Archive for the ‘கேள்வி-பதில்’ Category

Page 1 of 212

தீதும் நன்றும் பிறர் தர வாரா!

 முனைவர் நாக பூஷணம் சட்டத்தின் வட்டத்துள் வாழ்வாங்கு வாழ்வோம் - (பகுதி - 6) சட்ட நுணுக்கங்களுக்குப் போகும்முன் என்னுடைய சில எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன். என் எண்ண ஓட்டம் தன்போக்கில் ஓடாவிட்டால் , எண்ணிறந்த கருத்துக்களைக் கண்டறிந்து எங்ஙனம் பகிர்ந்துகொள்ள இயலும்? இதில் வரலாறு எதற்கு? இன்றுள்ள நிலை என்ன? எதற்கு இந்த இலக்கிய நடை? என்பது போன்று உணர்த்த முற்படுவோர் உளர் என அறிகின்றேன். வரவேற்கின்றேன். என்றாலும் வரலாறு அறியாமல் வளர் நிலைக்கு வழிகாணல் இயல்பாக இருக்காது என்று நம்புவோரில் நானும் அடக்கம். நேற்றைய வளமையும் ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 35

  இ.அண்ணாமலை   கேள்வி: பேச்சுத் தமிழுக்கும் இலக்கியத் தமிழுக்கும் உள்ள வேறுபாடுகளை இலக்கணக் கூறுகளைக் கொண்டு நிறுவ இயலுமா? காலப்போக்கில் இவ்வேறுபாடுகள் வளர்ந்திருக்கின்றனவா? -- விஜயலக்ஷ்மி   பதில்: இலக்கிய மொழி நடைக்கும், முக்கியமாகக் கவிதை மொழி நடைக்கும், பேச்சு மொழி நடைக்கும் எந்த மொழியிலும் வேறுபாடுகள் இருக்கும். தொல்காப்பியர் துவங்கி நம் இலக்கண ஆசிரியர்கள் செய்யுள் வழக்கையும் உலக வழக்கையும் வேறாகப் பார்க்கிறார்கள். கவிதை மொழி நடை எழுத்து மொழி ... Full story

மகளிர் தம் நிலைமை – அரசியல் அமைப்புச் சட்டம் உருவாவதன் முன்னம்!

மகளிர் தம் நிலைமை - அரசியல் அமைப்புச் சட்டம் உருவாவதன் முன்னம்!
சட்டத்தின் வட்டத்துள் வாழ்வாங்கு வாழ்வோம் - பகுதி 5 முனைவர் நாக பூஷணம் மகளிர் ஆடவர் நிலை குறித்த வாதங்களும் விவாதங்களும் நினைவறிந்த நாள் கடந்தும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. இது ஒரு வேளை மேலும் தொடரக்கூடும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தன் பல்வேறு பிரிவுகளின் கீழ் மகளிர் உரிமை, சம உரிமை , ஆடவர்க்கிணையாக எல்லாத்துறைகளிலும் செயல் பட உரிமை எனப் பல வகையிலும் காக்கவும் , விதியாக்கவும் செய்கிறது. இந்த நிலை உருவாகக் காரணமான ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 34

இ. அண்ணாமலை கேள்வி:அல்ல என்ற சொல்லைப் பன்மையில் மட்டுமின்றி, ஒருமையிலும் பலர் பயன்படுத்துகிறார்கள் (அப்படி அல்ல, நான் சொல்வது அது அல்ல); இல்லை, அல்ல, அன்று ஆகிய சொற்கள், எந்தெந்த இடங்களில் இடம் பெற வேண்டும்? - அண்ணாகண்ணன் பதில்: தமிழ் வாழும் மொழி. உயிருள்ள எதுவும் வளரும்; மாறும். மொழியில் தோன்றும் மாற்றங்களும் வளர்ச்சியின் வெளிப்பாடுகளே. நம் வீட்டுப் பையனுக்கு மீசை வளருவது தடுக்க முடியாத இயற்கையான வளர்ச்சி. மீசை வளர வேண்டாம் என்று மனிதன் விதி ... Full story

ஹலோ டாக்டர்!

