கடவுளின் அடையாளங்கள்

குமரி எஸ்.நீலகண்டன்

கடவுளின்-அடையாளங்கள்
கடவுள் யார்
எப்படிப் பட்டவர் எனத்
தெரியாமல்
கடவுளோடு கடவுளாய்
மக்கள்.

அவனவன் இயல்புடன்
அவனவன் கடவுள்.

அவனுக்குக் கடவுள்
கோபக்காரன்.
அவனுக்கு கடவுள்
வஞ்சம் நிறைந்தவன்.

ஒருவனுக்கோ கடவுள்
அமைதி ஸ்வரூபி.
இன்னொருவனுக்கு
கடவுள்
இதயமில்லாதவன்.

அவனுக்குக் கடவுள்
ஆள வந்தான்.
இன்னொருவனுக்கு
கடவுள் கருணைப் பிடாரன்.
அவனுக்குக் கடவுள்
காணிக்கை கொடைக்குக்
கருணை காட்டுபவன்.

எங்கும் கடவுளாய்
கடவுள் நிறைந்த உலகம்.
எங்கெங்கினாதபடி எங்கும்
இறைவன் இருக்க
கடவுள் யார்
எப்படிப்பட்டவர் எனத்
தெரியாமல்
கடவுளோடு கடவுளாய்
மக்கள்.

குமரி எஸ். நீலகண்டன்

குமரி எஸ். நீலகண்டன்

எழுத்தாளர்

Share

Write a Comment [மறுமொழி இடவும்]


2 × = 16


Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.