Archive for the ‘கட்டுரைகள்’ Category

Page 5 of 33« First...34567...102030...Last »

அழிக்கலாமா தமிழர் பராம்பரீயத்தை?

அழிக்கலாமா தமிழர் பராம்பரீயத்தை?
  மறவன்புலவு க. சச்சிதானந்தன் விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூருக்கு நான்கு வழிப்பாதை உடனடித்தேவை. காலத்தைக் குறைத்து, தூரத்தை விரைந்து கடக்க அரசு முன்னெடுத்துச் செல்லும் அரிய திட்டம். அந்தத் திட்டத்தைச் செயற்படுத்துகையில் வழியில் உள்ள தொல்லியல் சின்னங்கள் அழிந்து போகும் ஆபத்தைச் சுட்டிக் காட்டுவது என் கடன்.   தமிழரின் அறிவியல் பராம்பரீயம், கட்டடக் கலைப் பராம்பரீயம், தமிழ் ... Full story

தலை சுற்றல்

தலை சுற்றல்
தமிழ்த்தேனீ மருத்துவர்: மிஸ்டர் பரந்தாமன், உங்களுக்குத் தலைச் சுற்றல் வருதுன்னு சொன்னீங்க கவலையே படாதீங்க, நான் பாத்துக்கறேன், காரணத்தைக் கண்டு பிடிச்சிடறேன். என்னோட 20 வருஷ அனுபவத்திலே எவ்ளோ பேரைக் குணப்படுத்தி இருக்கேன். சரி இப்போ நான் கேக்கற கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்க. காரணத்தைக் கண்டு பிடிச்சிடலாம். தலைச்சுத்தல் ஓடிப்போயிடும். பொதுவா காதிலே எல்லாருக்கும் ஒரு திரவம் இருக்கு, அது குறைந்தாலோ, பாதிக்கப்பட்டாலோ தலைச்சுற்றல் வரும். அதுனாலேதான் சின்ன வயசிலே தட்டாமாலை ... Full story

பட்ஜெட் ஃப்ஃட்ஃப்டி! ~2

பட்ஜெட் ஃப்ஃட்ஃப்டி! ~2
  இன்னம்பூரான் இரு கருத்துக்கள் வந்தன. 1. ‘... அதையும் இந்த உலகம் நம்புதே?அதைச் சொல்லணும்...’ 2.’... பொருளாதாரத்தின் அடிப்படைக் கூறுகளை – அதன் விழுமிய சாராம்சங்களை அறியாத பாமரர்கள் இருக்கும் வரை –...’ என்ற ஆதங்கம். இருவரும் என்னுடைய ‘மனச்சுமையும், மானப் பிரச்சினையும்’ புரிந்து கொண்டது நல்வரவே. நான் அடித்துப்பிடித்துக் கொண்டு எழுதியதை நியாயப்படுத்துகிறது. முதலில் தெனாலிராமனின் குதிரைக்கதை. ‘All progress is not ... Full story

மாலையும் புலம்பும்!

மாலையும் புலம்பும்!
  கு.பாலசுப்ரமணியன் (கவிஞர் கானவன்) துணை இயக்குநர் (ஓய்வு),மொழி பெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு. (மார்ச் 20ஆம் நாள், பன்னாட்டு ஊர்க் குருவிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு, எட்டுத் தொகையிலிருந்து இந்த இனிய பாடலைக் கவிஞர் கானவன், நினைவுகூர்ந்து விளக்கியுள்ளார். அவருக்கு நமது நன்றிகள். - ஆசிரியர்) ஆம்பற் பூவின் சாம்பல் அன்னகூம்பிய சிறகர் மனையுறைக் குரீஇமுன்றில் உணங்கல் மாந்தி, மன்றத்துஎருவின்நுண் தாது குடைவன ஆடி,இல்இறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்... Full story

இரெட்டியப்பட்டி சுவாமிகள்-1

இரெட்டியப்பட்டி சுவாமிகள்-1
சு.கோதண்டராமன் உடற் பிணி நீக்கிய உத்தமர் இரெட்டியப்பட்டி என்பது அருப்புக்கோட்டைக்கும் தூத்துக்குடிக்கும் இடையேயுள்ள ஒரு சிற்றூர். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இங்கு சித்தியடைந்த ஒரு மகான், ஊரின் பெயரால் இரெட்டியப்பட்டி சுவாமிகள் என்று அழைக்கப்படுகிறார். இவரது சீடர்கள் தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ளனர். சென்னை ரத்னா ஃபேன் ஹவுஸ் உரிமையாளர்கள் தியாகராய நகரில் அவரது விழாவை ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறார்கள். இரெட்டியப்பட்டியிலும் ஆண்டு தோறும் குருபூஜை நடைபெற்று வருகிறது.... Full story

