு" நினைவிற்கு வரலாம். பென்சிலால் வரையப்படும் ஓவியம் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் முடிந்து போன விடயமாகக் கருதப் படலாம்.... Full story

இன்னம்பூரானுடன் ஒரு இ- நேர்காணல்-3

இன்னம்பூரானுடன் ஒரு இ- நேர்காணல்-3
இன்னம்பூரான் இன்னம்பூரானுடன் பிரகாஷ் சுகுமாரன் மின்னஞ்சல் வழி நடத்திய நேர்காணலின் போது வினவப்பட்ட மேலும் நான்கு கேள்விகளுக்கான பதில் இங்கே. பிரகாஷ் சுகுமாரன்: பேச்சுரிமையின் தேவை என்ன ? இன்னம்பூரான்: தொடரை நான் மாற்றி அமைத்ததே, பேச்சுரிமை எனலாம். மனிதன் தனித்து வாழ்வது இல்லை. கூடி வாழும் போது, மற்றவரின் எண்ணங்கள்/கருத்துக்கள்/ சிந்தனைகள்/ கொள்கைகள் ஆகியவற்றை மதிக்காவிடின், கூட்டம் கலையும்; ... Full story

அயராத உழைப்பின் சாதனை! – தினம் தினம் தீபாவளி!

அயராத உழைப்பின் சாதனை! - தினம் தினம் தீபாவளி!
பவள சங்கரி வாழ்க்கையின் கீழ் மட்டத்திலிருந்து போராடி உயர் மட்டத்தை அடைந்துள்ள ஒரு உழைப்பாளியின் உண்மைக் கதை! ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவுவேண்டும் உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவுகல வாமைவேண்டும் பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை பேசா திருக்க்வேண்டும் பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்... Full story

இனிக்கும் தலை தீபாவளி – ஒரு நேர் காணல்

இனிக்கும் தலை தீபாவளி - ஒரு நேர் காணல்
சாந்தி மாரியப்பன் ஆயிரம் பண்டிகைகளைக் கொண்டாடியிருந்தாலும், திருமணத்திற்குப் பிறகு முதன் முதலாக தம்பதியர் இருவரும் சேர்ந்து கொண்டாடும் பண்டிகைகளின் இனிமையே தனி. அதுவும் திருமணமான முதல் வருஷத்தில் கொண்டாடப்படும் தலைப்பண்டிகைகள் அனைத்தும் அனேகமாக பெண்ணின் பிறந்த வீட்டிற்கு தம்பதியரை அழைத்துத்தான் கொண்டாடப்படும். திருமணமாகி பெற்றோரை விட்டுப் பிரிந்து, பெண் கணவன் வீட்டிற்குச் சென்று விட்டாலும் அவ்வப்போது ஒருவரையொருவர் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எழுவது இயல்பே. அந்த விருப்பத்தைப் பண்டிகைகளைச் சாக்கிட்டு நிறைவேற்றிக் கொள்ளும் ஒரு ஏற்பாட்டைச் செய்த நம் முன்னோரின் திறனை ... Full story

இன்னம்பூரானுடன் ஒரு இ-நேர்காணல்-2

இன்னம்பூரான் அவர்களுடன் மின்னஞ்சல் மூலம் நடத்தப்பட்ட நேர்காணல் பிரகாஷ் சுகுமாரன் அவர்களின் கேள்விகளுடன் தொடர்கிறது இங்கே. சுகுமாரன்: ஆண் - பெண் சமநிலை சாத்தியமா? அது நடக்காமல் மனித ஏற்றத் தாழ்வுகளை சமப்படுத்த முடியுமா ? இன்னம்பூரான்: தன் கன்னி எழிலை அரங்கேற்றிய மாதவி,  மதுரை மன்னனை மண்டியிட வைத்த கண்ணகி, துறவின் தரமுயர்த்திய மணிமேகலை ~ அன்று. முத்துலக்ஷ்மி ரெட்டி,  ருக்மணி லக்ஷ்மிபதி,  அசலாம்பிகை, ராமாமிருதம் அம்மாள் ~ ... Full story

இன்னம்பூராருடன் ஒரு இ-நேர்காணல்(செல்வனின் கேள்விகளுடனான மறுபதிப்பு)

