மற்றுமோர் அவதாரம்
- Tuesday, November 8, 2011, 12:06
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
- 2 comments
சாந்தி மாரியப்பன்
ஓரம் கிழிந்த புத்தகங்கள்
மேலும் கிழிக்கப்பட்டன
பொட்டலம் கட்டப்படவென..
இதயத்தின் அருகிலோ அல்லது
ஏதோ ஓர் மூலையிலோ,
மாறுபடவும் கூடும்,
அதன் முக்கியத்துவமும் இருப்பிடமும்
உள்ளடக்கத்தினைப் பொறுத்து..
கடலையோ வைரமோ
அல்லது
சுமக்க நேரிட்ட எண்ணக் குவியல்களோ;
ஏதோவொன்றின்
உபயோகம் தீர்ந்த பின்
கசக்கி வீசப்பட்டாலும்
உபயோகப் படவெனக் காத்திருக்கின்றன,
கோணியும் பசியும்
சுமந்தலையும்
இருகால் மற்றும் நாற்கால் உயிர்களுக்காய்,
குப்பையென அவதாரமெடுத்து..



கசக்கி வீசப்பட்டாலும்,
காத்திருக்கும் பயன்பாட்டைக்
கச்சிதமாய்ச் சொன்ன
நாஞ்சில்(ஊர்?) சாந்திக்கு
நல்வாழ்த்துக்கள்…!
-செண்பக ஜெகதீசன்…
(vsnjag@yahoo.com)
கருத்துக்கு நன்றி செண்பக ஜெகதீசன் ..