ஆசிரியர் பாடல்

வீ.கே.கார்த்தி கேயன்

பாடு பாடு தம்பி பாடு

பாடம் சொல்லி படிக்கச் சொல்லி

அறிவைத் தரும் ஆசிரியரைப்

பாடு தம்பி பாடு..                         (பாடு)

 

கைபிடித்து எழுத வைத்தாரு

கையெழுத்து அழகாச் செய்தாரு

பாட்டாய்ப் பாடம் படிப்பாரு

எனக்குப் பிடித்த வாத்தியாரு..               (பாடு)

 

 

சொல்வதை அழகாய்ச்

சுருக்கமாச் சொல்வாரு

சொன்னது நினைவிலே தங்க

கதையோடு சேர்த்துத்தான் சொல்வாரு.. (பாடு)

 

உலகத்தை கட்டி

உண்மைகள் பல சொன்னாரு

கண்ணை மூடச் சொல்லி

காசியும் ராமேசுவரமும் கூட்டிப் போவரு..   (பாடு)

 

எங்களோடு தான்

சேர்ந்தே இருப்பாரு

கை கொடுத்து எங்களை

உயர்த்தி விடுவாரு..

 

கற்பகத் தருதான் அவரு

காமதேனு பசுதான்  அவரு

வழ்ந்து காட்டும் அவரே

எங்கள் வாத்தியாரு..

.. உங்கள் வாத்தியாரு..

 

-       வீ.கே.கார்த்தி கேயன்

தமிழாசிரியர்

சச்சிதானந்த ஜோதி நிகேதன்

கல்லாறு, மேட்டுப்பாளையம்

 

 

Share

Write a Comment [மறுமொழி இடவும்]


4 × 6 =


Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.