இன்னம்பூராருடன் ஒரு இ-நேர்காணல்(செல்வனின் கேள்விகளுடனான மறுபதிப்பு)
இன்னம்பூரானின் இயற்பெயர், சௌந்தரராஜன் ஸ்ரீனிவாஸா. இவர், இந்தியத் தணிக்கைத் துறையின் துணைத் தலைவராக, இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் உள்ள இன்னம்பூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். எனவே, இன்னம்பூரான் என்ற புனைபெயருடன் இணையத்தில் எழுதி வருகிறார். தமிழின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல அரிய தமிழ் நூல்களை மின்னாக்கம் செய்துள்ளார். நவீன உத்திகள் மூலம் தமிழுலகத்திற்குத் தொண்டு செய்வதில், முனைந்துள்ளார். அவருடைய அனுபவங்களில் சில: ... Full story

அண்ணாகண்ணன் நேர்காணல் – காணொலிப் பதிவு

பொதிகைத் தொலைக்காட்சியில் 2011 ஜூன் 13 அன்று மாலை 5 மணிக்கு ஒளிபரப்பான அண்ணாகண்ணன் நேர்காணலின் காணொலிப் பதிவு - பாகம் 1 & 2. உடன் உரையாடியவர்: மதுமிதா. நிகழ்ச்சித் தயாரிப்பு: பாட்சா. பதிவும் வலையேற்றமும்: மறவன்புலவு க. சச்சிதானந்தன். நன்றி: பொதிகை பாகம்-1 பாகம்-2 Full story

தேடுபொறி உகப்பாக்கம்: பாலாஜி ராமநாதன் உடன் நேர்காணல்

செவ்வி - அண்ணாகண்ணன் இணையத் தேடுபொறிகள், தேடுபொறி உகப்பாக்கம் (Search Engine Optimization) ஆகியவை குறித்து, டிஜிகிளிஃப் (http://digicliff.com) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பாலாஜி  ராமநாதன் 2010ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் வல்லமை ஆசிரியரின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அண்ணாகண்ணனின் ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பிலான முனைவர் பட்ட ஆய்வேட்டில் இந்த நேர்காணல், இடம்பெற்றுள்ளது. இணையத் தேடுபொறி எவ்வாறு இயங்குகிறது? இணையத் தேடுபொறி, வெப் ஸ்பைடர்கள் மூலமாக இணையத்தளங்களின் பக்கங்களில் ... Full story

சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில் கமலாதேவி அரவிந்தனின் நேர்காணல்

செவ்வி: அண்.சிவ.குணாளன் (சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில் 27.03.2011, 03.04.2011 ஆகிய தேதிகளில் சிங்கப்பூரின் முன்னணி எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன் அவர்களின் நேர்காணல் வெளியானது. அண்.சிவ.குணாளன், நல்ல கேள்விகளை எழுப்பி, கமலம் அவர்களிடமிருந்து நல்ல பதில்களைப் பெற்றிருந்தார். அச்சில் வெளியான இந்த நேர்முகம், முதல் முறையாக இணையத்தில், வல்லமை மின்னிதழில் வெளியாகிறது.) சிறுகதைகள், நாடகங்கள், விமர்சனக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் எனப் பல்வேறு துறைகளில் 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழுலகுக்குப் படைப்புகளைத் தந்து வருபவர் எழுத்தாளர் ... Full story

தமிழர் கடலில் நடப்பது என்ன?: சச்சி உடன் குரல் நேர்முகம் – பகுதி 3

செவ்வி: அண்ணாகண்ணன் மறவன்புலவு க.சச்சிதானந்தன், பல்துறை வித்தகர். பதிப்புத் துறையிலும் சைவத் திருமுறைகளிலும் ஆழ்ந்து தோய்ந்தவர். அதே நேரம், கடலியல் துறையில் பழுத்த அனுபவம் வாய்ந்த வல்லுநர். கொழும்பு கடற்றொழில் ஆராய்ச்சி நிலையத்தின் ஆய்வு அலுவலராக 11 ஆண்டுகள் பணியாற்றியவர். 23 நாடுகளில் ஐ.நா. உணவு வேளாண் நிறுவன ஆலோசகராகச் சுமார் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். கருவாடுகளைக் காயவைத்தல் தொடர்பாகப் புதிய முறைகளை உருவாக்கியவர். சேதுக் கால்வாய்த் திட்டம் தொடர்பான புரிதலைப் பல நிலைகளில் உருவாக்க முனைந்தவர்.  ... Full story

