மற்றுமோர் அவதாரம்

சாந்தி மாரியப்பன்

தொடர்ந்த வாசிப்பினால்

ஓரம் கிழிந்த புத்தகங்கள்

மேலும் கிழிக்கப்பட்டன

பொட்டலம் கட்டப்படவென..

இதயத்தின் அருகிலோ அல்லது

ஏதோ ஓர் மூலையிலோ,

மாறுபடவும் கூடும்,

அதன் முக்கியத்துவமும் இருப்பிடமும்

உள்ளடக்கத்தினைப் பொறுத்து..

கடலையோ வைரமோ

அல்லது

சுமக்க நேரிட்ட எண்ணக் குவியல்களோ;

ஏதோவொன்றின்

உபயோகம் தீர்ந்த பின்

கசக்கி வீசப்பட்டாலும்

மேலும்

உபயோகப் படவெனக் காத்திருக்கின்றன,

கோணியும் பசியும்

சுமந்தலையும்

இருகால் மற்றும் நாற்கால் உயிர்களுக்காய்,

குப்பையென அவதாரமெடுத்து..

 

படத்திற்கு நன்றி

சாந்தி மாரியப்பன்

எழுதவும், அதை விட வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறார்.

திண்ணை, வார்ப்பு, கீற்று,வல்லமை ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள் ஆகிய அச்சுப் பத்திரிகைகளிலும் அவருடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன.

Share

2 Comments on “மற்றுமோர் அவதாரம்”

  • செண்பக ஜெகதீசன்
    -Shenbaga Jagatheesan... wrote on 8 November, 2011, 21:52

    கசக்கி வீசப்பட்டாலும், 
    காத்திருக்கும் பயன்பாட்டைக்
    கச்சிதமாய்ச் சொன்ன
    நாஞ்சில்(ஊர்?) சாந்திக்கு
    நல்வாழ்த்துக்கள்…!     
              -செண்பக ஜெகதீசன்…
                 (vsnjag@yahoo.com)

  • சாந்தி மாரியப்பன்
    சாந்தி மாரியப்பன் wrote on 9 November, 2011, 19:04

    கருத்துக்கு நன்றி செண்பக ஜெகதீசன் ..

Write a Comment [மறுமொழி இடவும்]


6 × 2 =


Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.