- Friday, May 18, 2012, 12:00
- இலக்கியம், கவிதைகள்
- 15 views
வேலைக்குப் போவதால் கையில்
வேண்டிய பணம் விளையாடுகிறது. ஆண்டாண்டு காலமாய் அப்பாவும்,அம்மாவும் சிரமப்பட்டதை நான் குறைத்துவிட்டேன் என்கிற நினைப்பில், அம்மாவிடம் வாய் ஓயாமல் அரற்றிக் கொண்டிருந்தேன்"ஏதேனும் கடன் இருந்தால், சொல்தீர்த்துவிடுகிறேன் விரைவில்"அம்மா சிரித்துக் கொண்டே சொன்னாள், "பிறந்ததிலிருந்து உனக்கு நினைவு தெரியும் வரை, அளித்த முத்தங்களின் கணக்கைத் தீர்க்க முடியுமா? "என் கண்களில் வழிந்த கண்ணீரால், அவள் பாதத்தை அலம்பியபின், ...
Full story
- Friday, May 18, 2012, 11:29
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
வெங்கட் நாகராஜ்
சௌசட் யோகினி மந்திர்
“பேடா காட்” –லிருந்து நீர் வீழ்ச்சிக்குச் செல்லும் வழியில் ஒரு சிறு குன்றின் மேலுள்ளது “சௌசட் யோகினி மந்திர்”. பாறையில் அமைத்திருக்கும் படிகள் வழியே சென்றால் நமக்குக் காணக் கிடைப்பது பத்தாம் நூற்றாண்டில் துர்கா தேவிக்கென அமைக்கப்பட்ட ஒரு அழகிய கோவில்.
கோவிலின் மேலே செல்ல கல்லாலான படிக்கட்டுகள் இருக்கின்றன. மலையிலிருந்து கீழே நோக்கினால் பாறைகளுக்கு நடுவே அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் நர்மதை ...
Full story
- Friday, May 18, 2012, 6:11
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
தாம்பரம் நிறுத்தம்-8
அதுவந்த நாளில்அயலூர் சென்றிருந்தேன் வந்த கடிதத்தைவாய்ப்புக்கொடுக்காமல்பிள்ளைகள் அதைப்பிரித்துவிட்டார்கள்
பிரித்தது மட்டுமா?படித்தும் விட்டார்கள்வீட்டுக்கே வருகிறேன்என்ற விவரம் இருந்தது
மனைவியும் பிள்ளைகளும்என்ன நினைத்தார்கள்?………………..எனக்குத் தெரியாது
இரவுதான் நான்புதுக்கோட்டையிலிருந்துவந்துசேர்ந்தேன்
பிள்ளைகள் எல்லாம்உறங்கியிருக்க வேண்டியவர்கள்உறக்கத்தைஒத்திப்போட்டிருந்தார்கள்
துக்கம்போல் கடிதத்தைக்கருதியதால்தூக்கத்தைத் தள்ளிப்போட்டார்கள்
வீட்டுக்குள் நுழைந்ததும்எல்லோரும்விழித்திருந்ததுவியப்பாய் இருந்தது
மவுனம் வீட்டுக்குள்கூடுகட்டி இருந்தது
சப்த நாடியும்ஒடுங்கிய சடலமாய்வீடு ஆனது
எல்லோர் முகத்திலும்இருள்ஆட்சி ...
Full story
- Friday, May 18, 2012, 5:33
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
காற்றின் மூன்று போக்குமே
எனக்கும் பிடிக்கும்உன்னைப் போலவேகாற்று இலையை அசைப்பதுஇலையோடு கிளையைஇலையும் கிளையுமான மரத்தை.என்னிடம் காற்று பாடும் ஸ்தாயிகளைநீ கவனித்திருப்பது போலவேநானும் கவனித்திருக்கிறேன்நீ ஈரக் கூந்தலை அடித்து ஆற்றும்போதுவீதியில் கை வீசி நடக்கும்போது புடவை அசைகையில்உன் உணர்ச்சியின் ஏற்றத் தாழ்வுகளில்மார்பு விம்மித் தாழும் சுவாசத்தில்எல்லா ஸ்தாயிகளையும் நான் ரசித்திருக்கிறேன்காற்று நம் இணைப்புப் பாலம்
படத்திற்கு நன்றி
http://aoao2.deviantart.com/art/A-gust-of-wind-199334285 ...
