கூண்டுக்கிளியுடன்

 செண்பக ஜெகதீசன் 

சுயத்தை மறந்து

சுதந்திரத்தைத் துறந்து

கிளி

மனிதனின் மாய வலையில்

மாட்டிக் கொண்டது

கூண்டுக்கிளியாய்;

கூப்பிட்ட குரலுக்கு

ஓடி வருவதாய்..

தரும் ஓரிரண்டு

தானியமணிகளுக்காய்..

கிளி ஜோசியமாம்…!

 

அந்தக் கிளியுடன்,

அதை

அடிமையாக்கியவன்,

வைத்துப் பிழைப்பவன்,

வந்து

வருங்காலம் கேட்பவன்..

இந்த நால்வருக்கும்

இன்னும் வரவில்லையே

நல்ல காலம்…!

 

படத்திற்கு நன்றி: http://maduraidiary.blogspot.com/2007/10/parrot-astrology-is-expensive.html

செண்பக ஜெகதீசன்

செண்பக ஜெகதீசன்

எஸ்.ஜெகதீசப் பெருமாள்,எம்.ஏ.,பி.எல்.

இதுவரை: அரசு அதிகாரி (நிர்வாக அதிகாரி,நெல்லையப்பர் திருக்கோவில்).

இப்போது: மேலாளர்,காசித்திருமடம், சுசீந்திரம்.

ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை,இலக்கியம்), எழுத்துப் பணிகள்…

வலைதளங்கள்: வார்ப்பு(191), திண்ணை, நந்தலாலா, வல்லமை…

தொடர்புக்கு: 9443980220.

Share

Write a Comment [மறுமொழி இடவும்]


6 + 3 =


Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.