வனமின்றி போனால் நம் இனமின்றி போகும்
- Saturday, November 12, 2011, 7:46
- பொது
- 0 views




தூரிகை சின்னராஜ்
வனமின்றி போனால் நம் இனமின்றி போகும் என்பதை ஆழமாகச் சொல்லும் ஆர்.வெங்கட் மேட்டுப்பாளையம், கல்லார் சச்சிதானந்தப் பள்ளியின் பதினொன்றாம் வகுப்பு மாணவர். பள்ளியின் ஊடக மன்றத்தில் வாரந்தோறும் பயிலும் புகைப்படக் கலையைப் பயனுள்ளதாக மாற்றிட பறவைகள், விலங்குகள், என பதிவு செய்யப் புறப்பட்டிருக்கிறார். தனது தந்தையுடன் விடுமுறை நாட்களில் காடு நோக்கிப் பயணித்து எடுத்த புகைப்படங்கள் இவை. எதிர்காலத்தில் தான் ஒரு விவசாயி ஆக வேண்டும் என்பதே இவரது விருப்பம்.
என் ஆசிரியர் பணி அனுபவங்களை இன்று பத்திரிகை மூலம் பகிர்வதற்கு குழந்தைகளே காரணம். அவர்களின் கனவுகளை வண்ணத்தூரிகைகளால் வரைந்து சுருக்கிவிட விட முடியாது. வானம் என்னும் திரையில் தோன்றும் குழந்தைகளின் கற்பனைகள் பால் வெளி நோக்கியும் பயணிக்கும் வல்லமை படைத்தவை. சமுத்திரத்தில் ஒரு துளி மட்டுமே நாம். வண்ணம், வடிவம், எண்ணம், எழுத்து எல்லாமே என் பிரியமுள்ள குழந்தைகள். அவர்களுக்கு வாழ்த்து சொல்லவே விருப்பம்.
தூரிகை சின்னராஜ்
Write a Comment [மறுமொழி இடவும்]
ஆர்.வெங்கட்டுக்கு என் வாழ்த்து. அருமையான படங்கள். வனமின்றி போனால், முதலில் மானம் போகும். அடுத்து சனம் குறையும். இனமும் அழியும். படிப்புக்குக் குந்தகமில்லாமல், இந்த பணி தொடருக.