Full story
- Friday, May 18, 2012, 5:00
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
- 6 views
ஷைலஜா
கர்நாடக இசையில் மூவேந்தர்களாக வழங்கப்படுபவர்கள், தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷதர், ஷ்யாமா சாஸ்த்ரி. இந்த மூவரும் பிறப்பதற்கு முன்பே, பல கீர்த்தனைகளைப் பாடி, இந்த மூவருக்கே முன்னோடிகளாய் பலர் இருந்திருக்கிறார்கள். அவர்களுள், 'தமிழ் மூவர்' என்று முத்துத்தாண்டவர், அருணாசலக் கவியராயர், மாரிமுத்தாப் பிள்ளை ஆகியோரைச் சொல்லுவார்கள்.
தியாகராஜர், தீக்ஷதர், ஷ்யாமா சாஸ்த்ரி, மூவரும் அவதரித்த புண்ணிய பூமி திருவாரூர். மூவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. மூவரும் அவர்கள் வாழ்வின் ...
Full story
- Friday, May 18, 2012, 4:30
- Featured, இலக்கியம், பத்திகள்
- 8 views
சக்தி சக்திதாசன்
முந்தைய மடலைப் படிக்க
அன்பினியவர்களே !
இதோ ஆறாவது மடலுடன் இதயத்தில் எழும் விடையற்ற வினாக்களுடன் உங்களைச் சந்திக்கிறேன். என்ன இது? வினாக்கள் என்கிறான், விடைகள் என்கிறான், புரியவில்லையே! என்று எண்ணுவது தெரிகிறது.
நாம் பல செய்திகளைப் பத்திரிகையில் பார்க்கிறோம், தொலைக்காட்சியில் ரசிக்கிறோம், ஊடகங்களின் மூலம் உள்வாங்கிக் கொள்கிறோம். ஆனால் அவற்றின் ...
Full story
- Friday, May 18, 2012, 4:00
- Featured, பத்திகள், பொது
- 1 views
ஒவ்வொருவரும் திருமணம் முடிந்ததும் முதலில் டிவி வாங்குவார்கள். சிலர் பிரிட்ஜ் வாங்குவார்கள். நண்பர் அய்யாசாமி திருமணத்துக்கு பின் முதலில் வாங்கியது என்ன தெரியுமா ? வாஷிங் மெஷின் தான் !
இது ஏன் என அவரிடம் கேட்டபோது " எல்லா வேலைகளை விட துணி துவைக்க ரொம்ப சிரமம் ஆயிருக்கு; அதிலும் இந்த புடவையை துவைக்குறது இருக்கு பாருங்க அது ரொம்ப கஷ்டம் " என்றார்.
நன்கு விசாரித்து ஐ.எப்.பி ...
Full story
- Wednesday, May 16, 2012, 17:51
- செய்திகள், பொது
- 0 views
சீராசை சேதுபாலா
விருதுகள், பொற்கிழிகள் வழங்கப்பட்டது, திருவுருவப் படங்கள் திறக்கப்பட்டது குறித்து தொகுக்கப்பட்ட தகவல்கள்
மறைந்தும் மறையாத கலை மேதைகளின் திருவுருவப் படங்கள் பட்டியல்கள்
* விழாக்களில் மன்றம் 3
* பேராசிரியர் பம்மல் சம்பந்தனார் நூற்றாண்டு நினைவு நாளன்று திறந்து வைக்கபெற்றுள்ள திருவுருவப் படங்கள் 11
* 1972-1973 முதல் 1998 முடிய கலைமாமணி விருது வழங்கும் விழாக்களில் திறந்து வைக்கப் பெற்றுள்ள திருவுருவப் படங்கள் 242 -------- 256 ...