தமிழர் கடலில் நடப்பது என்ன? : சச்சி உடன் குரல் நேர்முகம் – பகுதி 2

செவ்வி: அண்ணாகண்ணன் மறவன்புலவு க.சச்சிதானந்தன், பல்துறை வித்தகர். பதிப்புத் துறையிலும் சைவத் திருமுறைகளிலும் ஆழ்ந்து தோய்ந்தவர். அதே நேரம், கடலியல் துறையில் பழுத்த அனுபவம் வாய்ந்த வல்லுநர். கொழும்பு கடற்றொழில் ஆராய்ச்சி நிலையத்தின் ஆய்வு அலுவலராக 11 ஆண்டுகள் பணியாற்றியவர். 23 நாடுகளில் ஐ.நா. உணவு வேளாண் நிறுவன ஆலோசகராகச் சுமார் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். கருவாடுகளைக் காயவைத்தல் தொடர்பாகப் புதிய முறைகளை உருவாக்கியவர். சேதுக் கால்வாய்த் திட்டம் தொடர்பான புரிதலைப் பல நிலைகளில் உருவாக்க முனைந்தவர்.  ... Full story

தமிழர் கடலில் நடப்பது என்ன? : சச்சி உடன் குரல் நேர்முகம் – பகுதி 1

செவ்வி: அண்ணாகண்ணன் மறவன்புலவு க.சச்சிதானந்தன், பல்துறை வித்தகர். பதிப்புத் துறையிலும் சைவத் திருமுறைகளிலும் ஆழ்ந்து தோய்ந்தவர். அதே நேரம், கடலியல் துறையில் பழுத்த அனுபவம் வாய்ந்த வல்லுநர். கொழும்பு கடற்றொழில் ஆராய்ச்சி நிலையத்தின் ஆய்வு அலுவலராக 11 ஆண்டுகள் பணியாற்றியவர். 23 நாடுகளில் ஐ.நா. உணவு வேளாண் நிறுவன ஆலோசகராகச் சுமார் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். கருவாடுகளைக் காயவைத்தல் தொடர்பாகப் புதிய முறைகளை உருவாக்கியவர். சேதுக் கால்வாய்த் திட்டம் தொடர்பான புரிதலைப் பல நிலைகளில் உருவாக்க முனைந்தவர்.  கூர்மையான நோக்கும் அறிவியல்பூர்வமான ... Full story

ஒளவை நடராசன் உடன் குரல் நேர்முகம்

செவ்வி: அண்ணாகண்ணன் பத்மஸ்ரீ ஒளவை நடராசன் பல்வேறு சிறப்புகளுக்கு உரியவர். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையின் முன்னாள் செயலாளர். கேட்டார்ப் பிணிக்கும் வகையில் உரையாற்றும் பேச்சாளர். எளிமையும் வலிமையும் இணைந்த அன்பாளர். சிறந்த சிந்தனையாளர். சிறப்புகள் பல வாய்ந்த ஒளவை நடராசன் அவர்கள்,  தமிழ் ஓலைச் சுவடிகள் சேகரிப்பு குறித்து, சில கருத்துகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். உ.வே.சாமிநாதையருக்குப் பின்னால் ஓலைச் சுவடிகளிலிருந்து பதிப்பிக்கப்பெற்ற புதிய நூல் ... Full story

சக்தி சக்திதாசன் உடன் குரல் நேர்முகம்

செவ்வி: அண்ணாகண்ணன் இங்கிலாந்தில் 36 ஆண்டுகளாக வசிக்கும் எழுத்தாளர் சக்தி சக்திதாசன், தமிழ் இணைய உலகிற்கு நன்கு அறிமுகமானவர். இணையம் உருவாக்கிய எழுத்தாளர்களுள் இவரும் ஒருவர். இணையத்தில் எழுதும் முன்னரே இவர் கவிதைகள் எழுதியிருக்கிறார். ஆனால், இணையம் வந்த பிறகே அதிகமாகவும் தொடர்ச்சியாகவும் கவிதை, கட்டுரை, சிறுகதை ஆகிய பல வடிவங்களிலும் எழுதினார். பல்வேறு இணைய இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தமிழ்ப் பூங்கா என்ற மின்னிதழையும் நடத்தி வருகிறார். அந்த வகையில் சக்திதாசன், பொன்விளையும் மின்வெளியில் கண்சிமிட்டும் நட்சத்திரம். இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூரில் ... Full story