ஹலோ டாக்டர்!
ஹலோ டாக்டர், 1.உணவில் உப்பைக் குறைத்துக் கொள்வதால் இருதயத்திற்கு நல்லதா? உப்பு ஊறுகாய் அப்பளம் வடகம் போன்றவற்றை சாப்பிடுவது தவறா? - திருமதி .உமா சண்முகம் (ஈரோடு)   டாக்டர் ஸ்ரீதர் ரத்தினம் புதுவருடப் பிறப்பு, பொங்கல் என்று பல விடுமுறைகளும் விழாக்களும் நிறைந்துள்ள நேரத்திற்கு பொருத்தமான கேள்வி. நாம் உண்ணும உணவானது நமக்குத் தேவையான சத்துக்களைத் தருவதோடு, உடலுக்கு மிகவும் முக்கியமான வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்களையும் (மினரல்ஸ்) அளிக்கிறது. அப்படிப்பட்ட ஒரு மினரல் தான் நாம் தினமும் எல்லாவற்றிலும் உபயோகப்படுத்தும் உப்பு. ... Full story

மகளிர் மற்றும் சிறுவர் தம் முன்னுரிமை.

முனைவர் நாகபூஷணம் சட்டத்தின் வட்டத்துள் வாழ்வாங்கு வாழ்வோம் - (பகுதி 4)   மகளிர் மற்றும் சிறுவர்தம் முன்னுரிமை. அனைவரும் தன்னுரிமை பெறும் வரை யாரும் உரிமை பெற்றவராகார். அனைவரும் ஒழுக்கமுடையவராகும் வரை யாரும் ஒழுக்கமுடையவராகார். அனைவரும் மகிழ்வோடிருக்கும் வரை யாரும் முழுமையான மகிழ்ச்சியோடிரார். மனித உரிமைக்கான போராட்டம் தொன்று தொட்டு இன்று வரை இனிவரும் காலங்களிலும் , தொடர்ந்து நிகழும் ஒன்றாகும். மனித உரிமை மீதான கடுந்தாக்குதல் ஏதோ ஒருவகையில் தன் கொடூரமான முகத்தை காட்டிக்கொண்டே இருக்கிறது. சின்னஞ்சிறு குடும்பம் தொடங்கி , நகர்ப்புறம் , ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 33

சிகாகோ பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி: ஒன்று என்ற சொல்லைக் கொச்சை வழக்கில் எழுதும்போது, ஒன்னு / ஒண்ணு என இரு வகையாக எழுதுகிறார்கள். இது போன்றே மூன்று என்பதை மூனு / மூணு என்றும் தோன்றுகிறது என்பதை தோனுது / தோணுது என்றும் எழுதுகிறார்கள். இவற்றில் எது சரி? –அண்ணாகண்ணன் பதில்: பேச்சுத் தமிழைக் கொச்சை வழக்கு என்னும்போது அது தரமற்றது என்னும் பொருள் தொனிக்கிறது. கொச்சை வழக்கு ... Full story

சட்டத்தின் வட்டத்துள் வாழ்வாங்கு வாழ்வோம் – பகுதி – 3

சட்டத்தின் வட்டத்துள் வாழ்வாங்கு வாழ்வோம் - பகுதி - 3
முனைவர் நாகபூஷணம் சென்ற முறை பிறக்க இருக்கும் குழந்தையின் உரிமைகளைப் பற்றிப் பேசினோம். இம்முறை மண்ணில் பிறந்த பிறகு குழந்தைகளுக்கு உண்டான உரிமைகள் என்னென்ன என்பதைப் பற்றி பார்க்கலாம். பிறக்க இருக்கும் குழந்தையின் உரிமை , மண்ணில் கண் மலரும் வரை , மண்ணில் மலர்ந்த பின் வயதுத் தகுதி அடையும் வரை (அதாவது 18 வயது முடியும் வரை age of majority) குழந்தையின் இயற்கையான பாதுகாவலரை அதாவது பெற்றோரை (natural guardian) சார்ந்திருத்தல் இயல்பு . சில வேளைகளில் பெற்றோர் கவனிக்க இயலா நிலை நேரலாம். ... Full story