Full story
- Wednesday, May 16, 2012, 9:05
- Featured, இலக்கியம், பத்திகள்
- 6 views
இன்னம்பூரான்
நான் இந்த இழையை ஒரு பாடாக தணித்து அணைத்து விட்டேன், யாருக்கும் விழிப்புணர்ச்சி ஏற்பட்டதாக அறிகுறிகள் இல்லாததால். ஆனால், தற்குறிகள் நாடாளத்தொடங்கினால், இறைவன் கூட ஓடி ஒளிவான். இன்றைய தணிக்கைத் தகவல் நம்மை தடுமாற வைக்கிறது. சில அரசியலார் தகிடுதத்தம் செய்வதும், சில உயர் அதிகாரிகள் மட்டமான தகாத செயல்களில் ஈடுபடுவதும் அன்றாட செய்தி. விஞ்ஞானிகளும் அஞ்ஞானிகளாக மாறி, ஆடிட்டர் ஜெனெரல் சொன்ன மாதிரி, ‘அரசு ...
Full story
- Wednesday, May 16, 2012, 7:49
- இலக்கியம், கட்டுரைகள்
- 6 views
அண்ணாகண்ணன்
சிந்தனை, செயல், முன்னேற்றம் என்ற மையக் கருவுடன் 2010 மே 16 அன்று தொடங்கிய வல்லமை மின்னிதழ், வெற்றிகரமாக மூன்றாம் ஆண்டில் நுழைந்துள்ளது. வாசகர்கள், படைப்பாளர்கள், செய்தியாளர்கள்... எனப் பலரின் அமோக ஆதரவுடன் முத்திரை பதித்து வருகிறது.
திருமதி பவளசங்கரி திருநாவுக்கரசு, நிர்வாக ஆசிரியராகப் பொறுப்பு ஏற்றதிலிருந்து வல்லமை புதிய துடிப்புடன் எழுச்சி பெற்று வருகிறது. சாந்தி மாரியப்பன், கேப்டன் கணேஷ், தி.சின்னராஜ் உள்ளிட்ட ஆசிரியர் ...
Full story
- Wednesday, May 16, 2012, 6:43
- இலக்கியம், கட்டுரைகள்
- 4 views
வல்லமை மின்னிதழின் மூன்றாம் ஆண்டுத் தொடக்கத்தை முன்னிட்டு, கட்டுரைப் போட்டி ஒன்றை அறிவிக்கிறோம். அது தொடர்பான விவரங்கள் இங்கே:
தலைப்பு: இணையத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துவது எப்படி?
பக்க அளவு: இல்லை
கால அளவு: 2012 மே 16 முதல் ஜூன் 16க்குள் அனுப்ப வேண்டும்.
விதிகள்:
கட்டுரைகள் எளிய தமிழில் அமைய வேண்டும். தக்க சான்றுகள், சுட்டிகள், படங்கள் ஆகியவற்றை இணைக்கலாம்.
போட்டிக்கு வரும் படைப்புகள், வல்லமை ...
Full story
- Wednesday, May 16, 2012, 6:16
- இலக்கியம், கட்டுரைகள்
- 3 views
நிறுவனர்:
அண்ணாகண்ணன்
நிர்வாக ஆசிரியர்:
பவளசங்கரி திருநாவுக்கரசு
துணை ஆசிரியர்:
அமைதிச் சாரல் (சாந்தி மாரியப்பன்)
ஆசிரியர் குழு:
காயத்ரி பாலசுப்ரமணியன்தி.ந. இளங்கோவன் கேப்டன் கணேஷ்மதுமிதாதி. சின்னராஜ்
ஆலோசகர் குழு:
இன்னம்பூரான்மறவன்புலவு க. சச்சிதானந்தன்விஜய திருவேங்கடம்ஸ்ரீரங்கம் மோகனரங்கன்விசாகப்பட்டினம் வெ. திவாகர்
சட்ட ஆலோசகர்
முனைவர் நாகபூஷணம்
தொழில்நுட்ப ஆலோசகர்:
செல்வ முரளி
தள மேலாளர்:
காமேஷ்=========================
இதழின் நோக்கமும் செல்நெறிகளும்
உலகளாவிய தமிழர்களின் தேவைகளை முழுமையாக நிறைவுசெய்து, அவர்களின் சிந்தனைகளைக் கூர்மைப்படுத்துவது, தமிழ்த் தரவுகள் அனைத்தையும் கூடிய வரை திரட்டிச் சேமிப்பது ஆகியவை, வல்லமையின் முதன்மை நோக்கங்கள். நடுநிலை ஆய்வு, கருத்துச் சுதந்திரத்தைக் காத்தல், அறிவியல்பூர்வமான அணுகுமுறை, நுட்பியல் பயன்பாடு, ...
Full story