கொலு 2010

குமரி எஸ். நீலகண்டன்
Kumari_S_Neelakandan
கொலுவில் இந்தத் தடவை
பாரதியாரின் அருகில்
காந்தி இருந்தார்.

அவர்களைச் சுற்றிலும்
ஐ.டி. கட்டடங்கள்..
மேம்பாலங்கள்.

நாடாளுமன்றம் உட்பட…
இன்றைய இந்திய
நகரமும்

அதற்குப் போட்டியாய்
நகர மிதப்பில்
கிராமத்துக் காட்சியும்…

பிளாஸ்டிக் பூக்களோடு
பிளாஸ்டிக் மரங்களும்…

நிலா மின்வெப்பத்தில்
தகித்துக்கொண்டிருக்கிறது..

காந்தி மௌன
விரதமாகவே இருக்கிறார்.

காந்தியின் அருகே
ஒரு ஐபாட்..

பாரதியாரின் கண்களில்
அக்னிக் குழம்பாக
ஏதோ ஒரு கொந்தளிப்பு

கவிதை மின்னலாக
வெட்டிக்கொண்டிருக்கிறது.

இருவரும் பூஜை
எடுக்கிற நாளில்
பேசிக்கொள்வார்களென
நினைக்கிறேன்.

குமரி எஸ். நீலகண்டன்

குமரி எஸ். நீலகண்டன்

எழுத்தாளர்

Share

Write a Comment [மறுமொழி இடவும்]


1 × = 6


Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.