வார ராசி பலன்: 19.03.2012 முதல் 25.03.2012 வரை

வார ராசி பலன்: 19.03.2012 முதல் 25.03.2012 வரை
காயத்ரி பாலசுப்ரமணியன் மேஷம்: இந்த வாரம் மாணவர்களுக்குப் பழைய நட்புகளை மீண்டும் சந்தித்து மகிழும் வாய்ப்பு உருவாகும். பெண்கள் உறவுகளால், சில அசௌகரியங்களைச் சகித்துக் கொள்ளும் நிலைக்கு உள்ளாகலாம். கலைஞர்கள் அக்கறை கொண்டவர்களின் ஆதரவோடு புதிய முயற்சிகளில் இறங்கலாம். வியாபாரிகள் அரசு வகையில் முயற்சிக்கும் காரியங்கள் அனுகூலமாகும் வரை பொறுமையாய் இருப்பது நல்லது. சில நேரம் பங்குதாரர்கள் ஏறுமாறாக நடந்து கொள்ள முயற்சி செய்வார்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் அவசரப் போக்கிற்கு ... Full story

பட்ஜெட் ஃபட்ஃபட்டி!

பட்ஜெட் ஃபட்ஃபட்டி!
  இன்னம்பூரான் என்னது இது? இந்த வருட இந்திய பட்ஜெட் இந்தக் கேள்வியை தான் எழுப்புகிறது. 21 வருடங்கள் முன்னால், அன்றைய நிதி அமைச்சர் (இன்றைய பிரதமர்) ஒரு சூரியோதய பட்ஜெட் அருளினார். இந்திய பொருளாதாரம் ஒளி வீசிற்று. இன்றைய பட்ஜெட்டோ ஆட்டம் கண்ட நாற்காலியாக (ஆம். அரசு நாற்காலி, காலொடிந்த முக்காலி போல் ஆடியது.) தடுமாறுகிறது. சூரிய அஸ்தமனம் போல் தோன்றுகிறது. ‘9’ என்ற இலக்கிலிருந்து ஜி.டி.பி. தலைகீழாய் போய் ‘6’ ஆகி விட்டது. மார்ச் 31, ... Full story

பாத்ரூமில் தாலி

பாத்ரூமில் தாலி
விசாலம்ஒரு சமயம் என் உறவினர் வீட்டிற்குச் சென்று இரு நாள் தங்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அந்த நேரம் பார்த்துக் காரடைநோம்பு என்று சொல்லப்படும் சாவித்திரி சத்தியவான் நோம்பு வந்தது. காலை குளிக்க பாத்ரூமுக்குச் சென்றேன். அங்கு ஒரு ஆணியில் அந்த வீட்டு மருமகளின் தங்கத்தாலி மாட்டியிருந்தது. நான் அது திருட்டுப்போகாமல் இருக்க பத்திரமாகக் கழட்டி என் மாமியிடம் கொடுத்தேன். "என்ன மாமி. கமலா தாலியை பாத்ரூமில் மாட்டிட்டு மறந்து போய்ட்டாளே. எதுக்கு இப்படிச் ... Full story

சங்க கால சோழநாட்டு அரச புலவர்கள்

சங்க கால சோழநாட்டு அரச புலவர்கள்
  ப.செந்தில்குமாரி தமிழ்மொழியின்கண் உள்ள மிகப் பழமையான நூல் தொகுதி சங்க இலக்கியம். இது சொற்செறிவும் பொருட்செறிவும் நிறைந்த கவிதைக் களஞ்சியம். பண்டைத் தமிழர் தம் காதல், வீரம், கொடை, நட்பு ஆகிய பெரும் பண்புகளை எடுத்துக்காட்டும் கருத்துக் கருவூலமாக இது திகழ்கிறது. இத்தகைய சிறப்புகளைப் பெற்ற சங்க நூல்களைப் பாடிய புலவர்கள் பற்பல காலத்தவராகவும், மரபினராகவும், தொழிலினராகவும் விளங்கியுள்ளனர். புலவர்கள் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற நோக்கிலேயே வாழ்ந்து, குறுகிய மனமின்றிப் பரந்த ... Full story

கொஞ்சநேரம் என்னை மறந்து

கொஞ்சநேரம் என்னை மறந்து
சக்தி சக்திதாசன் சங்க கால இலக்கியம் என்பது தேனைப் போன்றது. மலருக்கு மலர் தாவித் திரியும் வண்டு ஒரு தேன் குடத்தினில் விழுந்து விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள், அது தேடி வந்த தேன் அதைச்சுற்றிலும் இருக்கும். ஆனாலும் அதைப் பருக முடியாதபடி அந்தத் தேனினுள் வண்டு அமிழ்ந்து விடுகிறது. அதே போலத்தான் சில வேளைகளில் இலக்கிய நீராட வேண்டும் எனும் வேட்கையில் சுனைகளைத் தேடித்திரியும் நான் கடலினுள்ளே அமிழ்ந்து விடுவது போல ... Full story