இரத்த நாளங்களில் அடைப்பு

இரத்த நாளங்களில் அடைப்பு
இருதய மருத்துவம் சார்ந்த கேள்வி - பதில் இருதய நோய் வல்லுநர் - டாக்டர். ஸ்ரீதர் ரத்தினம் மதுசூதனன் - சென்னை. ஹலோ டாக்டர்இரத்த நாளங்களில் (blood vessels) 60% அடைப்பு இருந்தாலும் ஆப்பரேஷன்(operation) அவசியமா?இல்லை மருந்து மாத்திரையிலேயும் டயட்டிலேயும் சரி பண்ணிவிடலாமா? இருதயம் நம் உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியான ஒன்று. நான் முன்பே கூறியதுபோல் மற்ற ... Full story

வல்லமையில் புதிய பகுதி – ஜோதிடம்

வல்லமையில் புதிய பகுதி - ஜோதிடம்
அன்பு நண்பர்களே, இன்று நம் வல்லமை இதழில் வாசகர்களின் விருப்பத்திற்கிணங்க ஜோதிடம் என்ற புதிய பகுதி ஆரம்பித்துள்ளோம். 2011 ஆம் ஆண்டிற்கான,12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சிப் பலன்களும், தொடர்ந்து வரும் வாரங்களில் வார ராசி பலன்களும் எழுத மனமுவந்து இசைந்துள்ளார் திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன். அவருக்கு நம் வல்லமை மின்னிதழின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். ஜோதிடத்தை தன் பாரம்பரியமாகக் கொண்டவர் ஜோதிடர் திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன் . அவரின் தகப்பனாரும் ... Full story

புகையாகும் வாழ்க்கை!

புகையாகும் வாழ்க்கை!
டாக்டர். ஸ்ரீதர் ரத்தினம் புகை பிடிக்கும் பழக்கம் எவ்வளவு கெடுதல் என்பதை பெரும்பாலானோர் நன்கு அறிவர். அரசாங்கம் அதனை பல வகையிலும் தெளிவுபடுத்தியும், அதன் தீமைகளைக் கருத்தில் கொண்டு, பொது இடங்களில் புகை பிடிப்பதையும் தடை செய்துள்ளது. இருந்தும் உலகளவில் இன்றும் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம். ஒரு கருத்தரங்கில் ஒரு அமெரிக்க விஞ்ஞாணி, உலகத்தில் பிடிக்கப்படும் சிகரெட் எல்லாவற்றையும் ஒன்றின் பின் ஒன்றாக நிறுத்தினால் நிலாவினை தொட்டு திரும்பி விடலாம் என்றார். புகைப்பழக்கம் புகைப்பவரை ... Full story

வல்லமையில் புதிய பகுதி – மருத்துவ ஆலோசனை

வல்லமையில் புதிய பகுதி - மருத்துவ ஆலோசனை
அன்பு நண்பர்களே, நம் வல்லமை இதழின் வாசகர்களாகிய தங்களின் பேராதரவுடன், நம் அடுத்தப் படியாக ‘மருத்துவ ஆலோசனை’ என்ற புதிய பகுதி துவங்குகிறோம். இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஸ்ரீதர் ரத்தினம், மனமுவந்து நம் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முன் வந்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். டாக்டர் ஸ்ரீதர் ரத்தினம் FRCSEd FRCSEd(CTh), Consultant Thoracic Surgeon, University Hospitals of Leicester, United Kingdom. ... Full story

சட்டத்தின் வட்டத்துள் வாழ்வாங்கு வாழ்வோம் – பகுதி (2)

சட்டத்தின் வட்டத்துள் வாழ்வாங்கு வாழ்வோம் - பகுதி (2)
முனைவர். நாக பூஷணம் சென்ற முறை சட்டத்தின் பல பிரிவுகள் குறித்துப் பார்த்தோம். இம்முறை குழந்தைகள் நலம் பேண என்னென்ன சட்டங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு என்னென்ன அடிப்படை உரிமைகள் இருக்கின்றன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம். "சட்டத்தின் முன் அனைவரும் சமம்". சமுதாய உயர்வு தாழ்வு , ஆண் , பெண் என்ற வேறுபாடு , சிறார் முதியோர் என எந்த வகையான பாகுபாடும் சட்டத்திற்கு இல்லை. சட்டத்தின் வரம்பிற்குள் வாழ்வோருக்கு அதன் பாதுகாப்பும் , ... Full story