கமலாதேவி அரவிந்தன் உடன் குரல் நேர்முகம்

செவ்வி: அண்ணாகண்ணன் சிங்கப்பூரில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர், திருமதி கமலாதேவி அரவிந்தன். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர். எனினும் தமிழ் பால் தணியாத காதல் கொண்டவர். தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் இலக்கியம் படைக்கும் வித்தகர். சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை, கவிதை, ஆய்வு... என இவர் கைத்திறம் காட்டிய துறைகள் பல. மிக இளம் வயதிலேயே எழுதத் தொடங்கி, பல பத்தாண்டுகளாகத் தொடர்ச்சியான படைப்பியக்கம் கொண்டவர்.  தமிழுக்குக் கிட்டிய தவச்செல்வி எனத் தமிழவேள் கோ. சாரங்கபாணி, இவரைப் பாராட்டியுள்ளார். தன் தாய்மொழியான மலையாளத்திலும் ... Full story

புதிய கோணத்தில் ஓகம் (யோகம்) – அசித்தருடன் ஒரு செவ்வி

சந்திப்பு: பாவெல் சூரியன் படம்: அண்ணாகண்ணன் ============================================ தமிழனின் தொன்மைக்கும் பண்பாட்டுச் சிறப்பிற்கும் அறிவியல் மேன்மைக்கும் நிலைக்கலனாக நிற்பது ஓகக் (யோக) கலை. உடல்நலனை நல்ல இயங்காற்றலோடு வைத்திருப்பதற்கும் உள்ளுறுப்புகளின் வலிமைக்கும் அடிப்படையானது இந்த “ஓகக் கலை”. இந்தக் கலை முழுவதும் சமற்கிருத மயமாக்கப்பட்டிருக்கிறது. யோகா, யோகாசனம், அத யோகம், இராச யோகம் என்றெல்லாம் வடமொழியாகவே இருக்கிற இந்தக் கலை, நம் தமிழரின் அரிய கலைச்செல்வம், பரம்பரைச்  சொத்து என்று நிறுவுகிறார், அசித்தர். இன்று எந்த இதழைப் புரட்டினாலும் ஊழ்கம் (தியானம்), மனப் பயிற்சி என்று பல ... Full story

சிவா பிள்ளையுடன் சிறு உரையாடல்

சந்திப்பு: அண்ணாகண்ணன் இலண்டன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கோல்ட்ஸ்மித் கல்லூரியில் பணியாற்றுபவர் சிவா பிள்ளை. தகவல் தொடர்பு நுட்பங்களைப் பயன்படுத்தி, தமிழ் கற்பிப்பதில் முனைப்புடன் இயங்குபவர். அவரைப் பற்றி ஆல்பர்ட் பெர்னாண்டோ எழுதிய கட்டுரையை முன்பு தமிழ் சிஃபியில் வெளியிட்டுள்ளேன். அதன் பின்னர் சிவா பிள்ளையுடன் மின்னஞ்சலில் தொடர்பு இருந்தது. ஆனால், கோவையில் செம்மொழி மாநாட்டின் போதுதான் அவரை முதன் முதலாகச் சந்தித்தேன். சிவா பிள்ளை, அண்ணாகண்ணன், நா.கணேசன் பி்ன்னர் சென்னை ... Full story

“இந்தியா – சீனாவிலிருந்து புதிய கண்டுபிடிப்புகள் தோன்றும்” – தி.ந.ச.வெங்கடரங்கன்

"இந்தியா - சீனாவிலிருந்து புதிய கண்டுபிடிப்புகள் தோன்றும்" - தி.ந.ச.வெங்கடரங்கன் Full story

பேராசிரியர் இ.அண்ணாமலை உடன் இ-நேர்காணல்

செவ்வி: அண்ணாகண்ணன் பேராசிரியர் இ.அண்ணாமலை, இலக்கியத்திலும் மொழியியலிலும் பயிற்சி பெற்றவர். உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் இவற்றைப் படிக்கும் வாய்ப்புப் பெற்றவர். இலக்கியத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் தெ.பொ.மீ.யிடமிருந்தும், மொழியியலைச் சிகாகோ பல்கலைக்கழகத்தில் நோம் சாம்ஸ்கியின் மாணவரும், பின்னாளில் மாற்றுக் கொள்கை உருவாக்கியவருமான ஜிம் மெக்காலேயிடமிருந்தும் கற்றார். Full story
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.