காதல் கடிதம்

காதல் கடிதம்
  நாடக அனுபவங்கள் – 6 திவாகர் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியும் தாஸும் பார்வதியின் வீட்டுக்கே போய் அவளை பெண் பார்ப்பதற்காகவும் அதே சமயம் இந்தப் பெண் தாஸின் கோரிக்கைக்கு ஒப்புக்கொள்கிறாளா என சோதிக்கவும் செல்கிறார்கள். அந்தச் சமயம் வீட்டில் பார்வதியும் தனியே இருக்கிறாள். இந்த தாஸுக்கு ஒரு வேண்டுதல் உண்டு. கலியாணம் செய்துகொண்டால், காதலித்து அந்தக் காதலை நன்றாக அனுபவித்து காதலில் ஒருவரை ஒருவர் நன்றாகப்புரிந்த பின் மணம் செய்து கொள்ளவேண்டும் என்பது அவன் வாழ்நாள் விருப்பம். அவன் துரதிருஷ்டம் அவனுக்கு இந்த காதல் செய்யும் பெண்ணே கிடைக்கவில்லை. இப்படித் ... Full story

கண்ணால் வாசனை அறிய முடியுமா?

கண்ணால் வாசனை அறிய முடியுமா?
சு.கோதண்டராமன் ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆகக் குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்து விகமே ஆக இந்து வாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லையில் தனிப் பெருங் கூத்தின் வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார். (பெரியபுராணம் – திருமலைச் சருக்கம் 252) சுந்தரர் ... Full story

வாசகர்களின் பதில் வேண்டி…….

வாசகர்களின் பதில் வேண்டி.......
  அன்பு நண்பர்களே, வல்லமை வாசகர்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமாயிருக்கும் திரு.இன்னம்பூரான் அவர்கள் நமக்கு வரைந்த மடலை, அவர் வேண்டுகோளுக்கிணங்க வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.   ஆசிரியர் அன்பார்ந்த வல்லமை வாசகர்களே, திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர் அருளிய சிவஞானபோதம் என்ற ஆன்மீக நூலின் அவையடக்கம், ‘ தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்/எம்மை உடைமை எமை இகழார்/ தம்மை உணரார் உணரார் உடங்குஇயைந்து தம்மில்/புணராமை கேளாம் புறன்’ என்று ... Full story

மலர் சபாவின் ஓர் அறிமுகத்துடன் நான் அறிந்த சிலம்பு (உரை பெறும் கட்டுரை) – பகுதி 11

மலர் சபாவின் ஓர் அறிமுகத்துடன் நான் அறிந்த சிலம்பு (உரை பெறும் கட்டுரை) - பகுதி 11
அன்பு நண்பர்களே, ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் நம் தமிழன்னையை அலங்கரிக்கும் ஆபரணங்களில் ஒன்றாகும். சிலம்பின் காரணமாக விளைந்த கதையாதலால் சிலப்பதிகாரம் என்று பெயர்க்காரணம் கொண்டது. அக்காலத்தில் எல்லாக் காப்பியங்களும் அரசனையோ ஆண்டவனையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்க, சிலப்பதிகாரம் மட்டும் மனிதனாகிய கோவலனைத் தலைவனாக வரித்துக் கொண்டது. ஆகவே இது குடிமக்கள் காப்பியம் என்றும் வழங்கப் படுகிறது. சாதாரணப் பெண்ணொருத்தி அரசனையே கேள்வி கேட்கும் துணிவு கொண்டிருந்ததுவும், தான் தவறிழைத்ததை அறிந்ததும் ... Full story

நற்றவ வேள்வி! – நாளைய தமிழ்!

நற்றவ வேள்வி! - நாளைய தமிழ்!
    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்இனிதாவ தெங்குங் காணோம்பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டுநாமமது தமிழரெனக் கொண்டிங்குவாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்தேமதுரத் தமிழோசை உலகமெலாம்பரவும் வகை செய்தல் வேண்டும.யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,வள்ளுவர்போல், இளங்கோவைப் போல்பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லைஉண்மை, வெறும் புகழ்ச்சி யில்லைஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்வாழ்கின்றோம், ஒருசொற் கேளீர்சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர். பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்இறவாத புகழுடைய புதுநூல்கள்தமிழ்மொழியில் இயற்றல்வேண்டும்மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்... Full story
Page 5 of 33« First...34567...102030...Last »
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.