வல்லமையில் புதிய பகுதி – சட்ட ஆலோசனை

வல்லமையில் புதிய பகுதி - சட்ட ஆலோசனை
அன்பு நண்பர்களே, முனைவர் நாக பூஷணம் , M.A., M.L., Ph.D. வழக்கறிஞர், ஓய்வு பெற்ற சட்டக் கல்வி பேராசிரியர், T.N. Dr. அம்பேத்கார் சட்டப் பல்கலைக் கழக முதல் துணை வேந்தர், எழுத்தாளர், ஆய்வாளர், வானொலி தொலைக்காட்சி பங்கேற்பாளர்,  மொழி பெயர்ப்பாளர் என பன் முகங்கள் கொண்ட பேரறிஞர். இவருடைய எழுத்துப் பணி : சட்டத் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் . முனைவர் ஆய்வுக் கட்டுரை " Social Justice and Weaker Sections-Roll of ... Full story

சட்டத்தின் வட்டத்துள் வாழ்வாங்கு வாழ்வோம்

சட்டத்தின் வட்டத்துள் வாழ்வாங்கு வாழ்வோம்
முனைவர் ப. நாக பூஷணம் , M.A ., M.L., Ph.D. ஒவ்வொரு துறையும் ஒரு கடல் எனக்கொண்டால் அனைத்துத் துறைகளும் சங்கமிக்கும் ஒரு இடம் சட்டம் ஆகும்.  இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் அது நமக்குக் காக்கும் கவசமாக மாறுகிறது. அதுவே அறியாமை , பேராச ,அலட்சியம் , ஆகியவற்றின் காரணமாக இயற்கைக்கு ஊறு விளைவிக்கும் போது நமக்கு நாமே பள்ளம் பறித்துக் கொள்கிறோம். தட்பவெப்ப நிலை அளவு ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 32

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 32
சிகாகோ பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:   திரு தமிழன்பன் அவர்கள் எழுப்பிய கேள்வி : செம்மொழியின்  இன்றைய பயன் அதிலமைந்த  செவ்விலக்கியம் இன்றைய இலக்கியத்திற்கு  ஆதர்சமாக இருக்கலாம் என்பது மட்டும்தானா? பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்: ஒரு சமூகத்தின் பண்பாட்டுச் செயல்களில் செம்மொழியின் ஆதர்சம் முக்கிய  பங்கு வகிக்கிறது. ஆதர்சம்  வெளிப்பட இலக்கியம் ஒரு  இடம். தமிழின் செவ்விலக்கியத்தின் சிறப்பால் ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 31

சிகாகோ பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:   செம்மொழி இளம் அறிஞரும் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ் இணைப் பேராசிரியருமான முனைவர் வா.மு.சே. ஆண்டவர் எழுப்பிய கேள்வி – 5: செம்மொழித் திட்டத்தின் கீழ் செய்யக்கூடிய பணிகளைப் பற்றி உங்கள் கருத்துகள் என்ன? பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்: ஒரு செம்மொழிக்குச் செவ்விலக்கியம் இருக்கும். தமிழ் எழுதப்படுவதற்கு முன்னால் எழுதப்பட்ட சில மேற்காசிய மொழிகள் செம்மொழிகள் என்று கருதப்படுவதில்லை. இவற்றில் செவ்விலக்கியம் இல்லாததும் ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 30

சிகாகோ பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:   செம்மொழி இளம் அறிஞரும் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ் இணைப் பேராசிரியருமான முனைவர் வா.மு.சே. ஆண்டவர் எழுப்பிய கேள்வி - 4: உலக நாடுகளில் தாய்மொழி வழிக் கல்வியினால் ஏற்பட்ட ஆராய்ச்சி வளர்ச்சி நிலைகளைத் தமிழ்நாட்டின் தமிழ்வழிக் கல்வியோடு ஒப்பிட்டுக் கருத்துரைக்க வேண்டுகிறேன். பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்: ஆராய்ச்சி வளர்ச்சி ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 29

சிகாகோ பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி: செம்மொழி இளம் அறிஞரும் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ் இணைப் பேராசிரியருமான முனைவர் வா.மு.சே. ஆண்டவர் எழுப்பிய கேள்வி - 3: உலகளாவிய நிலையில் ஒப்பியல் துறைகளில் நடைபெறும் தமிழ் ஆய்வுகள் குறித்துத் தங்கள் மதிப்பீடு என்ன? பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்: ஒப்பியல் இலக்கியத் துறையை மட்டும் இந்தப் பதிலில் எடுத்துக்கொள்கிறேன். இலக்கிய ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 28

சிகாகோ பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி: செம்மொழி இளம் அறிஞரும் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ் இணைப் பேராசிரியருமான முனைவர் வா.மு.சே. ஆண்டவர் எழுப்பிய கேள்வி - 2: அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் Area Studies வழியாக நடைபெற்ற மொழிசார் ஆராய்ச்சி வளர்ச்சி நிலைகளை மதிப்பிட வேண்டுகிறேன். பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்: காலனிய காலத்தில் தங்கள் ஆதிக்கத்தில் இருந்த காலனிகளின் சமூகம், ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 27

பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி: செம்மொழி இளம் அறிஞரும் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ் இணைப் பேராசிரியருமான முனைவர் வா.மு.சே. ஆண்டவர் எழுப்பிய கேள்வி -1: தமிழகப் பல்கலைக்கழகங்களில் நிகழும் தமிழியல் ஆய்வுகளையும் அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் நிகழும் தமிழியல் ஆய்வுகளையும் ஒப்பிட முடியுமா? பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்: ஐரோப்பிய அரசுகள் இந்தியாவோடு கொண்ட ஆதிக்க உறவின் ஒரு விளைவு, இந்தியவியல் (Indology) என்னும் ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 26

பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி: அண்ணாகண்ணன் எழுப்பிய கேள்வி: ஆங்கில ஒலிபெயர்ப்பில் ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் பெரும் வேறுபாடு உள்ளது. முக்கியமாக T, D ஆகியவற்றை ர, ற என்ற எழுத்துகளால் ஈழத் தமிழர்கள் ஒலிபெயர்க்கின்றனர். நெடிலைக் குறிலாக எழுதுகின்றனர். http://tamilcnn.com தளத்திலிருந்து 2011 மார்ச்சு 29 அன்றைய தேதியில் எடுத்த சில சான்றுகள்: ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 25

பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி: அண்ணாகண்ணன் எழுப்பிய கேள்வி: அண்மையில் மறவன்புலவு க.சச்சிதானந்தன், பா.சசிரேகா ஆகியோருடன் உரையாடுகையில் சென்னை என்பதை ஆங்கிலத்தில் CHENNAI என எழுதுவது தவறு என்றும் ‘ச்செ‘ என்ற ஒலி, தமிழில் மொழிமுதலில் வராது என்றும் குறிப்பிட்டனர். இதே திசையில் சிந்தித்தபோது, சேப்பாக்கம் என்பதை Chepauk என்றும் சித்தூர் என்பதை  Chittoor என்றும் எழுதுவது நினைவுக்கு வந்தது. ஆனால், செம்பனார்கோவில் என்பதை ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 24

பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி: இலண்டன் பள்ளியில் தமிழ் படிக்கும் மாணவர்கள் எழுப்பிய கேள்விகள் (இலண்டனிலிருந்து அனுப்பியர், தமிழாசிரியர் ரீட்டா ஃபற்றிமாகரன்): 1.குறிலின் நீட்சிதான் நெடில் என்றால் ஓசையில் மட்டும் அல்ல, வரிவடிவத்திலும் தொடர்பு இருப்பது தானே பொருத்தம்? ஆனால் (இ-ஈ), (உ-ஊ) ஆகிய வரிவடிவங்களில்  ஓசையில் மட்டும்தான் தொடர்பு இருக்கிறது; வரிவடிவில் தொடர்பு இல்லை. இது ஏன்?... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 23

பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி: விஜயராகவன் எழுப்பிய கேள்வி: “பேச்சுத் தமிழில் வந்துவிட்ட சில புதிய ஒலியன்களை எழுதத் தமிழுக்குச் சில புதிய எழுத்துகள் தேவை என்பது என் நிலைப்பாடு” என்னும் உங்கள் கருத்தைப் பற்றி விரிவாக எழுதுங்கள். பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்: தமிழ் நெடுங்கணக்கில் முப்பது எழுத்துகள் என்று தொல்காப்பியம் வரையறுத்தது. புள்ளியால் வரிவடிவத்தில் வேறுபடுத்தப்படும் மூன்று சார்பெழுத்துகளை (குற்றியலுகரம், ... Full story
Page 1 of 212
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.